புத்தூர் கலைமதி-போராடும் மக்களும் இலங்கையின் ஊடக பிக்பாசுகளும். ஒருநாள் காட்சி .
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 17 September 2017
- Hits: 6206
யாழ். ரயில் நிலையம் மற்றும் பேரூந்து நிலையம்:
காலை 6.55 . 15.10.2017
எங்கும் சிங்கள மொழிக் குரல்கள். சிங்கள மொழிபேசும் சகோதர சகோதரிகள் நாகரீக உடைகளின் தமது லேப்டாப் பைகளை அழகாகத் தம் தோழ்களில் தொங்க விட்டபடி ஓட்டோ ரிக்ஸாகளில் ஏறி நகரின் பிரபல நட்சத்திர விடுதிகளுக் சொல்லுமாறு பணிகின்றனர். இவர்கள் அனைவரும் தெற்கின் புத்தி சீவிகளும் கலைஞ்யார்களுமாம். இவர்கள் திரைப்படம், கவிதை, அரசியல், சமூகவியல் , மனித உரிமைகள் போன்ற அனைத்து வியங்களிலும் வித்தகர்களாம். அதைவிட அவர்களிற் பலர் இலங்கையின் பிரபலமான பத்திரிகை நிருபர்களும், பத்தி எழுத்தாளர்களுமாம் . யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவுக்காக சில நாட்கள் யாழில் உள்ள நட்சத்திர விடுதிகளில் முகாமிடவுள்ளனராம்.
யாழ்.பஸ் நிலையம் :
காலை 8.00.
மூன்று சிறுவாகனங்கள் யாழ். பஸ் நிலையத்தை சுற்றி வருகின்றன. தாம் தேடியது காணக்கிடைக்காதவர்களாக, ஆட்டோ ஓட்டுநர்களிடம் புத்தூர் மயானதுக்கு எதிரான போராட்டம் எங்கு நடக்கிறதென விசாரிக்கின்றனர். விசாரணையில் எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. அவசர அவசரமாக யாழில். உள்ள தமக்கு தெரிந்தவர்களுடன் தொலைபேசி ஊடே தொடர்பு கொள்கின்றனர். இவர்களும் தெற்கில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், இவர்கள் பல்லினத்தவர்கள். இடதுசாரிக் காட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள். பூத்தூரில் உள்ள கலைமதி கிராமமக்கள் அவர்களில் ஊரின் நடுவில் இருக்கும் மயானத்தை அகற்ற போராடுகின்றனர். தமிழ் தலைமைகள், சமுக தலைவர்கள், மாகாண சபை அதிகார வர்க்கங்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாததனால், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றை யாழ் . மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண சபைக்கு முன்பாக நாடாத்த வந்துள்ளனர்.
குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம்
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 16 September 2017
- Hits: 796
குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுயாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம்.
අද (15.10.2017) උතුරු පළාත් සභාව ඉදිරිපිට උද්ඝෝෂණය. නේවාසික ප්රදේශයේ ආදාහනාගාරය එරෙහිව විරෝධය. පුතූර් බටහිර ;යාපනය.අද පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ මහ ලේකම් සේනාධීර ගුණතිලක මහතා ආදාහනාගාරයට එරෙහිව සටන් කරන ජනතාව වෙත ගොස් තිබේ. සම අයිතිය ව්යාපාරය සහෝදරවරුන්ට ද ආදාහනාගාරය එරෙහි සටන සඳහා සහය දක්වයි.
Today (15.10.2017),Protest in front of the Northern Provincial Council and Jaffna Disrict secretariet at Jaffna, against open wood-based crematorium in residential areas in Puthoor West, Jaffna . Frontline Socialist Party(FLSP) general secretary Seenadera Gunathilaka and Movement for equel rights(MER) leaders visited the people who are fighting against the crematorium. and more than 6 leftish party leders from hole Sri Lanka also gave their support to the people's struggle against the crematorium.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாகவும் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி புத்தூர் கலைமதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்.
ஏற்பாடு :- சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு
கலந்துக்கொண்ட கட்சிகள் அமைப்புகள் வருமாறு :
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி , முன்னிலை சோசலிசக்கட்சி , சமவுரிமை இயக்கம் -இலங்கை, சோசலிசக்கட்சி, ஜக்கிய சோசலிசக்கட்சி , சுயாதின இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, கலைமதி சன சமூக நிலையம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்ணனி, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் ஆகியவையாகும்.
காணொளிகளுக்கு உள்ளே செல்க
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்.
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 16 September 2017
- Hits: 749
மருத்துவக் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்காக இந்தியா முழுவதும் பொதுத் தரப்படுத்தல் பரீட்சையை (NEET) இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. திறமை இருந்தும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து இப் பரீட்சைக்காகப் பிரத்தியேக வகுப்புக்களில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் சித்தியடைய முடியாதுள்ளது. தமிழ்நாடு அரியலூர் மாணவி அனிதா 12 ஆம் வகுப்பு (Plus 2) தேர்வில் 1200 க்கு 1176 புள்ளிகள் பெற்றும் இந் நீட் நுளைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். எமது நாட்டில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆவதைச் சைட்டம் இல்லாமல் செய்திருப்பதைப் போல, இந்திய அரசின் நீட் தேர்வு அறிமுகத்தால் இந்திய ஏழை, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 13 September 2017
- Hits: 6584
1977 வரை இலங்கையில் அரசியலில், அரச நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்றன. ஆனால் பெரும்பாலும் அவற்றை விசாரித்துத் தண்டிக்கும் வல்லமையுள்ள ஒரு நீதி நிர்வாகம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. 1977ல் புதிய தாராளவாதப் பொருளாதாரத் திட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஊழல்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. அவற்றை பரவலாக்கப்படுத்துவதற்காக நீதித்துறையை அரசியல் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல் நீதித்துறை தனது சுயாதீனத்தை இழந்தது. “நீதி” நிதிக்கும், அநீதிக்கும், அராஜகத்திற்கும் சேவகம் செய்யத் தொடங்கியது.
இன்று நாட்டில் ஊழல் ‘நீக்கமற எங்கும் நிறைந்து’ காணப்படுகிறது. கிராம மட்டத்திலிருந்து தலைநகர் வரை ஊழல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரச நிர்வாக நடைமுறைகளையும் சுற்றி ஒரு நிழல் நிர்வாகம் இயங்குகிறது. இந்த நிழல் நிர்வாகம் ஊழல்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இந்த நிழல் நிர்வாகத்தை பணம்(லஞ்சம்) கொடுத்துத் திருப்திப்படுத்தாமல் அதனைக் கடந்து சென்று பொது மக்களுக்கான அரச நிர்வாகத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இதற்கு எதிராக ஒரு சாதாரண குடிமகன் ஒருவனால் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு சூழ்நிலையும் சுற்றாடலுமே இன்று இலங்கையில் காணப்படுகிறது.
“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 09 September 2017
- Hits: 6604
இலங்கையில் இன்று காணப்படும் “பிரச்சனைகளை” பட்டியல் போட ஆரம்பித்தால் அது ஒரு புத்தகமாகிவிடும். பிரதேச சபை தொடக்கம் அரசாங்கம் வரை குடிமக்கள் பல வகைப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக அதிகார துர்ப்பிரயோகம்-ஊழல்-நிதி மோசடி-இராணுவ பொலிஸ் அத்துமீறல்-சட்ட மீறல்-நீதி விலகல்-காணி-காணாமற் போனோர்-கடத்தப்பட்டோர்-கைதிகள்-அகதிகள்-பெண்கள்-குழந்தைகள்-ஒப்பந்தங்கள்-விசாரணைகள்-வழக்குகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என எழுதிக் கொண்டே போகலாம். இவை மத்தியில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி-சுகாதாரம்-வாழ்க்கைச் செலவு பாரிய பிரச்சனைகளாகும். இவைகளுக்கும் மேலாக எம்மை ஆளும் அரசாங்கத்திற்குள்ளே பிரச்சனைகள். அரசாங்கத்தின் திட்டங்களிலும் பிரச்சனைகள். இவை யாவற்றையும் ஊடறுத்தபடி நிற்கிறது இலங்கையின் “இனப்பிரச்சனை”.
இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வு நாட்டின் குடிமக்களின் புரிந்துணர்வு-நட்பு-தோழமை-கூட்டுறவு-கூட்டுழைப்பு என்பவற்றிலேயே தங்கியுள்ளது. அதற்கான முயற்சிகள்-முன்னெடுப்புக்கள்-போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. இதனால் மக்கள் அடக்குமுறைக்குள்ளாகி அடிபடுகிறார்கள். சிறைப்படுகிறார்கள். சட்ட விரோதமாக கைது செய்யப்படுகிறார்கள். அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். கடத்தப்படுவதற்கான முயற்சிகளும் இடம் பெற்று வருகின்றன.
தமிழனின் சாதிய மரபுகளும் சாதியப் பண்பாடுகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 September 2017
- Hits: 3535
யாழ்ப்பாணத்து தமிழனின் மரபு, சாதிய மரபேயாகும். தமிழனின் பண்பாடு, சாதியப் பண்பாடாகும். தமிழன் கோரிய தமிழீழத்தின் ஆட்சியதிகாரம் என்பது சாதியம் தான். தமிழ்த்தேசியம், தமிழன் என்ற அடையாள அரசியல் அனைத்தும் சாதியத்தைக் கோருகின்றது. “இனப் பிரச்சனைக்கு தீர்வு”, “உள்ளக-வெளியக சுயநிர்ணய உரிமை", “சமஸ்டி" தொடங்கி தமிழீழம் வரை எதைக் கோரிய போதும், அது யாழ் வெள்ளாளிய சாதிய சமூகத்தின் ஆதிக்க இருப்பை முன்வைக்கின்றது. தமிழனை தமிழன் அடக்கியாளும், சாதிய அதிகாரத்தையே கோரினர், கோருகின்றனர்.
சாதிய மரபுவழி வந்த சாதிய மயானத்தையே அகற்ற மறுக்கும் சாதிய அதிகாரத்தைக் கொண்டு, யாழ் அதிகார வர்க்கம் திமிர்த்தனமாக பதிலளிக்கின்றது. இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், தமிழனின் சாதிய மரபுரிமையைப் பாதுகாப்பது பற்றிப் பேசுகின்றனர். மரணித்தவர்களை எரித்த இடத்தின், சாதியப் புனிதம் குறித்துப் பேசுகின்றனர். காணிகள் மீதான சட்ட உரிமை பற்றிப் பேசுகின்றனர். தனிநபர்களின் நடத்தையே இந்த மயானப் பிரச்சனைக்கு காரணமென்று, காரணங்களைக் கற்பிக்க முனைகின்றனர்.
சாதியை பிறப்பில் தீர்மானிக்கின்ற கேடுகெட்ட இழிவான காட்டுமிராண்டித்தனமான சமூக அமைப்பே தமிழனின் மரபும், பண்பாடுமாகும். கோயில்கள் தொடக்கம் சடங்குகள் வரை, சாதி அடிப்படையில் பிறந்தவர்களைக் கொண்டு முன்னெடுக்கும், சாதிய ஒடுக்கும் பண்பாட்டைக் கொண்டு இயங்குகின்றது. இந்த சாதியத்தை தங்கள் மரபுகளாக கொண்டவர்களே, மயானத்தை தக்கவைக்க முனைகின்றனர். விதவிதமாக காரணங்களை முன்வைக்கின்றனர்.
மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 06 September 2017
- Hits: 3113
வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.
வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.
தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.
அனிதாவைப் பலியெடுத்தது எது!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 02 September 2017
- Hits: 3356
ஒடுக்கும் பார்ப்பனிய சாதிய தனிவுடமைச் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து வளர்ந்த ஏழைக் குழந்தையின் நீண்ட கனவுகள் சிதைக்கப்பட்ட போது, அனிதா கொல்லப்படுகின்றார். அதாவது தற்கொலை செய்யுமாறு தூண்டப்படுகின்றார்.
பார்ப்பனிய சாதிய மனுதர்மங்கள் காலாகாலமாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வியை மறுத்து வரும் பின்னணியில், அனைவருக்குமான இலவசக் கல்வி என்ற அரசின் கல்விக் கொள்கை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வி கற்கும் ஒரு சூழலை உருவாக்கியது. இப்படி கல்வி கற்கத் தொடங்கிய முதல் தலைமுறையின் கற்கும் உரிமையை, தனியார்மயம் மூலம் மீள மறுக்கத் தொடங்கி இருக்கின்றது அரசு. இதன் பலிக்கடா தான் அனிதா.
மாட்டு இறைச்சித் தடையென்பது, நவதாராளவாதத் திட்டமாகும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 30
- Created: 31 August 2017
- Hits: 860
இந்தியாவில் மாட்டு இறைச்சிக்கு கொண்டு வந்திருக்கும் சட்டரீதியான தடையைப் போன்று, அண்மைக் காலமாக இலங்கையில் முன்மொழியப்பட்டு வருகின்றது. முகமாற்ற நல்லாட்சியின் ஜனாதிபதியாக மைத்திரி தெரிவான காலத்தில், மாட்டு இறைச்சியை தடை செய்வது பற்றிய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து பலராலும் மாட்டு இறைச்சி தடை கோரப்படுவது தொடருகின்றது. அண்மையில் இலங்கையில் உருவான சிவசேனா தொடங்கி வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன் வரை, மாட்டு இறைச்சிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உண்பது தீட்டாகவும், தீண்டாமையாகவும் கருதுமளவுக்கு, யாழ் இந்து வெள்ளாளிய சாதியம் மேலோங்கி இருக்கின்றது. இதே போன்று பௌத்த அடிப்படைவாதிகளும், மாட்டு இறைச்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
மதரீதியான புனிதம் - சாதியத் தீண்டாமையும் தீட்டும் - மிருகவதை என்று பல்வேறு முகமூடியை போட்டுக் கொண்ட போதும், மாட்டு இறைச்சி உண்ணத் தடைக்கான உண்மையான காரணம், நவதாராளவாத பொருளாதாரத் திட்டமாகும்.
சைட்டம் எதிர்ப்பு தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஆரம்பம்
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 22 August 2017
- Hits: 836
மாலம்பே சைட்டம் நிறுவனத்தை தடை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி சைட்டம் மாணவர் மக்கள் இயக்கத்தினால் ஒழுங்கு செய்திருக்கும் தொடர்ச்சியான உண்ணாவிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்னாள் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டது.
தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதற்கு முன் அவ் வியக்கம் பாரிய ஆர்ப்பாட்டத்தை அவிவிடத்தில் மேற்கொண்டது.