போராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..!
நாம் இன்றைய எமது வாழ்க்கையினை நகர்த்துவதற்கு ஒவ்வொரு நிமிடமும் போராடியே ஆகவேண்டும் என்பது எமது வாழ்க்கையின் நியதியாக மாற்றப்பட்டுவிட்டது. வாய் திறந்து பேசாமல், நீதி கேட்டுப் போராடாமல் வாழவே முடியாது என்ற நிலமை உலகிலே நிலை கொண்டுவிட்டது. எனக்கு என்ன, நான் எனது பாட்டில் அமைதியா இருந்துவிடுவோம் என் இருப்போமாயின், பக்கத்து வீட்டுக்காரனின் அதே பிரச்சனை நாளை எனது வீட்டின் கதவைத் தட்டும். வேலை, வதிவிடம், கல்வி, மருத்துவம், பொருளாதாரம்…, என நாளாந்த வாழ்க்கையினை கொண்டு செலுத்த நாம் சந்திக்கும் கஷ்ரங்களும் துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இது விதியல்ல.., கடவுளின் தண்டனையுமல்ல.
காந்தீயம் - டேவிட் ஜயா நினைவு பேருரை: முருகேசு பாக்கியநாதன்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 23 November 2015
- Hits: 5318
அமரர் டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அமரர் சொலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள்
(எஸ்.ஏ.டேவிட்) டேவிட் ஐயா அவர்கள்.
இவர் ஒரு அமைதியான காந்தியவாதி, மென் சொல் பேசுபவர், மற்றையோர்களைக் குறைபேசத் தெரியாதவர். எந்த வேலையைப் பொறுப்பெடுத்தாலும் அதனைச் செவ்வனே நிறைவேற்றி விடுவார். 1973 இல் இருந்து 1982 வரை அவருடன் நெருக்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நினைவுகளை மீட்க வேண்டுமேயாயிருந்தால் டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்களைப் பற்றிய நினைவுகளை மீட்காமல் இவரது பொது வாழ்வு பற்றிப் பேச முடியாது.
ஒரு விலையில் இரட்டைக் குடியுரிமை: பந்துல கொத்தலாவல
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 22 November 2015
- Hits: 5240
இன்றைய பத்திரிகைகளில் வந்த செய்தியின்படி, சுமார் 2,000 அளவிலான வெளிநாட்டில் வாழும் ஸ்ரீலங்காவாசிகளுக்கு இரட்டைக் குடியுரிமை சான்றிதழ்கள் 17 நவம்பர் 2015ல் அலரிமாளிகையில் நடந்த ஒரு வைபவத்தில் வைத்து அதி மேன்மைதங்கிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பெருமைகொள்ளும் பவித்திரமும் ஆடம்பரமுமான இந்த விழாவில் பிரதமர் உட்பட உள்ளுர் பிரமுகர்கள் பலரைக் கொண்ட ஒரு நட்சத்திரக்கூட்டத்தினர் வெளிப்படையாக கலந்து சிறப்பித்தார்கள். இருந்தபோதிலும் இந்த குறிப்பிட்ட காட்சியில் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாமே மக்களின் எதிரிக்கட்சிகள் என்பது தான் காலங்காலமான வரலாறு
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 22 November 2015
- Hits: 3058
இலங்கை அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இரு வேறு அரசியல் போக்குகளை கொண்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி பெரு முதலாளிகளை, நில உடமையாளர்களை தனது அடித்தளமாக கொண்டிருக்கிறது. அந்நிய முதலாளிகளிற்கு நாட்டின் வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு அது என்றுமே கதவைத் திறந்து வைத்திருக்கிறது. முதலாளிகள் தடையின்றி வேகமாக கொள்ளைலாபம் அடிப்பதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கையின் அரசியல் அமைப்பையே மாற்றினார். பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு அரசியல் அமைப்பை மாற்றினார்.
டேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம்: பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 19 November 2015
- Hits: 5359
"காந்தீயம்" ஸ்தாபனத்தின் தலைவர் S.A. டேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம் கார்த்திகை மாதம் 15, 2015 கனடாவில் இடம் பெற்ற போது பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை
"காந்தீயம்" பதிவு செய்யப்பட்ட ஸ்தாபனமாக 1976 இல் ஆரம்பித்த இவ் அமைப்பு 1974 இல் தொடங்கியது பற்றி இந்நிகழ்வுக்கு தலைமை ஏற்றிருக்கும்; பாக்கியநாதன் அவர் விரிவாக எடுத்துக் கூறுவார் என நம்புகிறேன். நான் காந்தீயத்தில் பணியாற்றிய அப்பொழுது தனாதிகாரியாக இருந்த நல்லதம்பி ஜயா மூலம் சென்றேன். டேவிட் ஜயாவை 1979 அல் இருந்து அவர் இறக்கும் வரை அறிவேன். டேவிட் ஜயாவின் அறிவாற்றலுக்கு அவரே நிகர். டேவிட் ஜயா தலைவராகவும், Dr.இராஜசுந்தரம் செயலாளராகவும், தனாதிகாரியாக நல்லதம்பி ஜயாவும் காந்தீயம் அமைப்பில் பணியாற்றினார்கள். இவர்களுடன் சந்ததியார் தொண்டர்களை இணைத்து புணரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் தொண்டர்களுடன் தொண்டனாக அவரும் பணியாற்றினார்.
கைதிகளின் விடுதலையின் பெயரில் கூட்டமைப்புக்கு எதிரான ஹர்த்தால்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 November 2015
- Hits: 2897
அண்மையில் வடகிழக்கில் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, ஹர்த்தால் நடந்தப்பட்டது. இந்தக் ஹர்த்தாலானது அரசுக்கு எதிராகப் போராடக்கூடிய புதிய மனநிலையை உருவாக்கியதைத் தாண்டி - கைதிகள் மீதான உண்மையான அக்கறையுடனோ, அந்த உணர்வுடனோ முன்னெடுக்கப்படவில்லை. மாறாக கூட்டமைப்பில் தமக்கான ஒரு இடத்தைக் கோரி நிற்கின்ற தரப்புகளே - கூட்டமைப்புக்கு எதிரான ஹர்த்தாலை கைதிகளின் பெயரில் நடத்தினர். இந்தப் பின்னணியில்
குமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்!
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிய முன்னணி உறுப்பினரான குமார் குணரத்தினத்தை 2012 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் திகதி கைது செய்வதற்கு; இன்றைய ஜே.வி.பி தலைவரான அநுரா குமார திஸநாயக்காவிற்கு அவசியம் இருந்ததாகவும், அதற்க்காக குமாரின் நடமாட்டங்கள் மற்றும் தங்குமிடங்கள் குறித்து தன்னிடம் தகவல்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
குமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 19
- Created: 17 November 2015
- Hits: 840
நாம், கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பலவகைப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகமாக உள்ளோம். காணாமலாக்கல், கடத்திச் செல்லல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்தல், வெள்ளை வேன் கோஷ்டியினால் கடத்தப்படுதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலைநிறுத்தங்களை அடக்குமுறை செய்வதற்கு உத்தரவிடுதல், நாட்டின் சிவில் பிரச்சினைகளில் இராணுவம் தலையிடுதல், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் மற்றும் வெடிவைத்தல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் மலிந்திருந்தன.
இன்று இப்படியென்றால், நாளை?
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 16 November 2015
- Hits: 719
மதிப்புக்குரிய மத குருமார்களே,
அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே,
தோழரே, தோழியரே.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக செயற்படும் இந்த இடைவிடாத சத்தியாக்கிரக எதிர்ப்பின் நோக்கம், தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதுதான். தோழர் குமார் குணரத்தினம் கடந்த 04ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அது மாத்திரமல்ல, அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஏழைக்கு மரணதண்டனை, காமுகனிற்கு அரசபதவி, இது தான் மதச்சட்டம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 16 November 2015
- Hits: 3180
ரிசானா என்ற ஏழை இஸ்லாமிய மதச்சட்டங்களின் படி கொலை செய்யப்பட்டாள். தமிழைத் தவிர வேறுமொழி தெரியாத அவளிற்கு மொழிபெயர்ப்பாளர் சவுதி அரசினால் கொடுக்கப்படவில்லை. அவளிற்காக வாதாட வழக்கறிஞர் வைக்கப்படவில்லை. பதினேழு வயது சிறுமி அவள் என்று கதறியதையும் அவர்கள் தங்கள் காதில் விழுத்தவில்லை. அவளின் மரணத்தை அவளின் பெற்றோருக்கு சொல்லவேண்டும் என்ற சிறு தார்மீகம் கூட அந்த மதவெறி பிடித்த கும்பலிற்கு இருக்கவில்லை. அவளின் தாய், தந்தையர் ஊடகங்களில் பார்த்துத் தான் தங்கள் சின்னமகள் தங்களை விட்டு போய்விட்டாள் என்பதை அறிந்து கொண்டனர். அவளின் உடலையாவது தங்களிடம் கொடுத்து விடுங்கள் என்ற அந்த ஏழைகளின் கண்ணீர் பாலைவனத்து பாவிகளின் பாறைமனத்தை சிறிது கூடக் கரைக்கவில்லை.