“ஓட்டை-ஒடிசல-அடியு(பு)ண்ட சட்டி-பானைகள் உள்ளதே மகிந்தாவின் வரவு-செலவுத் திட்டம்!?”
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3469
வடக்கின் வசந்தத்திற்கு, கிழக்கின் வடிவெள்ளிகளுக்கு….கோமணம் கூட கொடுபடவில்லை!
நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் பாடசாலைக்கு செல்லும்போது, வீதி வியாபாரிகள் தேங்காய், மாங்காய், பட்டாணிச் சுண்டல், ஓட்டை-ஒடிசல் அடியுண்ட-அடிபுண்ட சட்டி பானைகள் இருக்கா என்ற ஓங்கார ஒலிகொண்ட கூவியழைப்புடன் வியாபாரம் செய்வார்கள்! இந்த “றேஞ்ச்”சில் தான் 2012-ற்கான வரவு-செலலுத் திட்டத்தை வாசித்துள்ளார் மகிந்தர்!
இவரின் வரவு-செலவை எப்படிப் (கூட்டி, கழித்து, பெருக்கி, பிரித்துப்) பார்த்தாலும் எஞ்சி-மிஞ்சி நிற்பது வெறும் சீரோ(0)தான்! இது தான் நாட்டுமக்களிற்கான எதிர்காலப் பயன்பாடும்!
அம்பேத்கார் அடக்கி-ஓடுக்கப்பட்ட தலித்மக்களின் விடுதலைப்போராளி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3792
அம்பேத்காரின் 120-வது ஆண்டு நினைவுதினம்
வாழ்க்கைக் குறிப்பு
அம்பேத்கார் அவர்கள் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் உள்ள “மோ” என்ற இடத்தில் 1891-ம் ஆண்டு ஏப்பிரல் 14-ம் திகதி பிறந்தார். அம்பேத்கார் பிறந்த போது இவருக்கு தாய் தந்தையர் சூட்டிய பெயர் பீம்ராவ் ராம்ஜி. அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மகர்ப் பிரிவில் தோன்றியவர். இவர் தனது 5-வது வயதில் தம் ஊரில் உள்ள மராத்தியப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார்.
முல்லைப் பெரியாறு சொல்லும் செய்திகள் என்ன?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3311
மத்திய அரசு “மதிப்பற்ற பண்டமாகியுள்ளது”!
கேரள-பாராளுமன்ற இடதுசாரிகள் பிரதேச இனவாதத்திற்குள் மூழ்கியுள்ளனர்!
ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம். இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம். என்றொரு பழமொழியுண்டு. இந்நிலையில் உள்ளது முல்லைப் பெரியாறு பற்றிய தழிழக–கேரள நிலவரம்!
முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினை நீண்டதோர் வரலாற்றுப் பின்னணி கொண்டதாகும். இதிலுள்ள உண்மைத் தன்மைகள் பிரதேச நோக்கிலாக்கப்பட்டதன் விளைவே இன்றைய இனவாத நோக்கிலான மோதல்களுக்கான அடிப்படைக் காரணி!
சென்ற மாதம் பெய்த கடும் மழையினால் முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அணை உடையப்போகின்றதென்ற விசமப் பீதிப் பிரச்சாரங்கள் கேரளா முழவதும் பரப்பப்பட்டன. இதில் பிற்போக்கு சக்திகளுடன் பாராளுமன்ற இடதுசாரிகளும் சேர்ந்து!
இனவெறி வசந்தத்தின் தென்றல் பாரும் தேவியரே கேளும்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3482
எட சாகும்போது கூட டக்கிளஸைக் கேட்டுத்தான் சாகவேண்டும்!?
முன்பு சாதிவெறிக் காவலர்களிடம்! இப்போ இனவெறிக் காவலர்களிடம்!
கீரிமலையில் மரணமடைந்த ஒருவரின் சடலத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!.
கீரிமலை பொதுமயானத்தைப் தமது பாவனைக்கு விடுமாறு கோரி இன்று கீரிமலைச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரிமலைப் பிரதேசம் கடந்த பலவருடகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக மாறியிருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே இப்பகுதியில் பொதுமக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும், கீரிமலையின் கடற்கரையோரத்தை அண்டியபிரதேசத்தில் மக்களை மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் கீரிமலை மயானமும் கடற்படையினரின் வசமாகியிருந்தது. இதன் காரணமாக மக்களது பாவனைக்கு குறித்த மயானத்தை கடற்படை வழங்கவில்லை.
புலி-அரசியல்-புலி-எதிர்ப்பு-போராளிகளின் தியாகம்….. .சில குறிப்புகள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3375
அலம்பல்கள் அரசியல் கருத்துக்களாகிவிடாது! சரியான புரிதலையும் எட்டாது!
இலங்கை அரசியலில் காலத்திற்கு காலம் ஏதாவதொன்று மலிந்த (“சீசன்”) தாகத்தான் இருக்கும். இதில் இன்றைய மலிவரசியல் புலியெதிர்ப்பாகும். இது தேசிய-சர்வதேசியத்தின் பெரிய-சிறிய அரசியல் கடைகள் முதல், நடைபாதை வியாபாரம் வரை வியாபித்துள்ளது. இவ்விற்பனைக்கு இணையதளங்களில்-முகநூல்களிலும் விளம்பரங்கள்!
கடந்த ஓர் பத்தாண்டுகளுக்கு முன் தனிநபர் முதல் இந்த பெரிய-சிறிய-சில்லறை அரசியல் வியாபரிகளுக்கெல்லாம் இச்சொல்லை (புலியெதிர்ப்பை) உச்சாடனம் செய்யவே பயம்!
குற்றவாளிகளுக்காக குற்றவாளிகளினால் கற்றறியப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3338
உலகில் ஆணைக்குழுக்களுக்கு பஞ்சமில்லா நாடு நம்நாடுதான்! நாளை மகிந்தாவின் மலசலகூடத்தில் பழுதேற்பட்டாலும் அதற்கான காரணங்களை கண்டறியக்கூட ஆணைக்குழு அமைப்பார். துப்பரவாளி கண்டிப்பாக குற்றவாளியாகி நீதமன்றத்தில் நிறுத்தப்படுவார்! அந்தளவிற்கு கசடற கற்றறிந்த நிபுணர்களையெல்லாம் மகிந்தா தன் ஆணைக்குழுக்களுக்குள் அரவணைத்திருக்கின்றார்!
இப்பேர்ப்பட்ட “ரொயிலற்” நிபுணர்களைக் கொணடதுதான், மகிந்தாவினால் நியமிக்கப்பட்ட “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்… நல்லிணக்க ஆணைக்குழு”
தெரிவுக்குழுவில் அரசு, கூட்டமைப்புடன் கரம்போட் விளையாட போகின்றதோ?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3363
தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினரை அறைகூவி அழைத்துக் களைத்துவிட்டதாம் அரசு…”கம்யூனிஸ்ட்”குணசேகர
தெரிவுக்குழுவில் அரசு கூட்டமைப்புடன் கரம்போட் விளையாடப்போகின்றதோ?
நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது பொதுவானதொரு பேச்சுமேடை. இதில் எந்தவொரு தரப்பினரும் தமது நிலைப்பாட்டைச் சுதந்திரமாகஅறிவிக்கலாம்.! புலம் பெயர் தமிழர்களின் ஆலோசனைக்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்கின்றார் குணசேகர.
இந்தப் பாவப்பட்டது எங்குதான் அமைச்சராகவுள்ளது. இலங்கையிலா? ரஸ்சியாவிலா? கூட்டமைப்பு உங்கள் தானைத்தலைவனுடன் கதைத்து, பேச்சுவார்த்தையில் “உலக சாதனை”யே படைத்து களைத்து விட்டது.
நாம் என்ன செய்யப்போகின்றோம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3448
நாம் என்ன செய்யப்போகின்றோம்!
எமக்காக மக்களா? மக்களுக்காக நாமா?
உருத்திரகுமார ஈழமோ, லாச்சப்பல் ஈழமோ மக்களுக்கானதல்ல!
இலங்கை அரசியல் எப்போது தனிமனித அரசிலாகியதோ, அன்றிலிருந்து “என்னகாக என் அரசியலுக்காகத்தான் மக்கள்” எனும் நிலை தோற்றுவிக்கப்பட்டது!
இலங்கையில் தனிமனித தேசிய அரசியலின் பிதாமகன் ஜெ.ஆர். ஜெயவர்த்தன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலான இப்பரிணாமத்தில் மைந்தன் மகிந்தாவும் வளர்த்தெடுக்கப்பட்டதில், அவர் அதன் முடிசூடா மன்னராகியுள்ளார்.
இம்மன்னன் தான் இந்நாட்டு அரசனான போது, தமிழ் மக்கள் தன்னாட்டின் “கொத்தடிமை”களாகத்தான் இருந்தார்கள், அவர்களை நாகரிக சமூகமாகவாக்குவதற்கு, இந்நாட்டு தேசிய இன மக்களாக்குவதற்கு, நான் பற்பல முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் என பற்பல பஞ்தந்திரக் கதைகள் சொல்கின்றார். இதை ஆமென்பதற்கும் அக்கம் பக்கத்திலும் சில நவீன அடிமைகள்.
ஆம் சிங்களப் பேரினவாதம் கொத்தடிமை மனப்பாங்கு கொண்டதாலேயே, தமிழர் தாயகத்தை திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கி, அதில் தமிழ்த்தேசிய இனத்தினை அடைத்து வைத்துள்ளது. பறிக்கபட்ட, இல்லாதாக்கப்பட்ட உரிமைகளை தர மறுகின்றது.
நீங்கள் கேட்பதையல்ல, நாம் தருவதைப் பெறுங்கள் என்கின்றது. நீங்கள் “பக்குவப்பாடற்ற நாகரிகமற்ற சமூகமாக உள்ளீர்கள்”. நீங்கள் கேட்பதைத் தந்தால் என்னை சிறையில் கூட அடைத்து விடுவீர்களென காரணம் சொல்கின்றது!
கடந்த காலங்களில் காணாமல்போனவர்களின் சொந்த-பந்த உறவுகள், தங்கள் உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டு, அதற்காக முன்னெடுக்கும் சாத்வீக வழியிலான, ஐனநாயகப் போராட்டங்களை கொடிய கரம் கொண்டு அடக்குகின்றது. அதை தலைமை தாங்கி முன்னெடுக்கும் மனிதவுரிமை ஐனநாயகவாதிகள் கடத்தப்படுகின்றார்கள். மொத்தத்தில் எமது நாட்டின் நடப்பு ருஸ்ய ஜார் மன்னனின் ஆட்சியை நினைவுபடுத்துகின்றன.
இந்நிலை கொண்ட எம்நாட்டின் தமிழ் மக்களின் நாட்டு நடப்பு இப்படியிருக்கின்றது. இந்நடப்பு விளங்காது, புலம்பெயர்வின் எம்மவர்களும், “என் தமிழ் ஈழ அரசியலுக்குள் தான், என் தமிழ் ஈழப் பிரகடனத்துக்குள் தான் தமிழ் மக்கள் வர வேண்டும் என “புலன் பெயர்ந்து” புலம்புகின்றார்கள். வராவிட்டால் நடப்பதே வேறு… எனவும் வெருட்டுகின்றார்கள்.
நம்புங்கள் “லாச்சப்பல் தமிழீழம்” நாளை கிடைக்கும்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3616
நம்புங்கள் “லாச்சப்பல் தமிழீழம்” நாளை கிடைக்கும்!
இவ்வாரப் “பொங்கல்” மலிவு விற்பனைக்கான விளம்பரம்!
நாடுகடந்த தமிழ் ஈழத்தின் “தலைநகராக” இப்போ பாரீஸின் லாச்சப்பல் பரிமாணம் பெற்றுள்ளது. இதற்கூடாக “தமிழ்ஈழம்” இப்போ “இம்போர்ட்-எக்ஸ்போர்ட்” பொருளாகியுள்ளது. அதற்கான துறைமுகமாக லாச்சப்பலை பிரான்ஸ அரசு அங்கீகரித்துள்ளது! பாருங்கள் இதற்கூடாக என்னமோ-என்னமோ எல்லாத்தையும் ஏத்தி-இறக்கி—பினாத்தி நடாத்துகின்ற தமிழ்ஈழ வியாபாரக்கூத்தையும், அதற்கான விளம்பரங்களையும்:
“பாரியதொரு தமிழினப்படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. ‘தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை’ என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது. தேசிய கூட்டமைப்பின் இலக்குத் தவறிய பயணத்திற்கு எதிராக தமிழீழத்தின் மனச்சாட்சிகள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து புலம்பெயர் தேசங்களில் தமிழீழ இலட்சியத்தின் மீது போர் தொடுத்தவர்களும் தற்போது மௌனித்துப் போயுள்ளனர்”………..
“போர்க் களத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் களத்திலும் விடுதலைப் புலிகளே பலத்தோடு உள்ளார்கள் என்பதை சிங்கள தேசமும் ஒப்புக்கொள்கின்றது. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள் என்றஅவலக் குரல்கள் சிங்களத் தலைநகரில் உரத்துக் கேட்கின்றது. தொடர்ந்தும் மிதிபடும் மண்புழுவுக்கும் கொடுக்கு முளைக்கும் என்ற கூர்ப்பியல் நியதியை சிங்கள தேசம் புரிந்து கொள்ள மறுப்பதால்விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியை தனது பருத்த இராணுவத்தால் தடுத்து நிறுத்தும் மனப்பாலுடன் ஆறுதல் கொள்கின்றது”. என இப்படியொரு “பாலைவன அரசியல் ஆய்வுடன்” அநாமதேயக் கண்டுபிடிப்பு.
“எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்துள்ளனர்: ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினர்”
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 January 2012
- Hits: 3482
“முள்ளிவாய்க்காலும் முத்துக்குமாரும் முடிவல்ல…” என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வார்த்தைகள் நிஜமாகி வருகிறது!”
“புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள்”.
இத்தகைய செய்திகளின் தாற்பரியங்கள் எதைத்தான் சுட்டி நிற்கின்றன. வெறும் தமிழ்ஈழ சலசலப்புக்களே ஒழிய, அதற்குள் பணியாரங்கள் இல்லை! காசி ஆனந்தன் தன் இளமை அரசியலில் உணர்ச்சிக் கவிஞராகவும், “போராட்டவீரனாகவும்” டப்பாங்கூத்து அடித்தவர். “தமிழ்த் துரோகிகளுக்கு” வரைவிலக்கணம் கொடுத்தவர். அவர்களுக்கு இயற்கை மரணம் இல்லையென இளைஞர்களுக்கு உசுப்பேத்தியவர். ஓர் கவிஞன் சொன்னதுபோல,