கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டம் தொடருகின்றது...
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2015
- Created: 15 November 2015
- Hits: 1570
தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரியும், அவரின் அடிபடைமனித உரிமைகளை கோரியும் தொடர்ச்சியான போராட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
"இடதுசாரிய வேலைத்திட்டத்தினை மக்கள் மயப்படுத்தல்": குமார் குணரத்தினம்.
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: தேர்தல் பதிப்பு
- Created: 23 November 2014
- Hits: 3396
தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.
பாரிஸ் தாக்குதலும் அதன் பின்னணியும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 14 November 2015
- Hits: 3361
பாரிஸில் கடந்த இரவு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலானது காரணகாரியமற்ற எதனுடனும் தொடபற்ற, அடிப்படைவாதத்தின் தன்னெழுச்சி சுயவடிமல்ல. மாறாக ஒரு நாணயத்தின் இருபக்கங்களேயான மத அடிப்படைவாதத்தினதும் ஏகாதிபத்தியவாதத்தினதும் பொது விளைவாகும். இவ் இரண்டும் பயங்கரவாதத்தைச் சார்ந்து இயங்குகின்றன. அதாவது தனிச்சொத்துரிமையை அடிப்படையாக் கொண்ட தத்தம் பொருளாதாரக் கொள்கையினை முன்னெடுக்கும் அதன் அரசியல் நடைமுறை வடிவம் தான் பயங்கரவாதமாகும்.
கடத்தியதை ஒத்துக் கொள்ளும் கோத்தபாயாவும் மறுக்கும் ஜே.வி.பியும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 13 November 2015
- Hits: 3113
2012 இல் குமார் மற்றும் திமுது ஆட்டிக்கல கடத்தப்பட்டு காணமல் போன நிலையில் அவுஸ்திரெலியாவின் தலையீட்டை அடுத்து கடத்தல் நாடகம் அம்பலமானது. குமார் நாடு கடத்தப்பட்ட அதேநேரம், திமுது ஆட்டிக்கல வீதி ஒன்றில் வைத்து விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின் பத்திரிகையாளரைச் சந்தித்த திமுது ஆட்டிக்கல வழங்கி அன்றைய பேட்டியானது, கோத்தபாய - ஜே.வி.பியின் கூட்டு கொலைகார கிரிமினல் தனத்தை அன்று அம்பலமாக்கியது.
செருப்படி நாராயணணிற்கு மட்டும் தானா?
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 08 November 2015
- Hits: 3214
தன் தமிழ்மக்கள் கொலை கண்டு எழுந்த துயரத்தில், அவர்களை துடிக்க துடிக்க கொன்ற கொலைகாரர்களின் மீது பொங்கிய கோபத்தில் பிரபாகரன் என்ற ஒரு மனிதன் நாராயணன் என்னும் இழிபிறவிக்கு செருப்பால் அடித்து தன் வஞ்சம் தீர்த்தான். ஜோர்ஜ் புஷ் என்னும் கொலைகாரனிற்கு ஈராக்கிய பத்திரிகையாளன் செருப்பால் அடித்து மரணித்த தன் ஈராக்கிய மக்களிற்கு மரியாதை செய்ததைப் போல பிரபாகரன் ஈழத்து மண்ணில் புதையுண்ட தன் மக்களிற்கு என்றும் உம் பகைவரை மன்னிக்க மாட்டோம் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார்.
போராடும் கைதிகளும், இணக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பின் சதிச்செயல்களும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 07 November 2015
- Hits: 3143
சிறையில் உள்ள கைதிகளை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்க மறுப்பதும், அவர்கள் அனைவரினதும் விடுதலை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுப்பதனை மறுப்பதும்; மக்களுக்கு செய்யும் துரோக அரசியலாகும். மைத்திரி-ரணிலுடன் இணக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பு முதல் புலம்பெயர் பினாமி அமைப்புகள் வரை மேற்குறித்த அரசியலை தான் இன்று செய்கின்றனர். சிறையில் அடைத்து வைக்கபபட்டுள்ள விசாரணைக் கைதிகள் முதல் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களே. இந்த அவசாரகாலச் சட்டத்தை நீக்கக்கோரிப் போராடாமல், கைதிகளின் விடுதலை பற்றி பொதுவாக பேசுகின்றவர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகளே.
அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 02 November 2015
- Hits: 1163
யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இன்றுவரை, யுத்தத்திற்கு பலியாகிய மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. காணாமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை, இடம் பெயர்ந்தவர்களின் பிரச்சினை, சொத்துக்களை இழந்த மக்களின் பிரச்சினை போன்றவற்றை தவிர அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அடக்குமுறை இயந்திரங்கள் தொடர்ந்தும் செயற்படுவதால் ஏற்பட்ட பிரச்சினைகள் அப்படியே உள்ளன. அவற்றில் அரசியல் கைதிகளை பற்றிய பிரச்சினை முக்கியமான ஒன்று. அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத நடவடிக்கையிலும் சமீபத்தில் ஈடுபட்டனர். அதே நேரம், அரசியல் கட்சிகள், வேறு அமைப்புகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றனர். சம உரிமை இயக்கம் கடந்த சில காலங்களாக இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யாது, சிலருக்கு மாத்திரம் பிணை வழங்க தாம் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் கடந்த வாரம் கூறியது.
சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்- நூல் அறிமுகமும் சில குறிப்புகளும்
நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றின் இடையேயுள்ள இருள்- பிரமிள்
ஈழப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவிற்கு வந்த ஈழத் தமிழர்களை இந்திய அரசும், தமிழக அரசும் எவ்வாறு நடத்தி வந்துள்ளன என்பன பற்றிய விபரங்களை உள்ளடக்கிய சமீபத்தில் வெளிவந்த இரண்டு நூல்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
தோழர் குமாரை விடுதலை செய்! லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 05 November 2015
- Hits: 860
நேற்றைய முன்தினம் (4/11/2015) தோழர் குமார் குணரட்னம் அவர்கள் சுகயீனமுற்றிருந்த தாயாரை பார்க்க சென்றிருந்த வேளையில் கோகாலை பொலீசாரால் கைது செய்யப்படட்டார். அவரை நாடு கடத்தும் முகமாகவே இந்த கைது நடவடிக்கையினை இலங்கை அரசு மேற்க்கொண்டிருந்தது. தோழர் குமார் அவர்கள் உயிராபத்து காரணமா அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்ற ஒருவர். நல்லாட்சி புதிய அரசு நாட்டை விட்டு அரசியல் காரணங்களால் வெளியேறிய அனைவரையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் இலங்கைக்கு திரும்பி வந்த தோழர் குமார் இலங்கை பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்.
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! – யாழ் கருத்தரங்கம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 05 November 2015
- Hits: 973
சமவுரிமை இயக்கத்தினரால் நேற்று மாலை 3:30 மணியளவில் யாழ் நூலகத்தில் அமைந்துள்ள உணவுச்சாலை கேட்போர் கூடத்தில்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கம் இடம்பெற்றது.
சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சந்திரகுமார் கபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி நிவாஸ், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சமவுரிமை இயக்க செயற்பாட்டாளர்கள் யூட் சில்வா புள்ளே, தர்மலிங்கம் கிருபாகரன், பூபாலபிள்ளை சந்திரகுமரன் உட்பட அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.