செந்தமிழில் பெண்களைத் திட்டும் பைந்தமிழ் மறவர்கள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 09 January 2016
- Hits: 5030
ஊரிலே வசைச்சொற்களை பேசுகிறவர்களை செந்தமிழில் பேசுகிறான் என்பார்கள். பெரும்பாலும் குடிகாரர்கள் தான் சுயநினைவு இல்லாமல் வசைச் சொற்களைப் பேசுவார்கள். குடித்திருப்பவன் மப்பிலே அப்படித் தான் பேசுவான் என்று ஊர்ச்சனமும் அதைப் பெரிதாக எடுக்காது. ஆனால் இன்றைக்கு அண்ணன் சீமான் தொடக்கம் முகப்புத்தக மத வெறியர்கள், சாதிவெறி பிடித்த மண்டை கழண்ட மடையர்கள், ஆணாதிக்கப் பன்றிகள் வரை சர்வ சாதாரணமாக பாலியல் வசைச்சொற்களை பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அதிலும் பெண்கள் ஒரு கருத்து சொன்னால் இந்த மறவர்களிற்கு வீரம் பொங்கி வழிந்து தூசணத்தில் மறுமொழி சொல்கிறார்கள்.
அரசின், அரசியல் கைதிகளின் நிலைப்பாடு குறித்து சமவுரிமை இயக்கம் பத்திரிகையாளர் கூட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 07 January 2016
- Hits: 1052
ஜனாதிபதி அவர்கள் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இல்லை, அங்கு உள்ள 215 கைதிகளும் தண்டனைக்குள்ளானவர்களே. எனவே அரசியல் கைதிகள் விடுதலை பற்றி எவரும் கதைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனும் தொனிப்பட் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் சிறைச்சாலை பதிவுகளின் படி இந்த கைதிகள் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்கு காரணமான யுத்தத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மை.
நாங்கள் எல்லோரும் மனிதர்கள்...... (சிறு கதை)
இந்த வார விடுமுறை நாள் நல்ல வெயிலாய் இருந்ததால், எங்கேயாவது வெளியில் போவோமா என்று யோசிச்ச போது பஜார் நினைவு தான் முதலில் வந்தது. மனைவியையும் கூட்டிக் கொண்டு பஜாருக்கு வந்து சேர்ந்தேன்.
வெளிநாட்டவர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், வெளிநாட்டவர்களால் நடக்கிற குற்றச்செயல்களை ஒரளவு குறைக்கலாம் என்ற நம்பிக்கையிலும் உருவாக்கப்பட்டது தான் இந்த பஜார். அரபு, ஆபிரிக்கா, ஆசிய எனப் பல நாட்டவர்களின் ஊரிப்பட்ட கடைகள். இறைச்சி முதல் மரக்கறி மளிகைச் சாமனகள் என வீட்டுக்குத் தேவையான தடி தண்டு தளபாடங்களிலிருந்து சகலதும் வாங்கலாம்.
காரை விட்டு இறங்கி நடந்தோம். வழமையாக பக்கத்திலே சேர்ந்து வராத மனைவி, வேகமாக நடந்து வந்து ஒட்டிக் கொண்டாள். திருப்பி என்ன என்று ஒருமாதிரிப் பார்க்க, "என்னப்பா இஞ்சை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய்.... பார் இவங்களை..... பார்க்கவே... பயமாயிருக்கு. அவங்கடை தொப்பியும் தாடியும்.... வாப்பா வேறு எங்காவது போவோம்" என்றாள்.
குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 05 January 2016
- Hits: 771
ஜனநாயகம் சம்பந்தமாக ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்தே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. முந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களால் துன்பப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுத் தருவதாக இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் மேடைகள் தோறும் வாக்குறுதியளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று மீறப்பட்டுள்ளன. மக்கள் எதிர்பார்ப்புகள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல் சிறைக்கைதிகள், காணாமல்போனவர்கள், அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளானவர்கள், அடக்குமுறைக்கு ஆளானவர்கள் போன்ற யாருக்குமே நீதி கிடைக்கவில்லை. தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சம்பந்தமாக விசாரணை கேட்டு ரத்துபஸ்வல மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பிரகீத் எக்னலிகொட, லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை சம்பந்தமாகவும் இந்த அரசாங்கம் ஊமையாகவே உள்ளது. லலித் மற்றும் குகன் காணாமல்போனது குறித்து எவ்வித விசாரணையுமில்லை. அதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்படாமல் தவிர்க்கப்படுகின்றார்கள். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கம் தமது படுமோசமான கொள்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என அனைவருக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது. தம்புள்ளயில், கொடகத்தனயில், யாழ்ப்பாணத்தில் மற்றும் பந்தகிரியாவிலும் சமீபத்தில் கொலன்னாவையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டேவிற் ஐயாவும் - அஞ்சலிகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 January 2016
- Hits: 3896
டேவிற் ஐயாவை கொல்வதற்காக 1986 ஆம் ஆண்டு புளட் இயக்கம் கடத்திச் சென்றது. அன்று டேவிற் ஐயா தப்பியோடாது மரணித்து இருந்தால், அவர் குறித்த மதிப்பீடுகள் அன்றும் - இன்றும், என்னவாக இருந்து இருக்கும்.
1986 இல் டேவிற் ஐயாவை கொல்ல முனைந்தவர்கள், அதற்கு துணை நின்றவர்கள், அதற்கு எதிராகப் போராடாதவர்கள், இன்று அதை மூடிமறைத்து செய்யும் அஞ்சலிகள் குறித்து எமது மதிப்பீடுகள் என்ன?
1983 இல் வெலிக்கடை படுகொலையில் இருந்து தப்பித்த டேவிற் ஐயா, 1986 இல் புளட்டின் படுகொலையில் இருந்து தப்பி தலைமறைவாகினார். 1986 இல் அவர் கொல்லப்பட்டு இருந்தால், இன்று அஞ்சலி செலுத்துகின்ற எந்தனை பேர், அன்று தங்கள் அஞ்சலியை செலுத்தி இருப்பார்கள்?
பிரஜாவுரிமை கோரியவருக்கு சிறை - கொள்ளையடிக்க உதவுபவருக்கு பிரஜாவுரிமை
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 03 January 2016
- Hits: 3090
மக்களை நேசிப்பது குற்றம் - கொள்ளை அடிப்பது ஜனநாயகம். இலங்கை ஜனநாயகத்தின் வெட்டுமுகம் இதுதான்.
தனது பிறப்புரிமையான பிரஜாவுரிமையைக் கோரிய குமாரை சிறையில் அடைத்து வைத்து இருக்கின்றது நல்லாட்சி அரசு. முகமாற்ற ஆட்சி குமாரை கைது செய்து இன்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. நாட்டின் கேகாலை மற்றும் பல நகரங்களில் தெடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் என்பன முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு நகரத்தில் கோட்டை மத்திய புகையிரத நிலையத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இப் போராட்டங்கள் 50 நாட்களை தாண்டியும் அரசு ஒவ்வொரு தடவையும் விளக்கமறியல் என்று திகதியை தள்ளிப்போட்டு சிறையிலடைக்கின்றது. எந்த விசாரணையையோ குற்றச்சாட்டினையோ நீதி விசாரணைக்கு எடுக்க முடியாமல் வெறுமனே நாட்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றது. இது எதனைக் காட்டுகின்றது எனில் இந்தச் சிறைத் தண்டனைக்கு அவர்களிடம் எந்த சட்ட நியாய விளக்கமும் இல்லை என்பது தான். இந்தச் சிறையடைப்புக்கு காரணம் குமார் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சி முன்னெடுக்கும் அரசியலே ஒழிய வேறு எதுவுமல்ல.
அடுத்ததாக அண்ணன் சீமான் பேச வருகிறார், அனைவரும் காதுகளை பொத்திக் கொள்ளவும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 03 January 2016
- Hits: 4891
அண்ணன் சீமானிடம் பேசுபவர்கள் அருகே குழந்தைகள், பெண்கள் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்தி விட்டு பேசவும். பலவீனமான இதயம் உள்ளவர்கள் அவரது படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பது போல அவரிடம் கேள்வி கேட்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவர் அரசியலில் இருக்கிறார். தமிழ்நாட்டின் எல்லாச் சினிமாக்காரர்களின் இலட்சியமான தமிழ் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராகும் தணியாத தாகம் அவருக்குள்ளும் இருக்கிறது. கருணாநிதி, வாத்தியார், ஜானகி, ஜெயலலிதா வரிசையில் அவரும் முதலைமைச்சர் ஆகும் அபாயம் தமிழ்மக்களின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம், அவர் முதலமைச்சராக வந்த பின் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளிற்கு அவர் ...த்தா என்று பொங்கியெழுவதை நினைத்துப் பார்க்கவே கதிகலங்குகிறது.
பெண்ணின் உடல் குறித்து - இரு வேறு ஆணாதிக்க வக்கிரங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 02 January 2016
- Hits: 2985
இந்தியாவில் பீப்பாடல் மூலம் பெண்களை பாலியல் பண்டமாக்கி குதறுவது ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடாகவும், இலங்கையில் கலாச்சாரக் கண்ணாடி மூலம் பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நுகர்வது நிலப்பிரபுத்துவ பண்பாடாகவும் வெளிப்பட்டது. இவ்விரண்டும் பெண்ணை மனிதனாக அங்கீகரிக்காத, பெண்ணை நுகர்வுக்குரிய பாலியல் பொருளாக அணுகுகின்ற இரு வேறு உதாரணங்களாகும். இரண்டுக்கும் ஆணாதிக்க நுகர்வே அச்சாணியாக இருக்கின்றது.
போராட்டத்தை வாழ்வாக்கிய பெண்ணியவாதியின் மரணம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 December 2015
- Hits: 3389
வடகிழக்கில் கடத்தப்பட்டவருக்காக போராடிக் காணமல் போன லலித் குமார் வீரராஜ்யின் பாட்டியின் (தாயாக இருந்தவர் பாட்டி - தாய் சிறுவயதிலேயே இறந்து விட்டார்) மரணச் செய்தி - பெண்ணியத்தின் வரலாறாகும்.
2009 பின் காணமல் போனவர்களுக்காக - காணமல் போனவர்கள் குடும்பங்களை அணிதிரட்டி போராடிய லலித், குகன், - இதனால் அவர்கள் காணமல் போன வரலாறும் - அவர்களுக்காக சேர்த்து போராடுவதுமே இன்றைய வரலாறாகி இருக்கின்றது.
கோலஞ்செய் யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 27 December 2015
- Hits: 4929
பணமும் பாரிஸ் சென்ட்டும், சென்ற் மைக்கல் சேர்ட்டும்
நாலு பேர் அறியாமல் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு
ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா.
பாட்டைக் கெடுத்ததிற்கு அவ்வையார் மன்னிக்கவும். பிள்ளையார் என்று ஒருவர் இருந்தால் அவருக்கு அவ்வைக்கிழவி சொன்னபடி பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்து கொடுத்தால் போதும். ஆனால் யாழ்ப்பாணத்து பாடசாலைகளிற்கு ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் ஒரு பதினொரு வயது பச்சைக்குழந்தைக்கு பள்ளிக்கூட அனுமதி கிடைக்கும். புது வருடத்தில் தை மாதத்தில் ஆறாம் வகுப்பிற்கு போகும் ஏழைப்பிள்ளைகளிற்கு தை பிறந்தால் வழி பிறப்பதில்லை. கல்விக்கொள்ளையர்கள் காசுக்காக ஏழைகளின் எதிர்காலத்திற்கான வழிகளை அடைத்து மூடுவதுதான் இலங்கையில் நடக்கிறது. அந்தச் சிறுவனோ, சிறுமியோ ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசு தேர்வில் நல்ல புள்ளிகள் பெற்றாலும் பணமில்லாவிட்டால் பாடசாலைக் கதவுகள் திறவாது.