இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 2
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 February 2012
- Hits: 6421
வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை
வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்கலாலேயே பிடிக்கப்பட்டது. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.
இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 3
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 February 2012
- Hits: 6432
மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்
கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.
இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 4
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 February 2012
- Hits: 6438
இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்
இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை பற்றியும், அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 5
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 February 2012
- Hits: 6413
இழுவைப் படகுகளின் பாதிப்புகள்
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் கடற்கொள்ளையால் அன்றாடம் சோற்றுக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர்.
இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.
அவையாவன :
1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்
2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது
3. கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகளை அழித்தல்
4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்
5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.
6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.
இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 6
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 February 2012
- Hits: 6415
உதாரணம் 2 :
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற்தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப்படகுகள் இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக்கூடிய தன்மை கொண்ட சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்பித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும் போது அவை வேறு பகுதிக்கு புலம் பெயரும் அல்லது கரையோரமாக ஒதுங்கி இறந்து விடும். செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு போன்ற கிராமத்து தொழிலாளர்கள் பல பரம்பரையாக வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில், அதாவது வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்திற்கு கிழக்காக உள்ள கடற்பரப்பில் விடுவலை, மற்றும் சிறையாவலை பாவித்து சிறையா மீன் பிடிப்பது வழக்கம். இந்திய இழுவைப்படகுகள் சிறையாக்களின் வாழ்விடமாமான வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன்பிடியில் ஈடுபடுவதனால் தற்போது விடுவலை தொழில் முற்றாக அழிந்து விட்டது. சிறையாவலை சிலரால் பாவிக்கப்பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க முடியாதுள்ளது என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 7
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 February 2012
- Hits: 6254
மீன்பிடித்தொழிலும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான உறவும்
சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல்ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர் ஜேவிபி யில் இணைந்திருந்தனர். இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய மீன்பிடி அபிவிருத்தியொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன அரசால் உலக நாணயநிதியத்தின் உதவியுடனும், மேற்குநாடுகளின் உதவியுடனும் இப்பகுதிதியைச் சேர்ந்த 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்கள் உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகளையும், கேளிக்கை அரங்குகளையும் கொண்ட தலங்களாக மாற்றப்பட்டது. இன்றும் கூட 70 சதவீதத்திற்கும் அதிகமான உல்லாசவிடுதிகள் இப்பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியது. யுத்தத்தால் உல்லாசப் பயண வியாபாரம் படுத்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். வளங்கள் நிறைந்த கடலிருந்தும் அவர்களால் தொழில் செய்யமுடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில் செய்யாததனால் தொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டுமானம் அழிக்கப்பட்டிருந்ததுமாகும். வறுமையைப் போக்க பல குடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும் இணைத்துக் கொண்டனர். பாணந்துற, பேருவள, ஹிக்கடுவ, காலி, மிசற, தங்கல போன்ற பிரதேசங்களை உல்லாசப் பயண அபிவிருத்தியால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெருமை மிகு மீன்பிடித்துறைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.
இந்திய நாசகாரமீன்பிடியும் சந்தர்ப்பவாத அரசியலும், இனவாதமும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 February 2012
- Hits: 6527
”தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவது தான் பிரச்சினையா?” என்ற தலைப்புடன் ”புதிய ஜனநாயகம்” கட்டுரையொன்று வெளியிட்டுள்ளது. அதே வேளை ம.க.இ.க.வின் ஆதரவு இணையத் தளமான ”வினவு” , ”நாகபட்டின மீனவர் வாழ்க்கை! சிறப்பு ரிப்போர்ட் ” என்ற தென்னிந்திய மீன்பிடிச்சமூகம் சார்ந்த கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் மீனவர் கொலையின் பின்னணியில் உள்ள பல பிரச்சனைகளை, முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போல புதைத்து விட்டு, சந்தர்ப்பவாதத் தளத்தில் நின்று பிரச்சனையைக் கையாளுகிறது.
நான் உட்பட எமது தோழர்கள் பலரால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் மீனவர் கொலையின் பின்னணியில் உள்ள பல சிக்கலான அம்சங்களை ஆதாரங்களுடனும், அரசியல் ரீதியாகவும் சுட்டிக் காட்டியிருந்தன. ம.க.இ.க சார்ந்த எந்த அமைப்புக்களும் இரு கரையிலும் வாழும் மீனவர்களின் பரந்துபட்ட பிரச்சனையாக இதை அணுகி ஒன்றிணைந்த போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகவில்லை. இதன் அர்த்தம்; நாம் முன் வைத்த ஆதாரங்களும், அரசியல் ஆய்வுகளும், எமது அமைப்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணினால் முன்வைக்கப்பட்ட அரசியல் கோசங்களும், ம.க.இ.க சார்ந்தவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது அவர்களை அது சென்றடையவில்லை,. அதனால் தான் அவர்கள் விபரம் அறியாது, சந்தர்ப்பவாத சாக்கடையில் அரசியல் நடத்துகின்றனர் என யாராவது நினைத்தால், அது தவறான புரிதல்.
மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 6 & 7)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 January 2012
- Hits: 4213
6.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது
யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் புலிகளால் நான் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனம் தெரியாத நபர்களால், இரகசியமாக மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கைகள் கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலி வதைமுகாமில் இருந்து, 16.7.1987 மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை வரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.
மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 4 & 5 )
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 04 January 2012
- Hits: 4067
4.மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது
“கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றதுஇ ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.” மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசிச சட்டங்களைஇ மார்க்ஸ் மிக அழகாகவே இங்கு எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் எந்த விதிவிலக்குமின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான் நிறுவினர். இதன் மூலம் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டினர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை தங்களுக்கு ஏற்ற ஒரு செங்கம்பளமாக்கி, அதன் மேல் தான் வீரநடை போட்டனர். இதுதான் பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் வரலாறுமாகும்.
மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 2 & 3 )
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 28 December 2011
- Hits: 4174
2. வாழ்வுக்கான போராட்டம்
எம்மக்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். இதில் இருந்து மீளமுடியாத வண்ணம், நாதியற்ற நிலையில் நிற்கின்றனர். எல்லாவற்றையும் இழந்து விட்டனர். வன்னி மக்கள் திறந்தவெளிச் சிறையில் அநாதையாகி விட்டனர். யாழ் மக்கள் நுகர்வுச் சிறையில், தலைகால் தெரியாது வீங்கி வெம்புகின்றனர். கிழக்கு மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில், கேட்பாரின்றி அநாதையாக விடப்பட்டுள்ளனர்.