சர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்..!
‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் பதிகின்றது. இதில் ‘தமிழ் அரசியல் தரப்புகளின் இராஜ தந்திரிகள் – தூதர்” (Tamils Diplomat) என்போர், எமது மக்களின் அடிப்படை வாழ்வையே பறித்த வரலாறுகள் மீண்டுமோர் பார்வைக்காக மேலெழுந்து வருகின்றது.
தேன்குழல் காமயோக ஜிலேபிச்சாமி லண்டனில் (பகுதி 3)
இன்னுமொரு விசயமென எழுத வந்து இதுகளைப் பற்றி எத்தனையோ பல உண்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய இருக்கிறது. எப்போதும் போலவே இதுகளின்ரை கொட்டமடிப்புகள் வேறுவேறு ரூபங்களிலை தற்போதும் வெளிக்கிடுது. இப்ப இந்த தேன்குழல்ச் சாமியோடை சேர்ந்து கூத்தடிக்கின்ற, புத்தகப் பூச்சிகளான டாக்டரும் – வழக்குரைஞர் – கணக்காளாரெண்டு ஒரு சிலதுகள், ஜிலேபிச்சாமி அன்ட் கொம்பனி மக்களை ஏமாற்றுகின்ற திருகுதாளங்களை இதில் மேலும் காணலாம்.
உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ..? -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2
மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்சது போலை, கடன்பட்டு கஸ்ட்டப்பட்டு வெளிநாட்டுக்கு வந்த எங்கட மக்களை ஏமாற்றி, பண மோசடி செய்து, வீடு மேல வீடு வாங்கி, தனக்குச் சொத்து சேர்த்து, தன்னை நம்பி வந்த மக்களை நடுறோட்டில விட்டிட்டு..! கள்ள வழியால் தப்பிவந்த ஒரு வழக்குரைஞரின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிஞ்ச விடயந்தானே பாருங்கோ..? அவரைச் சட்டம் சும்மா விடேல்லை, தண்டனை முடிஞ்சு அவர் வெளியாலை வந்தாலும் தன்ரை நிறுவனத்தை இழந்ததாலை, அவரிப்ப தனது துணைவியோட சரவணபாபாச் சாமிக்கு சாமரம் வீசுவதுடன், அந்த ஜிலேபிச் சாமியின் கால்களைக் கழுவி அந்த ஊத்தையைக் குடிக்கினம். அந்தச் சாமிக் கள்ளன் தனக்கான சொத்துக் குவிப்பதற்காக, இவர்களையும் சேர்த்துக்கொண்டதாலை ஆளாளுக்கு மாறிமாறி உதவியளைச் செய்து, அப்பாவி மக்களை பேக்காட்டி சொத்துச் சேர்க்கினம்.
‘சமூகச் சீரழிவு’ சாமிகளுக்கு மக்களைக் கூட்டிக் கொடுக்கும் ‘தமிழ் ஊடகங்கள்’
மனிதர் தங்களின் எண்ணத்தை சொல்வதற்கு மொழி என்பதுதான் அடிப்படை. இது மனித வரலாற்றில் தேடப்பட்ட அறிவியல். இதனை சொல் – ஊடகம் எனச் சொல்லுவர். இந்தச் சொல்லியத்தால், நாம் ஒரு கருத்தை மற்றவருக்குச் சொல்லும்போது, அது பலருக்கு விளங்காமல் போவதுண்டு. இதில் சில சொல்லுக்கு பற்பல அர்த்தங்களும் இருக்கின்றது. இதனால் நாம் எமது கருத்துகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி, அந்த மொழியினை எப்படியெல்லாம் வளைக்க முடியுமோ..! அப்படியெல்லாம் வளைத்துப் போடுகின்றோம். அத்துடன் நாம் விரும்பும் கருத்துகளை மற்றவரில் புகுத்தவும், திணிக்கவும் துணிகின்றோம்.
நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! - (தொடர்: 6)
ஊர் உறவை அறுத்து
பணம் பொருள் சம்பாதிக்க..,
அக்கம் பக்கத்தாரின்
காணி நிலத்தைச் சுறண்டி
அதற்கும் மேலாய்
அரையடி வேலிக்குள்
கொலை வெறியாடி
தன் சொந்தங்களை வெறுத்த
எனது மாமனும்..!
சர்வதேசத்திடம் முறையிடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை..?
பத்திரிக்கை செய்தி: அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன விவகார தீர்வு தொடர்பாக பேசுவதில் பயனற்றுப்போயுள்ளது எனவும், அப் பேச்சுவார்த்தை எவ்வேளையிலும் முறிவடையலாம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பொறுத்து சர்வதேச சமூகத்திடமும், ஐ.நா.விடமும் தமது நிலை குறித்து முறையிட்டு தீர்வு காண்பதற்கு இவர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், நியாயம் கோரவும் மக்களை அணி திரட்ட வேண்டிய தேவை தற்பொழுது தமக்கு எழுந்துள்ளதாகவும், இது குறித்து மக்களிடம் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லையாம்.
எப்போதும் வயல் விளைக்க..!
உச்சி மீது குத்தி வீழ்ந்த சூரியன்
சடலமாய்க் கிடந்து தகிக்கின்றான்
எந்தன் காய்ந்த தலை முகட்டில்.
நேற்றுப் பெய்த அடைமழையால்
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேலென்ற பற்றைக் காடுகள்.
ஆனாலும்..,
எப்போதும் வயல் விளைக்க..!
உச்சி மீது குத்தி வீழ்ந்த சூரியன்
சடலமாய்க் கிடந்து தகிக்கின்றான்
எந்தன் காய்ந்த தலை முகட்டில்.
நேற்றுப் பெய்த அடைமழையால்
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேலென்ற பற்றைக் காடுகள்.
ஆனாலும்..,
நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! - (தொடர் : 05)
இதைச் சும்மா ஒரு விளம்பரமா
ஒருபோதும் எடுக்கக் கூடாது பாருங்கோ.
மாபெரும் குற்றவாளிகள்
தங்களின் குற்றங்களை
மற்றவரில் சுமத்த..,
நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! – (தொடர் : 04)
புதுக்கத் தார் மெழுகிய
அந்தத் தெருவை
டக்கிளசு போட்டாரென
அனுங்கினான் ஒரு தம்பி.