புலுடா…..
சாமத்தியக் கொண்டாட்டம் முடிஞ்சவுடன் இரவுப் பார்ட்டிக்கு நீ கட்டாயம் நிற்க்க வேண்டும் என்ற சிவாண்னையின் வேண்டு கோளுக்கிணங்கத் தான் நான் இங்கு வரவேண்டிய நிலை. தவிர்க்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.
எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. குடிப்பதற்கல்ல இங்கே வருவதற்கு தான்.
போனால் குடிக்க வேண்டும்.
குடிச்சா கதைக்க வேண்டும்.
கதைச்சா அரசியலும் வரும்.
அரசியல் வந்தா சண்டை வரும்.
சண்டைவந்தா…
நிறங்கள்……
கலியாணம் முடிச்சு மனிசி இங்கே என்னிடம் வந்து இன்றையோடு மூன்றே மூன்று நாள் தான். என்ன வெளியிலே மட்டுமா குளிர், உள்ளேயும் குளிர் தானே என்று ஒரு இடமும் வெளிக்கிட விருப்பமில்லாமல் போர்த்துக் கொண்டு சோபாவில் இருந்த படியே ரீவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனிசி என்று குறிப்பிட்டு எழுதுவதால் பெண்ணியவாதிகள் கோவிச்சு கொள்ள வேண்டாம்.
ஏதோ ஒரு அவசர வேலையாக வெளியில் போட்டு வர கொஞ்ச நேரமாகி விட்டது.
மனுசி இப்ப தானே வந்தவள் தனித்திருக்கப் பயப்படுவாள் என நினைத்துக் கொண்டு ஓடோடி வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்து உள்ளே வரும் போது ரீவியின் சத்தமும் மனிசியின் சத்தமும் பலமாயக் கேட்டது.
வடுக்கள்…
இந்த பன்னிரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கையில் இப்படி ஒரு நாளும் தினேஸ் சந்தோசமாக இருந்ததில்லை. இஞ்சை வந்த கொஞ்சக் காலம் அப்பிடி இப்படி என்று ஓடிவிட்டாலும் சினேகிதர்களுடன் சேர்ந்து முஸ்ப்பாத்தி சந்தோசம் என்று காலம் கழிந்தாலும் காசு விசையத்திலும் உழைப்பு விசையத்திலும் மிகக் கண்ணாகவே இருந்தான்.
தீர்க்க தரிசனங்கள்……
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 February 2012
- Hits: 2866
ஒரு இருபத்தாறு வருசத்துக்குப் பின்னர் இன்று தான் என்ரை பெரியப்பாவைச் சந்திக்கப் போகிறேன். ஜரோப்பிய நாடொன்றில் தம்பியிடம் ஒரு சில மாதங்கள் வந்து தங்கி விட்டுப் போவதாக வந்திருக்கிறார்.
பெரியப்பா என்றதும் என் நினைவலைகள் பொங்கி நுரைத்து வழியத் தொடங்கியது சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்போ பதினாறோ அல்லது பதினேழோ வயதிருக்கலாம். ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தகங்களில் வரும் பெண்களையும் விளம்பரப் படங்களையும் வெட்டிச் சேகரித்து அந்த பெண்களையும் அந்தப் புகைப்படங்களையும் ரசித்து ஏங்கிக் கொண்டிருந்த ஒரு கனாக் காலம்…
தீர்க்க தரிசனங்கள்…….(சிறுகதை)
ஒரு இருபத்தாறு வருசத்துக்குப் பின்னர் இன்று தான் என்ரை பெரியப்பாவைச் சந்திக்கப் போகிறேன். ஜரோப்பிய நாடொன்றில் தம்பியிடம் ஒரு சில மாதங்கள் வந்து தங்கி விட்டுப் போவதாக வந்திருக்கிறார்.
பெரியப்பா என்றதும் என் நினைவலைகள் பொங்கி நுரைத்து வழியத் தொடங்கியது சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்போ பதினாறோ அல்லது பதினேழோ வயதிருக்கலாம். ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தகங்களில் வரும் பெண்களையும் விளம்பரப் படங்களையும் வெட்டிச் சேகரித்து அந்த பெண்களையும் அந்தப் புகைப்படங்களையும் ரசித்து ஏங்கிக் கொண்டிருந்த ஒரு கனாக் காலம்…
ஒரு குழந்தையை வையாதே….!!!! (சிறுகதை)
இங்கே நான் இருக்கிற இடத்திலே ஒரு பொடியன் இருக்கிறான். கிட்டத்தட்ட பதின்மூன்றோ, பதின்னாலு வயசு தான் இருக்கும். ஆள் நல்லா மொட்டையும் அடிச்சு இரண்டு காதிலே தோடும் குத்தி பார்க்கிறதுக்கு ஒரு மாதிரித் தான் இருப்பான்.
அவனின் குடும்பத்தையும் ஓரளவு எனக்குத் தெரியும். ஆனால் போய் வந்து அளவிற்கு நட்பும் பழக்கமும் இல்லை.
ஒரு நாள் என்னுடைய கடைசி மகளுக்கு ஏதோ பல்லு வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக கார்தரிப்பில் நின்ற போது பள்ளிக்கூட வேலி ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று சிகரட் குடித்துக் கொண்டு நின்றான். இந்தப் பொடியன்.
கானல் நீர் (சிறுகதை)
”We Want… தமிழீழம்…We Want… தமிழீழம்…Our Leader… பிரபாகரன்…Our Leader… பிரபாகரன்… டம்… டம்… டம்… டம்” என்ற மேளத்தின் இசை ஒலியோடு மக்கள் கூட்டத்தின் கோசம் வானைப் பிளக்கிறது. ஒவ்வொருவரது கோசங்களில் இணைந்த உச்சரிப்புக்களிலும் இருந்த உணர்ச்சியின் வேகமும் அதனோடு ஊறிய உச்சாட்ட வெறியின் கொதிப்பும் ஆவேசமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. டம்… டம்… டம்… டம்… We want தமிழீழம், We want தமிழீழம், Our Leader பிரபாகரன், Our Leader பிரபாகரன். நூறல்ல.., ஆயிரமல்ல கிட்டத்தட்ட லட்சங்களைத் தாண்டிவிட்ட மக்கள் கூட்டம். குழந்தைகள் குட்டிகள், கிழடுகட்டைகள், இளைஞர்கள், குமருகள் எனச் சத்தம் போட்டபடி ஊர்வலம் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
சவப்பெட்டிகளைத் தூக்கியபடி ஒரு கூட்டமாகவும், தலையிலே துண்டுகளைக் கட்டியபடி தாளத்திற்கு ஏற்றது போல் பைலா ஆடிக்கொண்டு போகும் இன்னொரு இளைஞர் கூட்டமுமாக, இறுதி நேரத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் பதாகைகளோடும், பொக்கற்றினுள் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு புன்னகைத்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் தலைவனின் படத்தையும் தூக்கிக் கொண்டு போகும் கூட்டமுமாக ஊர்வலம் கம்பீரமாய் வீறுநடை போட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. We Want தமிழீழம்; We Want தமிழீழம், Our Leader பிரபாகரன், Our Leader பிரபாகரன் எந்தத் தடைகளுமின்றி ஊர்வலம் நகர்ந்து செல்கின்றது. நகரமுடியாது மறிக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த வெள்ளைச் சனங்களும், வெளிநாட்டுச் சனங்களும் எட்டிப் பார்த்தபடியே திகைத்துப் போயிருந்தார்கள்.
அபலை…. (சிறுகதை)
ஐயோ….ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு… கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்…. வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..
அப்பவே களுத்திலிருந்த சயினற்றை அடிச்சு கதையை முடிச்சிருக்க வேணும், மாதினியைப் போல் மித்திரா போல் களத்திலேயே உடனே உயிரைத் துறந்திருக்க வேண்டும். மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எனக்கு வந்திருக்கவே கூடாது. ஒரு முறையல்ல, இருமுறையல்ல, பலமுறைகள் தன் தலையில் அடித்தபடியே கதறிக் கதறிக் அழுதழுது குளறிக் கொண்டிருக்கிறாள்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு! இந்நிலையில்தான் மகிந்தாவின் உளறல்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 February 2012
- Hits: 2239
செய்தி குறித்த கண்ணோட்டம்
சர்வதேச சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறைக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் ‐
அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாக வகையீடு செய்யப்படக் கூடாது என்பதனை உலகத்திற்கு உணர்த்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்த அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் இலங்கை என்பதனை மட்டுமன்றி பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகரமாக முறியடிக்கக் கூடிய வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 26 December 2011
- Hits: 4144
நூல் முன்னுரை
1.எந்தச் சூழலில் இந்த நூலுக்கான முயற்சி
விமலேஸ்வரன் படுகொலையின் பின் 19.7.1988 மதியமே என் மீதான படுகொலைக்கு முயன்றனர். இதற்கு இரு புலிகள் முயன்ற போதும், எனது தற்காப்புணர்வு அவர்கள் கிட்ட நெருங்குவதை அனுமதிக்கவில்லை. என் மீதான கொலைமுயற்சியின் போது என் தற்காப்பு உணர்வு சார்ந்த எச்சரிக்கை உணர்வு மூலம், அன்று அதிஸ்ட்டவசமாக உயிர் தப்பியிருந்தேன். அன்று இதிலிருந்து தப்பி தலைமறைவாகிய நான், அடுத்த நாள் கொழும்பு சென்றேன். இதன் பின்பாக என்னைக் கடத்தி வைத்து சித்திரவதை செய்த முகாமில் இருந்த இரு புலி உறுப்பினர்களை, அடிக்கடி கொழும்பிலும் நான் தங்கி இருந்த இடத்தின் அருகிலும், நான் போய் வரும் இடங்களிலும் காணத் தொடங்கினேன்.