Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

கார்ல் மாக்சை நினைவு பேருரை

கார்ல் மாக்ஸ் சிந்திக்க நிறுத்தி 14.03.2014வுடன் 131 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கார்ல் மாக்சை நினைவு பேருரையை இலங்கை கொம்யூனிஸட் ஐக்கிய கேந்திரம் 15.03.2014ம் திகதி கொழும்பில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் நடாத்தியது. 'ஏகாதிபத்தியத்தின் நவ-கொலனித்துவ, நவ-தாராளவாத தாக்குதலுக்கு எதிராக இலங்கை மக்களின் பணிகள்' எனும் தலைப்பில் கேந்திரத்தின் இணை இணைப்பாளர் இ.தம்பையா நினைவு பேருரையை நிகழ்த்தினார். நிகழ்விற்கு கேந்திரத்தின் இணை இணைப்பாளர் டிபில்யூ.வீ. சோமரத்ன தலைமை தாங்கினார்.