கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் சுதந்திர பெண்கள் அமைப்பின் போராட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: தோழமை அமைப்புகள்
- Created: 25 May 2015
- Hits: 655
இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற பாலியல் வன்முறைகளுக்கு எதிராக இன- மத பேதங்களை கடந்து சகல பெண்களையும், ஆண்களையும் போராட அறைகூவல் விடுத்து இன்று கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் விழிப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.
வித்தியாவைக் குதறியது ஆணாதிக்கம் - மக்களை குதறியது யாழ் மேலாதிக்கம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 May 2015
- Hits: 3159
வன்முறை - சூறையாடல் வித்தியாவை மட்டும் சூறையாடவில்லை, வித்தியாவின் பெயரால் மக்களின் போராட்டத்தையும் - பெண்களின் குரலையும் கூட சூறையாடி இருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் எதை மக்களுக்கு எதிராக அரங்கேற்றியதோ, அதைப் போன்ற ஒன்றையே சிலரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதன் மூலம் சமூகத்தை உறைநிலைக்கு தள்ளி இருக்கின்றது. மீண்டும் பாதுகாப்பு படைகளை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.
பெண்கள் மீதான வன்கொடுமையை எதிர்ப்போம்!
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: தோழமை அமைப்புகள்
- Created: 24 May 2015
- Hits: 955
உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலும், பருத்தித்துறையிலிருந்து தெவுந்தர முனை வரையிலும் பரவலாகிக் கொண்டிருக்கிறது.
வித்தியாவுக்கு நீதி கோரி, நாளை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக போராட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 23 May 2015
- Hits: 3446
வித்தியாவுக்கு நீதி கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக போராட்டம், சுதந்திரப் பெண்கள் அமைப்பினால் (Free Women) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் கோரியும், அனைத்துப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் அணிதிரளுமாறு போராட்ட அறைகூவலை வெளியிட்டுள்ளது சுதந்திரப் பெண்கள் அமைப்பு.
“வெல்வோம் அதற்காக...” புத்தக வெளியீட்டு விழா படங்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 May 2015
- Hits: 3582
நேற்றைய தினம் லண்டன் கரோ பகுதியில் முன்னணி வெளியீட்கத்தின் முதலாவது வெளியீடான தோழர் சீலனின் போராட்ட அனுபவமான “வெல்வோம் அதற்க்காக...” நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. அதன் படங்களை இங்கே காண்கின்றீர்கள்.
ஏமாற்றல் வெற்றி, மக்கள் படுகுழியில்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 13 May 2015
- Hits: 612
ஜனவரி 08ம் திகதிக்குப் பின்னர் புதிய ஜனாதிபதியொருவரும், பிரதமரொருவரும் நியமிக்கப்பட்டு அரசாங்கமும் அமைந்தாயிற்று. இப்போது மைத்திரி, ரணில் மற்றும் சம்பிக போன்றவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சந்திரிகாவும் சேர்ந்து குசினி கபினட்டில் அங்கம் வகிக்கும் கூட்டரசாங்கம் நடக்கிறது. இப்போது 100 நாட்கள் முடிந்துவிட்டன. மக்களின் வயிற்றெரிச்சல் எப்படிப் போனாலும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்தவர்களின் ஆர்ப்பரிப்பானது ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் உருவாக்குவது.
சகோதரி வித்தியாவுக்காக தெற்கில் நிகழவுள்ள போராட்ட கோசங்கள் - மும் மொழியில்
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 22 May 2015
- Hits: 710
சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர-சகோதரிகள், தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். 26 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளும், கோசங்களும்...
நல்லாட்சி ஜனநாயக மேடையில் அரங்கேற்றப்படும் நாடகங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 22 May 2015
- Hits: 6015
நாட்டில் நல்லாட்சி ஜனநாயம் மலர்ந்து சிறியதொரு இடைவெளி ஏற்பட்டு மக்கள் சிறிது மூச்சுவிட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்தத் தொடங்கு முன்னரே குடாநாட்டில் மக்கள் வன்முறைச் சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டார்கள். அதற்கான காரணமாக புங்குடுதீவில் பாடசாலை மாணவி இளைஞர் குழுவினால் பாலியல் வன்முறைக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டமை அமைந்துவிட்டது.
வித்தியாவுக்கு நியாயம் கோரி கொழும்பில் போராட்டம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 22 May 2015
- Hits: 6316
இது வித்தியாவின் படுகொலை தொடர்பாக சகோதரி Shamila Daluwatte எழுதிய கவிதை:
அவர்கள் மன்னம்பேரியை
பாலியல் பலாத்காரம் செய்து
அவளை உயிருடன் புதைத்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.
பின்னர் அவர்கள்
ககவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
மக்களின் போர்க்காயங்களைப் பயன்படுத்தும் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் NGO
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 20 May 2015
- Hits: 1167
வைகாசி 20. 2015. இராணுவமும், கடற்படையும், அதிரடிப்படையும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல வருடங்களுக்குப் பின் புகை மண்டலமாகக் காணப்படுகிறது. இம்முறை இலங்கை அரச படைகளல்ல இப் புகை மண்டலத்துக்குக் காரணம். மனிதக் குரல்கள் எங்கும் ஓலங்களாய்-கூக்குரலாய் ஒலிக்கிறது. ரணில் - மைத்ரி அரசால் அனுப்பப்பட்ட குண்டு வீச்சு விமானங்களல்ல இக்கூக்குரலுக்குக் காரணம். தமிழ் இளையோரும், மாணவர்களுமே இதற்க்குக் காரணம். வீதிகளெங்கும் முடக்கப்பட்டு பழைய ரயர் மற்றும் குப்பை குவிக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. அதன் முன்னால், இளைஞர்கள் கூடி நின்று செல்பி எடுகின்றனர். புலம்பெயர் மற்றும் உள்ளூர் இணைய மீடியா நிருபர்கள் பல பத்துப்பேர் ஒவ்வொருதருக்கும் தேவையான கோணத்தில் "எக்ளுசிவாக" போஸ் கொடுக்கிறார்கள்.