எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் தொடரும்: முள்ளிவாய்க்காலில் இறுதிவரை போராடிய பெண் போராளியின் நம்பிக்கை..!
முற்குறிப்பு:
ஜனனி செல்லத்துரையுடனான இந்தப் பேட்டி 2011 புரட்டாதி மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக் காரணங்களினால் கடந்த இதழில் இப்பேட்டி வெளியிடப்படவில்லை. தற்போது அவர் பாதுகாப்பான சூழலில் உள்ளதனால் அவரின் சம்மதத்துடன் இப்பேட்டி இங்கு பிரசுரிக்கப்படுகிறது. அத்துடன் அவரின் பெயர் மற்றும் தனிப்பட்ட விபரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் எழுச்சியை நசுக்கும் மேலைத்தேய மூலதன உரிமை
மேற்கத்திய நகரங்களை ஆக்கிரமிக்கும் மக்கள் போராட்டம் தற்போது நெருக்கடியைச் சந்திக்கின்றது. போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், அரசு அடக்குமுறை வடிவங்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றது. மேற்கத்திய நாடுகளில், மிகவும் நுணுக்கமாக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதுண்டு. எதிர்காலத்தில் புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக, சிலநேரம் அரசே இடதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும். அமெரிக்காவில் அந்த அதிசயம் நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர்கள், தாங்கள் வரி கட்டப்போவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதிக் கேட்கின்றனர்.
உன்னைப் போல், உன் கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி..!
அறுவைதாசனிற்கு நீரிழிவு, சலரோகம், சர்க்கரை வியாதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வியாதி வந்து விட்டது. எத்தனையோ மருந்து சாப்பிட்டும் அது கட்டுக்குள் அடங்கவில்லை. வைத்தியரைப் போய்ப் பார்த்தான். இரவு உணவு சாப்பிட்ட உடனே நித்திரை கொள்ளக் கூடாது. கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு பிறகு படும் என்று அவர் ஆலோசனை சொன்னார். அறுவைதாசன் அதைப் போய் மனிசியிடம் சொல்லி விட்டு இரண்டு பேரும் சேர்ந்து படுக்கப் போக முதல் உடற்பயிற்சி செய்வோம், உமக்கும் நல்லது தானே என்று மெதுவாக ஜஸ் வைத்தான். நீர் உடம்பை கொஞ்சம் அசைத்தாலே பெரிதாக சத்தம் போடுவீர், இந்த லட்சணத்திலே உமக்கு சேர்ந்து செய்ய வேணுமோ நீர் மட்டும் தனியாக வெளியிலே நடந்து விட்டு வாரும் என்று ஒரேயடியாக மறுத்து விட்டா. இந்தக் கவலையோடு இருந்த நேரத்திலே அய்யாமுத்து வந்து சேர்ச்சிற்கு போக வேண்டும் என்றான்.
ஈரோ நாணய நாடுகளின் நெருக்கடி முதல் தொடரும் எகிப்திய நெருக்கடி வரை
இதை நாம் தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது அவசியம். இதை ஏதோ நெருக்கடி, போராட்டம் என்று மட்டும் புரிந்துகொள்வது அறிவல்ல. என்னைப்போல், உன்னைப்போல் உள்ள மக்கள், அங்கு எதற்காக போராடுகின்றனர்? நாளை இதேபோல், உனக்காக நீ போராடும் சூழல் கூட ஏற்படலாம். இந்த உலகில் என்னதான் நடக்கின்றது? போராடும் மக்கள் வெற்றி பெறுகின்றனரா? வெற்றி பெற முடியவில்லை என்றால், என்னதான் காரணம்? சக மனிதனுக்கு நடப்பதை தெரிந்துகொண்டு, அவனுக்காக நாம் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இப்படித்தான் இருக்கவேண்டும் பெண்கள் தமிழ் கலாச்சாரக் காவலர்களின் கட்டளை!
யாழ்ப்பாணம் தமிழ்மக்களின் கலாச்சார குவிமையமாம் (வடமராட்சி யாழின் மூளை என்பதுபோல்) எப்படியும் வாழலாம்;;, ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் யாழ் மக்கள், அதிலும் பெண்கள்! இப்பேர்ப்பட்ட எம் மண் இன்று கலாச்சாரச் சீரழிவின். உச்சகட்டத்தில் உள்ளது என யாழின் ஊடகம் ஒன்று பெரும் கவலையாக செய்தி வெளியிட்டிருந்தது. இதை என்னே என்பது? உதை உயர் இந்து வேளாளத்தின் இறுகிய ஆணாதிக்க கருத்தியல் கொண்ட அலம்பல்களாக கொள்ளலாம்தானே!
அரசியல் அனாதையான கூட்டமைப்பின் வெற்றுவேட்டு; அரசியல் மேற்கை விடிவெள்ளியாக காட்டுகின்றது
பேரினவாதிகளும் கூட்டணியும் தமக்குள் கூடிக் கூத்தாடும் அரசியல் பித்தலாட்டம் அனைத்தும், போலி யானவை, புரட்டுத்தனமானவை. இவை அனைத்தும் அடிக்கடி பிசுபிசுத்தபடி அம்பலமாகின்றது. மக்களை அணிதிரட்டாத, தங்கள் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்லாத எந்தப் போராட்டமும், பேச்சுவார்த்தையும் தொடர்ந்து தோல்வி பெறும். இதுதான் எம் சொந்த வரலாறு.