மக்களின் உரிமையும், கடமையும், அரசியல் பலமும்.
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 31 July 2015
- Hits: 1311
இலங்கையின் அடுத்த பொதுத் தேர்தலையொட்டி ஆய்வாளர்கள்-அறிஞர்கள்-வல்லுனர்கள்-விமர்சகர்கள்-சமூக அக்கறையாளர்கள்-மக்கள் நலன் விரும்பிகள் என பலதரப்பட்ட செயற்பாட்டாளர்களிடமிருந்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேவேளை பாரம்பரிய-பரம்பரை-புதிய கட்சிகள் பமைய-புதிய கூட்டமைப்புக்கள் யாவும் தங்கள் வழமையான ஆட்பலம்-அணிவகுப்பு-ஆரவாரங்கள் அடங்கிய விழாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளன. இதேவேளை இவர்கள் யாவரும் எதனைக் காட்டி தங்கள் பொறிக்குள் மக்களை மாட்டி வைக்கலாம் என்கிற ஒரே நோக்கத்துடன் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கியும் விட்டுள்ளனர்.
அன்று குடும்பம் - இன்று கூட்டு, நாடோ குழப்பத்தில்; முறையான மாற்றம் - இடதுசாரிகளின் பலம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 26 July 2015
- Hits: 759
பொதுத்தேர்தல் அண்மிக்கிறது அல்லவா?
இந்த தேர்தலில் நடைபெறப் போவது அடுத்து வரும் 05 வருடங்களில் எங்கள் வாழ்க்கையின் தலைவிதி என்ன என்பதை தீர்மானிக்கப் போகிறது.
அக்காலப்பகுதியினுள் எங்கள் பொருளாதார வாழ்க்கைக்கு நிகழப் போவது என்ன? எங்கள் அரசியல் உரிமைகளுக்கு நடக்கப்போவது என்ன? அதற்காக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் எவை? அந்த தீர்மானங்களுக்கு எங்களையும் இணைத்துக் கொள்வார்களா? இல்லையா? அவைகளுக்கு எதிராக, அவற்றை மாற்றியமைக்கும் உரிமை எங்களுக்கு கிடைக்குமா? இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப் போவது பொது தேர்தலில் வெற்றி பெறும் தரப்பினரேயாகும். ஆதனால் வாக்கு கேட்கும் யாவரும் இந்த பிரச்சனைக்கான தங்களின் எண்ணப்பாடுகளை தெரிவித்தில்லை.
கறுப்பு ஜூலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 July 2013
- Hits: 3680
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 32 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
கிரேக்க தேசமும் முதலாளித்துவத்தின் அழுத்தமும்...!
கிரேக்க நாட்டின் நிதி நெருக்கடியினை தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் 60 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்க உடன்பட்டுள்ளது. கிரேக்க பராளுமன்றத்தில் 251 வாக்குகளால் ஒப்புதல் பெறப்பட்ட இந்த தீர்வுத் திட்டம் கிரேக்க நாட்டின் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் எதிராகவே எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் அலெக்சியஸ் சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்திருந்தது.
பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 19 July 2015
- Hits: 15387
தங்கமில்லாமல் நாமில்லை என்று தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் வரிசையாக நகைக்கடைகளை திறக்கிறார்கள். புத்தகக்கடைகள், பதிப்பகங்கள் எத்தனை இருக்கின்றது என்று மண்டை கழண்ட கேள்விகள் கேட்கக் கூடாது. இமயமலையின் பனிச்சிறுத்தைகள் போல மிக அரிதாகவே புத்தகங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படும். சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சி, கரவெட்டி, தச்சன்தோப்பு பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள்.
கொடிமரமே மாயமாய் மறைந்த மர்மம் என்ன மருதடி பிள்ளையானே!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 19 April 2015
- Hits: 6843
கொடிமரம் என்ன உயரம் இருக்கும்?. கோயில் கொடிமரத்தின் உயரத்தைக் கேட்கிறேன். குறைந்தது இருபது அடி இருக்கும். யாழ்ப்பாணத்து மானிப்பாய் மருதடிப்பதியில் இரு மரபும் துய்ய வந்த சைவ வேளாள பெருங்குடிகளின் கண் கண்ட தெய்வமான பிள்ளையாரின் கொடிமரம் காணாமல் போய்விட்டது. மருதடி பிள்ளையார் கோயிலில் சித்திரை மாதம் கொடியேறி சித்திரை புதுவருட தினத்தன்று தேர்த்திருவிழா நடக்கும். மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலில் பல வருடங்களாக கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் கட்டிட வேலை முடிந்து திருவிழாக்கள் தொடங்க இருந்த நேரத்தில் வேலைகளிற்காக கழட்டி வைக்கப்பட்ட இருபது அடி உயர கொடிமரம் காணாமல் போய் விட்டது.
முன்னாள் போராளிகளை அரசியற் பகடையாக்கும் அரசியல்வாதிகள்..!
தேர்தல் வரும் போதெல்லாம் மக்களை அணுகுவதற்கு அரசியல்வாதிகள் புதிய புதிய யுக்திகளை கையாள்வது அவர்களது தந்துரோபயமான அணுகு முறையாகும். இன்று முன்னாள் போராளிகளை அரசியற் களத்தில் பகடைகளாக்கி தங்கள் அரசியல் வாழ்க்கையினை, அரசியற் பிழைப்பினை நகர்த்திக் கொள்ள பல அரசியற் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.
கல்வி விற்பனை பண்டமல்ல!
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: தோழமை அமைப்புகள்
- Created: 15 July 2015
- Hits: 901
குறிப்பு: பொருளாதார அபிவிருத்தி அடையாத வறிய நாடுகள் உலக நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனையும் அதற்கான கந்து வட்டியையும் கட்ட முடியாது திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளிடம் கடனை திரும்ப பெறும் முகமாக பல பரிந்துரைகளை அமுலாக்கும்படி நிதி நிறுவனங்கள் நெருக்குதலை கொடுத்த வண்ணமுள்ளன. அதாவது சமுக நலத் திட்டங்களிற்கான உதவியை குறைத்தல், ஓய்வூதிய வயதை அதிகரித்தல், சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தல் என பலவகை நெருக்குதல்கள். உலக நிதி நிறுவனங்களின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் இலவச கல்வியினை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனை மக்களிற்கு விழிப்பூட்டும் முகமாக ஜனாதிபதி அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு நாடு முழுவதும் மக்களிடம் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
துரோகம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாறாத கொள்கை!!!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 13 July 2015
- Hits: 1354
தமிழ்நிலம் எங்கும் இலங்கை அரசுகளால் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. குளங்களில், ஏரிகளில் எமது மக்களின் குருதி உறைந்து போயிருக்கிறது. கூதல் காற்றில் இலைகள் உதிர்ந்து விழுவது போல எமது வாழ்வு வீழ்ந்து கிடக்கிறது. இத்தனைக்கும் காரணமான இலங்கையின் இனவெறி அரசுகளுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூடிக் குலாவும்.
மகரகமவில் முன்னிலை சோசலிச கட்சியின் தேர்தல் பிரச்சாரம் கூட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 11 July 2015
- Hits: 770
இன்று ஜீலை 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மகரகமவில் முன்னிலை சோசலிச கட்சி, பொதுத் தேர்தல் 2015 இன் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை தொடக்கி வைத்தது. இடதுசாரிய பலம் என்பது உண்மையான மாற்றத்திற்க்கான ஒரே மார்க்கம் என்பதனை மக்களிடம் எடுத்துச் செல்லுதலே, இத்தேர்தலில் கட்சியின் முக்கிய குறிக்கோள் என பிரச்சார செயலாளர் திரு புகுபுடு ஜெயக் கொட அறிவித்துள்ளார்.