முன்னாள் தமிழ் அரசியல் கைதியின் வேண்டுகோள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 04 November 2015
- Hits: 5112
சம உரிமை இயக்கம்
அரசியல் கைதிகள் விடுதலைக்கான கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள்
யாழ்ப்பாணம்
2015 நவம்பர் 01
அன்பார்ந்த சகோதரர்களே,
நான் ஒரு இலங்கையின் முன்னாள் சிறைக் கைதி. முதல் தடவை 1977ல் அநுராதபுரச் சிறையில் 10 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்துள்ளேன். பிணையில் வெளிவந்த என் மீது அப்போது நாட்டில் அமுலில் இருந்த சட்டங்களின் கீழ் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின் வழக்கு தள்ளுபடியானது.
இரண்டாவது தடவை 1982ல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குருநகர் இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம், பனாகொட இராணுவ முகாம், வெலிக்கடைச் சிறை, மட்டக்களப்புச் சிறை யாவற்றையும் தரிசித்துள்ளேன்.
இனவாதிகளின் சமரசத்திற்கு இரையாகும் தமிழ் கைதிகள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 03 November 2015
- Hits: 5677
1. குற்றச்சாட்டு எதுவும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
2. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவராவது இருக்கும் பட்சத்தில் அவர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும்.
3. நீண்ட காலம் காரணமின்றி சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு "வாழ்வு" மறுக்கப்பட்டமைக்காக விடுதலையாகும் கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படல் வேண்டும்
4. அவர்கள் சமூக வாழ்வில் மீழிணைவதற்கான திட்டம் தகுதி வாய்ந்தவர்களுடைய ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படல் வேண்டும்.
நெவில் ஆனந்த (சட்டத்தரணி)
சுஜீவா தகநாயக்கா (சமூக சேவையாளர்)
முடிதா கருணாமுனி (பத்திரிகையாளர்)
குசல் பெரேரா (தொழிற் சங்கத் தலைவர்)
அன்ரன் மாக்குஸ் (சட்டத்தரணி)
சிறிநாத் பெரேரா
தொடர்புக்கு:- நெவில் ஆனந்த(சட்டத்தரணி)- 0777876811 - சுஜிவா தகநாயக்கா(சட்டத்தரணி) - 0777324062
அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! - யாழில் கருத்தரங்கு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 30 October 2015
- Hits: 1062
யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டன. யுத்தத்தை முன்னின்று நடாத்திய புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் சுதந்திரமா நடமாடுகின்றனர். இறுதி நேரத்தில் சரணடைந்த பலர் புனர்வாழ்வு முகாம்களிற்கு அனுப்பப்பட்டு விடுதலை பெற்றுள்ளனர். ஆனால் புலிகளுக்கு உதவியவர்கள், புலியாக இருக்குமோ என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களிற்க்காக கைது செய்யப்பட்ட மலையக-முஸ்லீம் - சிங்கள செயற்பாட்டாளர்கள் எந்த நீதியும் இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு தளுவிய ரீதியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிரச்சாராம்: சமவுரிமை இயக்கம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 02 November 2015
- Hits: 773
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பல போராட்டங்களை தொடர்ச்சியாக சமவுரிமை முன்னெடுத்து வருகிறது. போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவது தமிழ் - சிங்கள மொழிகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளது.
தோழர் கோவனை சிறையிலிட்ட சாராய வியாபாரி ஜெயாவை விரட்டுவோம்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 01 November 2015
- Hits: 3333
"மூடு, டாஸ்மார்க்கை மூடு" என்று பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோவனை கைது செய்திருக்கிறது பார்ப்பன சதிகாரி ஜெயலலிதாவின் அரசு. நம் சகோதரிகளின் தாலியறுக்கும் சாராயக்கடைகளை மூடு என்று பாடியதற்காக ஜெயலலிதாவின் அடிமைநாய்களான தமிழ்நாட்டு பொலிஸ் தோழரை கைது செய்திருக்கிறது. நம் தாய்மாரை மீளா வறுமையில் வாட்டும் மதுக்கடைகள் வேண்டாம் என்று சொன்னதற்காக அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.
HNDA மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து வடக்கு-கிழக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 01 November 2015
- Hits: 579
கடந்த வியாழன் 29/10/2015 அன்று கொழும்பில் பல்கலைக்கழக ஆணைக்குழு அலுவலகத்திற்கு, அதிஉயர் கணக்காளர் பட்டப்படிப்பினை (HNDA) மாணவர்கள் ஊர்வலமாக சென்று தமது கல்வி உரிமைக்காக மகஜர் ஒன்றினை சமர்ப்பிக்க சென்றிருந்த வேளையில் "நல்லாட்சி" அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகினர்.
அரசுகள் மக்களிற்காக என்று எந்த மடையன் சொன்னான்!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 01 November 2015
- Hits: 3015
மக்களால், மக்களிற்கு, மக்களின் அரசு தான் ஜனநாயக அரசு என்று படம் வரைந்து, பொருள் சொல்லி முதலாளித்துவ அரசிற்கு பொழிப்புரை சொல்வார்கள். இதிலே இந்த அரசுகள் பூமியிலே இருந்து என்றைக்குமே மறைந்து போக மாட்டா என்று ஆபிரகாம் லிங்கன் பயம் காட்டுகிறார். இவை மக்களிற்கான அரசுகள் இல்லை, முதலாளிகளிற்கான அரசுகள்; ஊழலில் ஊறிப் போன குள்ளநரிகளிற்கான அரசுகள்; மகிந்த ராஜபக்ச போன்ற கொலைகாரர்களிற்கு நாட்டின் தலைவர்கள் என்று பட்டம் கொடுக்கும் அரசுகள்; பசியிலும், பட்டினியிலும் வாழும் மக்களை ஆலையின் உருளைகளில் நசுங்கும் கரும்பு போலகசக்கிப் பிழியும் அரசுகள்.
மாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! (படங்கள்)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 30 October 2015
- Hits: 1273
இன்று (29/10/2015) கொழும்பு வாட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் நான்கு வருட கற்கை ஆண்டாக இருந்த தேசிய அதிஉயர் கணக்காளர் பட்டப்படிப்பினை (HNDA) மூன்றாண்டாக குறைத்து, இந்த கற்கை நெறியின் தராதரத்தை குறைத்துள்ளமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசானது தண்ணீர்த் தாங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தியதுடன்; கலகம் அடக்கும் விசேட படையினரை ஏவி விரட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளது.
இது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..?
இது தான் நியதி, இது தான் நியம்… இதற்காக எங்களை தயார்ப்படுத்த வேண்டும். இதன் வழியில் தான் நாமும் செல்ல வேண்டும். இப்படி எம் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கையினையே நாங்கள் ஏற்றுக் கொண்டு வாழப் பழகிவிட்டோம். காலம் காலமாக இப்படிப்பட்ட வாழ்க்கை முறையினையே இந்த முதலாளித்துவ அமைப்பு மிகவும் புத்திசாதுரியமாக தங்கள் தேவைகளை மக்கள் மீது திணித்து, அதனையே மக்களின் சாதாரண வாழ்க்கை முறைமையாக பழக்கப்படுத்தி, அதனையே மக்கள் ஏற்றுக் கொள்ள வைப்பதுவே முதலாளித்துவத்தின் அடிப்படை பிரதான கொள்கை முறையாகும்.
மாணவர்கள் போராட்டம் மீதான வன்முறையும் - அவதூறுகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 October 2015
- Hits: 2966
அதி உயர் கணக்காளார் பட்டப்படிப்புக்கான நான்கு வருடக் கல்வியை; உலக வங்கியின் தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அமைவாக, இந்த கற்கையை மகிந்த அரசு மூன்று வருடங்களாக்கியது. இப்படி மாணவர்களின் கல்வியின் தரத்தைக் குறைத்ததுடன், மேலதிகமான ஒரு வருடக் கல்வியை பணம் கொடுத்து கற்கக்கோரியது. தனியார் கல்வியை திருட்டுத்தனமாக புகுத்தி மாணவர்கள் மீதான நிர்ப்பந்தமாக மாற்றியது.