மித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊடகப்பொறுக்கிகள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 26 December 2015
- Hits: 5476
தேசத்தின் முதன்மையான தமிழ்ப்பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வரும் வீரகேசரி நாளிதழின் வாலான மித்திரன் தொடங்கி யாழ்ப்பாணத்தின் "பண்பாட்டை" காப்பாற்ற அவதாரம் எடுத்திருப்பதாக ஊளையிடும் இந்தப் பொறுக்கி இணையத்தளங்கள் நியூஜப்னா (New Jaffna) வரையான வரலாறு ஊடக வரலாறு அல்ல. இலங்கையின் மஞ்சள் பத்திரிகைகளின் வரலாறு. பெண்களை இழிவு செய்து பத்திரிகை விற்று பணம் சம்பாதிக்கும் வியாபாரிகளின் வரலாறு. உள்ளாடைகளை தேடி அலையும் ஊனம் பிடித்த ஆபாசப் பொறுக்கிகளின் வரலாறு.
இருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி அலையும் மனிதன்..!
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே..,
அவர் ஏதும் அறியாரடி ஞானதங்கமே…!
திருவருட் செல்வர் திரைப்படத்தில் வந்த அருமையான பாடல். அங்கு ஆன்மீகத்தினை தவிர்த்து அரசியலாக பார்த்தால், இன்று மனிதர்கள் யாவருமே இந்த நிலையிற் தான் சிந்திக்கின்றார்கள்.., வாழ்கின்றார்கள், அலைந்து திரிகின்றார்கள். (நாளாந்தம் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு நாளந்தம் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விடத்திற்கும் நாளந்தம் திண்டாடும் அப்பாவி பாமர மக்களை நான் இங்கு தவிர்த்துக் கொள்கிறேன்). குடும்பம், உறவு, அன்பு, பாசம், சமூகம் என்று அரசியல் வரை தன் கண்ணெதிரே பக்கத்தில் இருக்கும் நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, இல்லாத அல்லது தவறான இடத்தில் அதை தேட முற்படுகின்றான் மனிதன்.
ஆண்களால் தினம், தினம் கொல்லப்படும் வித்தியாக்கள்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 23 December 2015
- Hits: 4825
அந்த பனங்காடுகளிற்குள் எழுந்த அவளின் கடைசி மூச்சுக்கள்; தொண்டைக்குள்ளே உறைந்து, புதைந்து போன மெளனமான அழுகைகள் எதுவும் அந்தப் பேய்களிற்கு கேட்கவில்லை. அவளின் ஆத்மா முடிவற்ற அந்த இருளில் கரையும் போது என்ன நினைத்திருப்பாள்?. யாரை நினைத்திருப்பாள்?. தாலாட்டிய தாயை, தாங்கி வளர்த்த தந்தையை தன்னை தேடி அவர்கள் தவிக்கப் போவதை; நீண்டு கொண்டு போகும் இரவுகளில் கண்ணீர் நிற்கா விழிகளுடன் தங்களின் செல்லமகள் பட்ட பாடுகளை எண்ணி பதறப்போவதை என்று எதை நினைத்திருப்பாள்?. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று ஏதும் அறியா அந்த சிறுகுழந்தை எண்ணிப் பார்க்க முதலே அந்த நாய்கள் அவளின் கடைசி மூச்சையும் அவளிடமிருந்து பறித்திருப்பார்கள்.
உலகம் அழியப் போகின்றது!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 22 December 2015
- Hits: 3480
உலகம் அழியப்போவது பற்றி நாங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கலாம். ஆன்மீகவாதிகள் (மதவாதிகளும் - எதிர்காலம் பற்றி ஆரூடம் கூறுவோரும்) உலக அழியப்போவது பற்றி அடிக்கடி கூறுவதால், நாத்திகவாதிகளாகிய (மார்க்சியவாதிகள்) நாங்கள் கூறுவது முரணாக இருக்கலாம். இயற்கை அழிவைக் காட்டி உலக அழிவு பற்றி ஆன்மிகவாதிகள் கூறும் போது, அதை கடவுளின் கோபமாக வர்ணிக்கின்றனர். முதலாளித்துவத்தின் இடத்தில் கடவுளை வைப்பதன் மூலம், புவியை அழிப்பவனை பாதுகாக்கும் ஆன்மிகவாதிகள், புவியின் அழிவை வரவேற்கின்றான்.
புவியை வெப்பமடைய வைப்பதன் மூலம் அழிவை ஏற்படுத்தும் முதலாளித்துவத்தை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு என்பதும், அழிவை தவிர்க்க முடியும் என்பதும் மற்றொரு எதார்த்தம்.
பொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 19 December 2015
- Hits: 4707
அண்ணே, உங்களை ஒருமையில் "பொங்கியெழு மாவை சேனாதிராசா" என்று கூப்பிட்டு விட்டேன் என்று நினைக்க வேண்டாம். எங்கள் ஊரில் கந்தையா அப்பு என்று ஒரு முடி வெட்டும் தொழிலாளி இருந்தார். நல்ல அன்பான மனுசன், எங்களிற்கு என்னவோ விதம், விதமான ஸ்ரைல் என்று சொல்லி முடி வெட்டுவார். ஆனால் கடைசியில் பார்த்தால் எல்லோருடைய தலையும் சட்டியை கவிட்டு விட்டது போலவே இருக்கும். அவர் மருத்துவமும் பார்ப்பார். என்னவோ எல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். ஆனால் அதுவும் அவரது முடிவெட்டும் கலை மாதிரித்தான். வருத்தம் கொஞ்சமும் மாறாது.
நாசி ஆட்சியை நோக்கி பிரான்ஸ் பயணிக்கின்றதா?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 18 December 2015
- Hits: 2925
இன, நிற நாசிகள் 1930களில் ஆட்சிக்கு வந்தது போன்று, ஐரோப்பாவில் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கான சமிக்கைகள் அண்மைக் காலமாக தோன்றி இருக்கின்றது. பிரான்சில் இன, நிற நாசிக் கட்சியான "தேசிய முன்னணி"யானது (Front National ), அதி கூடிய வாக்குகளைப் பெற்று முதன்மையான கட்சியாக மாறியுள்ளது. வேகமான அதன் வளர்ச்சியானது, ஐரோப்பா எங்கும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. ஏகாதிபத்திய நாடுகளில் இனவாதமும், நிறவாதமும் தூண்டப்பட்டு வரும் இன்றைய சூழலில் அதிகாரத்தில் இருந்த கட்சிகள் கூட அதிகாரத்தைத் தக்கவைக்க வெளிப்படையாக "வெள்ளை இன மரபு" பற்றி பேசி வருகின்றது. பயங்கரவாதத்துக்கு தீர்வு இன, நிற ரீதியாக அணிதிரண்டு, தாங்கள் அல்லாதவர்களை ஒடுக்குவதன் மூலமே சாத்தியம் என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போக்கானது ஐரோப்பாவில் மட்டுமல்ல, அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி குடியரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் வரை இன, நிற, மத ரீதியாக மக்களை பிரிக்கும் கருத்துக்களை முன்வைத்திருப்பது, வரலாற்றின் மற்றொரு இருண்ட பக்கம் தொடங்க இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா?
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 16 December 2015
- Hits: 6714
தமிழ்ச்சினிமா கழிசடைகள் காலங்காலமாக தமிழனின் மானத்தை விற்று வருகிறார்கள். தமிழ்ப் பெண்களை ஆணாதிக்க சொல்லாடல்களாலும், காட்சிப் படிமங்களாலும் பாலியல் வல்லுறவு செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டு காவாலிகளும் தங்களது மன விகாரங்களை, வக்கிரங்களை, அழுக்குகளை கொட்டி பெண்களை கேவலப்படுத்துகிறார்கள். மனிதர்கள் என்று சொல்லவே கூசும் இப்படிப்பட்ட பிறவிகள் தான் தமிழருக்கு கலைஞர்கள் என்னும் போது தமிழ்ச்சினிமா என்றைக்குமே சேறு நிறைந்த சாக்கடையாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை.
அம்மாக்களினதும் - தாய்மார்களினதும் இழப்புகள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 December 2015
- Hits: 3388
எமது தோழர்களான கிளி, புபுதுவின் அம்மாக்களின் மரணச் செய்திகள் எமது தோழர்களின் துயரங்களாக, அது எமது தாய்மார்களின் இழப்பாகின்றது. தோழர்களுடன் இணைந்த எமது போராட்ட வாழ்க்கையானது - அவர்களின் துயரம், மகிழ்ச்சி.. அனைத்துடனும் எம்மையும் இணைத்து விடுகின்றது.
தொப்புள் கொடியில் இருந்து தொடங்குகின்றது மனித உறவுகள். இந்த உறவுக்கு ஈடு இணையற்ற உறவுகள் எதுவும் கிடையாது. தாய்மை சார்ந்த உறவுகளின் எற்படும் இழப்பு உணர்வு பூர்வமானவை, உணர்ச்சிகரமானவை.
தேசத்தவரை விற்று தேசத்தை அடகு வைக்கும் தேசியம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 14 December 2015
- Hits: 6177
ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதிகளில் இன அடிப்படையில் அரசியல்வாதிகள் செயற்படத் தொடங்கிய போது இனவாதம் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என உணர்ந்த - மக்களை நேசித்த பல அறிவாளர்கள் தெற்கிலும் வடக்கிலும் இனவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய தீவிரமாகச் செயற்பட்டார்கள். அந்த செயற்பாடுகளை வடக்கில் 'யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தொண்டர்களும் தெற்கில் இடதுசாரிச் தொண்டர்களும் இணைந்து நின்று முன்னெடுத்தனர்.
அழாதே அம்மா, உன் கண்ணீர் ஒரு நாள் அவர்களின் அதிகாரங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 13 December 2015
- Hits: 4647
எம் தாய்மார் தம் புதல்வரை, புதல்வியரை தேடி தம் ஆவி சோர தரையிலே புரண்டு அழுகிறார்கள். தம் குழந்தைகள் தவழ்ந்து விளையாடிய மண்ணிலே தம் உயிர் போகட்டும் என்பது போல் தளர்ந்து விழுகிறார்கள். காணாமல் போன தம் கண்மணிகளை மறுபடி ஒரு முறையேனும் காண மாட்டோமா என்று கதறி அழுகிறார்கள். சிறகு விரித்து, வண்ணத்துப்பூச்சியாய் வலம் வர வேண்டிய நம் குழந்தைகள் தம் தாயை, தந்தையைத் தேடி தம் சின்னக்குரல்கள் சிதைய அழுகிறார்கள்.