பூநூல் போட்ட பிராமணர்கள் எல்லாம் குருக்களுமல்ல! கையெழுத்திட்ட பிரமுகர்கள் எல்லாம் சிவில் சமூகமுமல்ல!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 26 January 2012
- Hits: 5452
ஏதோ 71-பேர் கையெழுத்திட்டால் அது சிவில் சமூகமாம். இதற்கு விழுந்தடித்து (மகிந்தக் குழலூதிகள்) ஏகப்பட்ட விளம்பரங்கள். இச்சிவில் சமூகக்காரர்களுக்கு முஸ்லீம் சமூகத்தவர்களின் கையெழுத்தில்லாக் குறையொன்று இருந்தது. இப்போ அதுவும் நிவர்த்தியாகியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக “சிவில் சமூகமென்ற” 71-பேருக்கு கோவில் கட்டாத குறையாக, விக்கிர ஆராதனைகள் நடைபெறுகின்றது! இவர்கள் தமிழ் தேசியப் போராட்டத் திருப்புமுனைச் சக்திகளென வட-கிழக்கில் “புஸ்வாணம்” விடுகின்றார்கள்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 09 November 2010
- Hits: 3852
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 6
இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது?
டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டியமைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை செய்கின்றனர்.
அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 October 2010
- Hits: 2282
அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் ‐ கொமின் தயாசிறி !
இவர்மாத்திரம்தான் மன்னிப்புக் கோரவேண்டுமா?
பிரபாகரனை 300-மீற்றருக்குள் வரவைத்து சாகடித்தவர்கள், தமிழ்மக்கள் விடுதலையை குத்தகை எடுத்தவர்கள், கொடுத்தவர்கள், இவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டுள்ளார்களோ?
நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்இ அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 4
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 October 2010
- Hits: 4079
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 4
யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி
யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப்பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக சிதைக்கப்பட்டது. அதற்குமுன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்ககட்சி என்பது மறுக்கப்பட்டது. “பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகிவிட்டது” என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டத்தை அழுல்படுத்தினர். மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கம்யூனிச கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க முகத்தை மறைத்தனர்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 3
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 October 2010
- Hits: 4157
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 3
யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும்
யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளைத்தபோது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதாரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அவதூற்றிலும், ஸ்டாலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 28 September 2010
- Hits: 4128
நண்பர்களே
தோழர்களே
தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது.