என்னது, புலிகள் அனுதாபத்தோடு பார்த்தாங்களா!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3331
தோழர் நேசன் எழுதும் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையிலான எனது அனுபவங்கள் தொடரில் கீழ்வரும் வரிகள் வருகின்றன. “சிறிது நேர மெளனத்தின் பின்பு என்னையும், விபுலையும் ஒருவகை அனுதாபத்துடனும் அதேவேளை சிறிது அய்யத்துடனும் பார்த்தவாறு கிட்டுவும், திலீபனும் பேசத் தொடங்கினர்”. இது தோழர் நேசனின் அனுபவ வரிகள், அவருடைய பார்வை இது. ஆனால் கிட்டுவினதும், திலீபனினதும் அரசியலும் செயற்பாடுகளும் அவர்கள், மற்றவர்களை அனுதாபத்தோடு பார்க்கக்கூடிய மனிதர்களாக நமக்கு என்றுமே அடையாளம் காட்டியதில்லை.
அவதாரங்கள் இறக்கிறார்கள், கைதாகிறார்கள்!
அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.
அவதாரங்கள் இறக்கிறார்கள், கைதாகிறார்கள்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3436
அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.
சோனியா மாதாவே எங்களைக் காப்பாற்று!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3226
“நாய் வாலை நிமிர்த்த முடியுமா” என்றொரு பழமொழியை தமிழன் வைத்திருக்கிறான். வளைத்தால் என்ன? எழுப்பினால் என்ன? (வாலை) தமிழனிற்கு என்ன நட்டம் வந்தது என்று நாய்கள் நினைக்கக் கூடும். மிருகங்கள் தேவையில்லாமல் எந்தவொரு அசைவையும் செய்வதில்லை. மனிதர்கள், குறிப்பாக தமிழர் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிற்கு எல்லாமே வளைந்து சுருங்கிப் போய் இருக்கின்றது. இலண்டன் வந்த சோனியாவை உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றுமாறு முறையிட்டதாம். இந்த ஒன்றியம் எதனது வால் என்று எழுதத் தேவையில்லை. இவர்களது அரசியலே அதை தெளிவாக காட்டி நிற்கின்றது.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி பேசுகிறேன்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3231
பொதுவாகநாங்கள் கூட்டங்களில் பேசுவதில்லை. பேசத் தெரியாது என்பதற்காக இல்லை, நாங்கள் செயல் வீரர்கள். ஏதாவது பிரச்சனை என்றால் எங்களது துப்பாக்கிகள் தான் பேசும். எங்களது மேதகு தேசியத் தலைவரே தன்னிடம் யாராவது கேள்வி கேட்டால், பக்கத்தில் இருக்கும் தேசத்தின் குரலைத் தான் அண்ணே நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கோ என்று கைகாட்டி விடுவார். புலம்பெயர் நாடுகளில் கூட்டமென்றால் தமிழ் நாட்டிலிருந்து யாரையாவது கூப்பிட்டால் கொடுத்த காசிற்கு மேலாக கூவி விட்டு போய் விடுவார்கள்.
பத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி?
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3622
எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் நாங்கள் வெள்ளாளர். நீங்கள் கரையார். எங்கள் மகன் உங்களது மகளை காதலிக்கிறேன் என்று அடம் பிடிப்பதனால், தான் நாங்கள் வேறு வழியில்லாமல் உங்களது மகளை மணம் செய்ய எங்களது தராதரத்தை விட்டு இறங்கி வந்து சம்மதித்திருக்கிறோம். திருமணத்திற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மட்டும் தான் வரலாம். உங்களது உறவினர்கள் ஒருவரும் வரக் கூடாது. உங்கள் சாதிக்காரர்கள் திருமணத்திற்கு வந்தால் எமது சொந்த பந்தங்கள் எம்மைக் கேவலமாக பார்ப்பார்கள். இது நடந்தது இலங்கையிலோ அன்றி தமிழ் நாட்டின் தொலை தூரக் கிராமம் ஒன்றிலோ அல்ல. என்ன எங்கே என தலையை போட்டு குழப்புகின்றீர்களா?. இப்படியான கேவலம் நடந்தது லண்டனில் தான். லண்டனில் பிறந்து கல்வி கற்று தொழில் புரியும் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முற்பட்ட போது குறுக்கே வந்து குரைத்த ஒரு சாதி வெறிக் கும்பலின் கூச்சல்கள் தான் இவை.
நல்லூர் கந்தசாமியும், பாவாடை- தாவணியும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3801
அரசியல்வாதிகள் கொலைக்காரர்களாகவும், கொள்ளையர்களாகவும் இருக்கின்ற அதே போது கோமாளிகளாகவும் இருக்கின்றார்கள். வறுமையினாலும், வன்முறையினாலும் இறுகிப் போயிருக்கின்ற மக்களது வாழ்விலே; இவர்களின் கோமாளித்தனம் தான் ஒரே ஒரு ஆறுதலாக மனம் விட்டு சிரிக்கக் கூடிய மாதிரி நகைச் சுவையாக இருக்கின்றது. நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை ஒட்டி யாழ்மாநகர அம்மா விடுத்த அறிக்கையில் கோயிலிற்கு வரும் பெண்கள் தமிழ் பண்பாட்டின் படி பாவாடை- தாவணி, சேலை அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டது அரசியல்வாதிகளின் சின்னப் பிள்ளைத் தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
அயோக்கியர்களினது தேசபக்தி
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3158
தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது.
இலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் என்பவை மட்டுமே இக்கொள்ளையர்களின் இலட்சியம். இதற்கு எதிராக எவர் வந்தாலும் அவர்களை அழிப்பது என்பதே இக்கயவர்களின் கட்சிக் கொள்கை.
சாம்பல் பூத்த மேட்டில் இருந்து.....
நீர் கொழும்பின் கரையோரப் பகுதி. தென்னை மரங்களும், செம்மஞ்சள் மணலும், நீல கடலையும் கொண்ட, சர்வதேச புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்று. ஜே.ஆர்(J.R) ஆட்சியில் சர்வதேச நிதி மூலம் நீர்கொழும்பின் கரையோர பகுதி உல்லாசப்பயணிகளின் சொர்க்க புரியாக்கப்பட்டது.
வறுமை மிகுந்த மீன்பிடி கிராம மக்கள் தம் நிலங்களை, சர்வதேச உல்லாசப் பயண நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததுக் கொடுத்து விட்டு, நீர்கொழும்பின் உட் பிரதேசங்களில் குடி ஏறினர். கடற்தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாத இம் மக்கள் பலர் உல்லாச விடுதிகளில் கூலித் தொழிளார்காளாக அமர்த்தப்பட்டனர். ஆசியா அபிவிருத்தி வங்கி மூலம், அந்நியமொழி கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இளம் பெண்களும், ஆண்களும் விடுதிகளில் நாளாந்த பணி செய்யும் சேவையாளர்களாக ஆக்கப்பட்டனர்.
இலங்கை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு விசாரணை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 February 2012
- Hits: 2164
சிறைச்சாலையில்அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான