சகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளும், நம்மவர் போராட்டங்களும்...
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 19 May 2015
- Hits: 7027
புங்குடுதீவு பாடசாலை மாணவி சகோதரி வித்தியா சிவலோகநாதன் கொடூரமான முறையில், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வானது ஒட்டு மொத்த தமிழ் சமூதாயத்தையும் நிலை குலைந்த - அதி உச்ச ஆத்திர உணர்வு நிலைக்குள்த் தள்ளியுள்ளது.
புங்குடுதீவு மாணவியின் கொலை - பாலியல் வன்முறையின் பின்னணியில் .....
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 May 2015
- Hits: 5446
குரூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவியின் மரணமும், இந்தக் குற்றப் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்கள், சுற்றுவட்டார அயலவர்களும் - உறவினர்களும் என்பதும், சமூகம் குறித்தான பொதுக் கேள்வியை எழுப்புகின்றது. மனித விரோத குற்றங்களுக்கு தண்டனையை நாம் கோருவதும், அதற்காக போராடுவதுடன் எமது கடமை முடிந்துவிடாது. குற்றங்களுக்கு தண்டனை அவசியமானது தவிர்க்க முடியாது என்பது, குற்றங்கள் தோன்றுவதை தடுப்பதற்குரிய தீர்வாகிவிடாது. சமூகப் பொறுப்பற்ற தனிமனிதர்களின் இந்த குற்றப் பின்னணியைக் குறித்து தெரிந்து கொள்வதன் மூலமே, சமுதாய ரீதியான மாற்றம் குறித்து உண்மையாக நாம் ஈடுபடமுடியும்.
மக்களால் வெளிக்காட்டப்பட்டு வரும் கோபமும் எதிர்ப்பும் நியாயமானவையாகும்: சி.கா. செந்திவேல்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 21 May 2015
- Hits: 1002
நாட்டில் பெண்கள் யுவதிகள், மாணவிகள் சிறுமிகள் என்போர் மீதான பாலியல் வக்கிர செயற்பாடுகளும் சித்திரவதைகளும் வன்புணர்வுக் கொலைகளும் ஏனைய ஒடுக்குமுறைகளும் சமூகக் கொடுமைகளாகத் தொடர்கின்றன. இவற்றில் ஒன்றாக அண்மைய கொடூரச் சம்பவமாக வடபுலத்தின் புங்குடுதீவு வித்தியாலய மாணவி சி.வித்தியா (18) மீதான வன்புணர்வுப்படுகொலை இடம் பெற்றிருக்கின்றது. இவ் ஈனச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கண்டணங்களும் எதிர்ப்புகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்?
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: மக்கள் தொழிலாளர் சங்கம்
- Created: 21 May 2015
- Hits: 709
மலையக மக்களுக்கு காணி உரித்துடனான வீட்டு உரிமையை உறுதிப்படுத்தக் கோரி மக்களின் பங்குபற்றலுடன் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் பரப்புரைகளும் இடம்பெற்றன. சில மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு குரல் கொடுத்தனர். இப்பின்னணியில் மீரியபெத்த அவலம் மலையக மக்களின் ஏற்படுத்திய காணி, தனி வீட்டு உரிமைக்கான எழுச்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரையுமே மலையக மக்களின் வீட்டுரிமை பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேச வைத்தது.
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் குடும்பத்தினருடன் சமவுரிமை இயக்கம் கலந்துரையாடல்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 17 May 2015
- Hits: 990
சமவுரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் பேர்ணான்டோ புள்ளே மற்றும் தோழர் கிருபாகரன் ஆகியோர் நேற்றைய தினம் (16-05-2015) வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து உரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் நோக்கமானது பல வருடங்களாக எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடு தளுவிய பாரிய போராட்டங்களை முன்னெப்பதே.
முள்ளிவாய்க்கால் இரவுகள்.....
ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக
ஒளியில்லாத நிலவு கசிகிறது
முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன
வெள்ளிய மணல் கும்பங்களில்
கால்கள் புதைய நடக்கின்றேன்
ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
- Created: 17 May 2013
- Hits: 2385
இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.
கிழக்கு பிராந்திய சுத்திகரிப்புத் தொழிலாளர் சங்கத் தலைவர் சாந்தன் கண்ணப்பனுடன் நேர்காணல் (ஒலி இணைப்பு)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 16 May 2015
- Hits: 1061
அண்மையில் திருமலையில் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் போராட்டம் ஒன்று இரு நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த போராட்டம் திருமலை நகரசபைக்கு எதிராக நகர சுத்தி தொழிலாளர்கள் மீதான சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களின் இன்றைய கையறு நிலைமைக்கு காரணம் சாதி-சாதி மட்டுமே-சாதியைத் தவிர வேறொன்றுமில்லை!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 19
- Created: 13 May 2015
- Hits: 1426
சாதி இப்ப இல்லை. சாதி ஒழிந்துவிட்டது. இப்ப ஆர் சாதி பாக்கினம். சாதியை சொல்லி சொல்லி பிழைக்கினம். அதனைப் பற்றி ஏன் கதைக்கவேணும். பேசாமல் விட்டாலே அது மறைந்துவிடும். இப்படியாக எங்கள் மத்தியில் உரையாடல்கள் இடம்பெற்று வருகிறது. இதனையொட்டி போட்டிக்குப் போட்டி பேட்டிகளும் இதழ்களில், தளங்களில், ஊடகங்களில் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. அரங்குகளில் கருத்துப் பொறிகள் பறக்கின்றன. சாதி இருக்கு என்போரும், இல்லை என்போரும் வரிந்து கட்டிக்கொண்டு மேடைக்கு மேடை தாவுகிறார்கள். இதுதான் தமிழர்களுக்கு உரித்தான தனிச் சிறப்பு. தமிழர்களின் தனித்துவ அடையாளம்.
சுன்னாகம் நீர் மாசடைந்த பிரச்சினையில் மக்களின் அச்சத்திற்குத் தீர்வு வேண்டும்
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: தோழமை அமைப்புகள்
- Created: 16 May 2015
- Hits: 624
கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியான சுண்ணாகத்திலும், அதைச் சூழ உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்ட பெரும் வாழ்வாதார நெருக்கடியாக நிலத்தடி நீரில் கலக்கவைக்கப்பட்ட கழிவு எண்ணெய் தொடர்பான பிரச்சினை விளங்குகின்றது.