"லெனின் சின்னத்தம்பி" நாவலும், பிற்குறிப்பும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 11 December 2015
- Hits: 3495
மனித உணர்வுகளானது முதலாளித்துவ, பண உறவுகளாக மாறிவிட்ட எதார்த்தத்தை, "லெனின் சின்னத்தம்பி" என்ற நாவல் அற்புதமான அழகியலாக்கி இருக்கின்றது. உழைப்பைச் சுற்றிய மனித உறவுகள், முதலாளித்துவ உறவாக எமக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை, இந்த நாவல் மூலம் தரிசிக்க முடியும். எல்லா மனிதர்களும் குறைந்தது இதில் ஒருவனாகத் தன்னும் வாழ்கின்றனர் என்பதே எதார்த்தமாகும். இதுவொரு கற்பனையல்ல. வெளிப்படையான பொது எதார்த்தத்தைக் கடந்த, அது தோன்றுகின்ற சூழலுக்குரிய உள்ளார்ந்த எதார்த்தத்ததின் உட்புறத்தை இந்த நாவல் உடைத்துக் காட்டி இருப்பது இதன் சிறப்பு.
தமிழரின் தாகமும் அவர்களைத் தண்ணீர் படுத்தும் பாடும்.
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 08 December 2015
- Hits: 5944
"யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தனது 6வது மாநாட்டை 1930 ஏப்ரல் 22 - 23ந் திகதிகளில் திருநெல்வேலி இந்து பயிற்சிக் கல்லூரியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. அதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீவிரமான எதிர்ப் பிரச்சாரங்களும் வீதித் தடை- கல்லெறி வீச்சுப் போன்ற வன்முறைகளும் இடம்பெற்றன. அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்த நீர் அள்ளும் வழிவகைகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன. கல்லூரி வளவுக்குள் இருந்த கிணற்றுக்குள் அழுக்குப் பொருட்கள் வீசப்பட்டன. முதலாவது நாள் மாநாடு கூச்சல்கள் குழப்பங்கள் கல் வீச்சுக்கள் மத்தியிலும் தொடர்ந்து இடம்பெற்றது. இந்த வன்முறைகள் காரணமாக இரண்டாவது நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் 'றிஜ்வே" மண்டபத்திற்கு மாற்றப்பட்ட போதும் அன்றிரவு கல்லுரி மண்டபத்திற்கு தீ வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீரில் மூழ்கி மிதந்த சென்னையும் - தனிவுடமை நாகரிகமும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 07 December 2015
- Hits: 3068
நீரில் மூழ்கி மிதந்த சென்னை மக்களின் அவலம், இயற்கையினதும், வழமையை மீறிய மழையினது விளைவா? இப்படிக் காரணம் தேட, காட்ட முற்படுவதானது, சமூகத்தன்மையற்ற வக்கிரமாகும்;. இதன் பின் சமூகத்தன்மை எதுவும் இருப்பதில்லை.
நீரில் புதைந்துவிட்ட மனிதர்களை மீட்கும் நடவடிக்கை எதையும் எடுக்காது, நிவாரணம் எதையும் வழங்காது, கைவிட்டுவிட்ட அரச இயந்திரத்தின் பாராமுகத்தனமானது, அரசு குறித்தான கேள்வியாகி விடுகின்றது.
இது சரதியலின் வரவு செலவு திட்டமல்ல, சோரோஸின் வரவு செலவு திட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 07 December 2015
- Hits: 654
செல்வந்தர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் சரதியல் பாணியிலான வரவு செலவு திட்டமென இதனைக் கூறினாலும், ஜோர்ஜ சோரோஸ் பாணியிலான வரவு செலவுத் திட்டமே சமரப்பிக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திபின்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.
"இன்று பத்திரிகைகளை திறந்தால் நாட்டிலுள்ள பிரச்சினைகளை அறிந்துக் கொள்ள முடியும். வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பத்திரிகை கூறுகிறது. வரவு செலவு திட்டத்திற்கு நாடு முழுவது எதிர்ப்பு என இன்னொரு பத்திரிகை கூறுகிறது. நாடாளுமன்றத்தில் இருப்பது மக்கள் பிரதிநிதிகளென புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. என்றாலும் இந்த வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக மக்கள் கருத்துக்கும், நாடாளுமன்றத்தின் கருத்துக்குமிடையிலான இடைவெளியை பார்க்கும்போது நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லையென்பது நிரூபனமாகிறது. இந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுமென்று பார்த்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. வரவு செலவு திட்டத்திலுள்ள அழிவைத் தரக்கூடிய ஆலோசனைகளை போராடித்தான் தோற்கடிக்க வேண்டும். சில திட்டங்கள் மக்கள் போராட்டங்களால் திருப்பிவிடப்பட்டுள்ளன. என்றாலும், இந்த கொள்கை இருக்கும் வரை இந்தப் பிரச்சினையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே, நவ தாராளமய கொள்கைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எதிர்ப்பை வரிசைப்படுத்த வேண்டும்.
மாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 06 December 2015
- Hits: 4701
எல்லா உயிரினங்களும் உணவுச்சங்கிலியில் கீழிலிருந்து மேலாக அடங்கும். ஒளிர்ந்து எரியும் சூரியனிடம் இருந்து பசும் தாவரங்கள் பச்சையம் பெற்று பசியாறும். பாய்ந்து துள்ளும் மான் அம்மரத்தின் பசுந்துளிர் கடித்து உயிர் வாழும். கானகத்து பெரும்புலி அம்மானை வேட்டையாடி அடித்து உண்ணும். எல்லா உயிரினங்களும் இரைகளே. வேட்டையாடும் மிருகம் இன்னொரு விலங்கினால் வேட்டையாடப்படும். இது தான் இயற்கை. பல்லுயிரும் பெருகி வாழும் காடு கனமழை பொழிய செய்யும். மாமழை போற்ற நாடு செழிக்கும். மனிதர் பசியின்றி வாழ்வார். இது தான் இயற்கையின் விதி, இயற்கை அன்னையின் கொடை.
பிரஞ்சு கொடி - ருசியா ஆதரவு மூலம், பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளல்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 December 2015
- Hits: 2943
சமூக வலைத்தளங்கள் தொடங்கி உலகெங்கும் உள்ள பிரபலமான அடையாளங்கள் மீது பிரஞ்சுக் கொடியைக் கொண்டு அடையாளப்படுத்தியன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சிந்தனைமுறையை உருவாக்கியுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு யுத்தத்தை பிரகடனம் செய்துள்ள பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரஞ்சுக் கொடியை பறக்க விடக் கோரியதுடன், தங்கள் யுத்தத்தில் பிற நாடுகளையும் பங்குகொள்ளுமாறு அழைக்கின்றது. பிரிட்டன் யுத்தத்தில் பங்குகொள்ளவுள்ள நிலையில், அதற்கு எதிராக பிரிட்டிஸ் மக்களின் போராட்டமும் நடக்கின்றது. ஆப்கானிஸ்தானையம், ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிரஞ்சு மக்கள், இன்று பிரஞ்சு கொடிக்குப் பின்னால் மந்தையாக்கப்பட்டு இருக்கின்றனர். இவை பயங்கரவாதத்தை ஒழிக்குமா? பிரஞ்சு முதல் ருசியா வரை முன்னெடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம், உண்மையில் பயங்கரவாதத்துக்கு எதிரானதா? இந்தக் கேள்விகள் மூலம் - யுத்தத்தை ஆராய்வோம்.
சமவுரிமை இயக்கத்தின் நோர்வே போராட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 05 December 2015
- Hits: 912
நேற்றைய தினம் 03.12.15 அன்று ”சம உாிமை இயக்கத்தின்” நோா்வே கிளையினரால்; இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி நோர்வே பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருந்தது.
எத்தனை காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 30 November 2015
- Hits: 5955
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மறக்கப்பட்டுக் கவனிக்கப்படாமலும், கண்டு கொள்ளப்படாமலும், அனாதரவாக சிறையில் வாடி வதங்கிய இளைஞர்களின் "சாகும் வரையிலான உண்ணாவிரதம்" இலங்கையின் அரசியல் களத்தில் பலவிதமான நாடகங்களையும் - உணர்ச்சி வசப்படும் வசனங்களையும் - வாக்குறுதிகளையும், வீரப்பிரதாபப் பிரகடனங்களையும் எம் முன்னே தாராளமாக வழங்கி விட்டுச் சென்றுள்ளது. எனினும் அரசியல் கைதிகளின் ஒரேயொரு கோரிக்கையான பூரண விடுதலை நிறைவேற்றப்படவில்லை.
வரவு – செலவு மரணப்பொறி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 02 December 2015
- Hits: 835
2016க்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஏற்கனவே பாரிய மக்கள் எதிர்ப்பு எழுந்து கொண்டிருக்கின்றது. கண்ட கனவுகளெல்லாம் கானல் நீராகி விட்டன. அரச ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் ரூபா. 10000 சேர்ப்பதாக சொன்னார்கள். தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 1500 ரூபாவால் அதிகரிப்பதாகச் சொன்னார்கள். சட்டைப்பையை நிரப்புவதாகச் சொன்னார்கள். நடந்து செல்பவர்கள் வாகனத்தில் செல்ல முடியும் என்றார்கள். கடைசியாக, "பிச்சை எடுத்ததாம் பெருமாளு அதை பறித்து தின்னுதாம் அனுமாரு" என்ற கதையாகிவிட்டது. கூட்டரசாங்கம் பருப்பு, கருவாடு ஆகியவற்றின் விலைகளை குறைத்துவிட்டு, வரலாறு பூராகவும் இந்நாட்டு உழைக்கும் மக்கள் அநுபவித்த உரிமைகளை கொள்ளையடிக்க முயல்கின்றது. அரச ஊழியர்களின் ஓய்வூதியம், தனியார்துறை ஊழியர்களின் சேமலாப நிதி, விவசாயிகளின் உர மானியம், பாடசாலைச் சிறார்;களின் சீருடை உட்பட மேலும் பலவற்றிற்கு 'ஆழ்ந்த அநுதாபம்" என்று கூறுமளவிற்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உள்ளன.
பிரஜாவுரிமை மறுத்தல் அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 19
- Created: 01 December 2015
- Hits: 914
மற்றொரு நாட்டின் பிரஜாவுரிமையைக் காரணம் காட்டி, இலங்கையில் பிறந்த ஒருவரின் பிரஜாவுரிமையை மறுக்கின்றதான மனிதவுரிமை மீறலில் அரசு ஈடுபடுகின்றது. பிறந்த மண்ணின் மீதான பிரஜாவுரிமையை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீதான மீறலாகும். இதற்கு எதிரான போராட்டமே தோழர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டமாகும். இது புலம்பெயர்ந்ததனால் இலங்கை பிரஜாவுரிமை மறுக்கப்படும் அனைவருக்குமான போராட்டமும் கூட. இலங்கை அரசின் தொடர்ச்சியான பல்வேறு மனிதவுரிமை மீறல்களில் இதுவுமொன்று. 1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்து, இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு துரத்திய வரலாற்றில் மற்றொரு அத்தியாயம். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்ட போது, பிறந்த மண்ணின் மீதான பிறப்புரிமையை மறுப்பதாக நீடிக்கின்றது. சர்வதேச மனிதவுரிமை கொள்கைகளுக்கும், அதன் பொதுநடைமுறைக்கும் விரோதமானதே இலங்கையின் பிரஜாவுரிமைச் சட்டம்.