மீரியாபெத்த மக்களுக்கு சுவிஸ் -இலக்கிய சந்திப்பு 2014 சார்பில் உதவிகள்
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: படிப்பகம்
- Created: 29 October 2015
- Hits: 725
இன்று (29.10.2015) மீரியபெத்த மண் சரிவு அவலம் நடைபெற்று ஒரு வருடமாகிறது. மண் சரிவால் பாதிக்கபட்ட மக்களில் பெரும்பான்மையானோர் இன்னமும் அகதிகள் போன்ற நிலையில், நிரந்தர வாழ்விட வசதிகள் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடம் சுவிஸ் -இலக்கிய சந்திப்பு 2014 இல் சேர்க்கப்பட்ட நிதி, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையின் அடிபடையில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்ய உபயோகிக்கப்பட்டது.
சாணகம் பூசும் தமிழ்த்தேசியம் முதல் இனியொருவின் அவதூறு வரை...
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 October 2015
- Hits: 3015
கருத்து முரண்பாடுகளும் - வேறுபட்ட அரசியல் நடைமுறைகளும் என்பது சமூக இயக்கத்தில் முரண்பாடானாதல்ல. இது கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்துடன் இருக்கும் அதேநேரம் - கட்சிக்கு வெளியில் ஜனநாயகமாக இயங்குகின்றது. இதில் இருந்து வேறுபட்டதே அவதூறுகள்.
நடைமுறையை மறுதளிக்க முடியாத, அதேநேரம் நடைமுறைக்கு எதிரான தனிநபர் கருத்தாக அரசியல் மாறுகின்ற போது, அவதூறை அரசியலாக்க முனைகின்றது.
இந்த வகையில் இனியொரு இணையம் அரசியல் வங்குரோத்தில் இறங்கி, தன் சுய கற்பனைக்கு ஏற்ப "பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும் அதன் பின்னர் அவரது புலம்பெயர் ஆதரவுக் குழுக்களுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது." என்ற, கற்பனையான அவதூறை முன்வைத்திருக்கின்றது. இப்படி அவதூறை அவர்கள் முன்வைப்பதற்கான இன்றைய அரசியல் சூழல் என்ன?
ஏகாதிபத்தியங்களின் கியூபா மற்றும் சிரிய மீதான அடாவடித்தனங்களை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்: முசோக
ஜக்கிய நாடுகள் சபையின் 28வது கூட்டம் கியூபா நாட்டின் மீது உள்ள பொருளாதார அரசியல் தடைகளை தொடர்வது எனத் தீர்மானித்துள்ளது. கியூபா மீதான அமெரிக்க முன்னெடுப்பான இந்த தீர்மானத்தால் கியூப மக்கள் பொருளாதார நெருக்கடியிற்குள் தொடர்ந்தும் அல்லல்படுகின்றனர். மேலும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளின் பின்னணியில் இயங்கும் ஆயுத குழுக்களின் உள்நாட்டு யுத்தத்தினால் பல மில்லியன் கணக்கான சிரியா மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஜரோப்பா நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இனியொருவின் பொய்களும், பொறுக்கித்தனங்களும்: ஆறுமுகநாவலன்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 25 October 2015
- Hits: 5425
"வெறுமனே மகிந்தவின் துணைப்படை போன்றதாக அல்லாமல் மகிந்தவுடன் ஆலோசனை நடத்தி கொலை செய்யும் அளவிற்கு பிள்ளையான் செயற்பட்டிருக்கிறார். பலம்மிக்க மாபியா பாணியிலான அமைப்புப் போன்று இயங்கி வந்த பிள்ளையான் குழுவிற்கு தென்னிந்திய பின்னவீனத்துவ அடையாள அரசியலின் ஆதரவும் இருந்து வந்திருக்கிறது. தவிர, பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும் அதன் பின்னர் அவரது புலம்பெயர் ஆதரவுக் குழுகளுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது".
அமெரிக்காவும், கத்தோலிக்க சபையும் சேர்ந்து காப்பாற்றிய இனப்படுகொலையாளி!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 24 October 2015
- Hits: 3003
அமெரிக்கா மகிந்த ராஜபக்சாவை இனப்படுகொலைக்காக தூக்கிலே போடும், செஞ்சோற்றுக்கடன் தீர்க்க நாங்கள் அமெரிக்க கொடியை தூக்குவோம் என்று ஜெனீவாவில் தமிழ் தேசிய அரசியல் விஞ்ஞானிகள் உலகம் எல்லாம் கொல்லும் அமெரிக்காவின் கொடியை கையிலே பிடித்துக் கொண்டு நின்றார்கள். இவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா வாழ்க என்று பஜனை பாடிக் கொண்டிருந்த இந்த ஐப்பசி மாதத் தொடக்கத்தில் தான் எல்லைகள் அற்ற மருத்துவ அமைப்பு (Medecins Sans Frontiers) ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரத்தில் பொறுப்பேற்று நடத்தும் மருத்துவமனையின் மீது குண்டு வீசி இருபத்திரண்டு அப்பாவிகளைக் கொன்றது. அமெரிக்க இராணுவம் குண்டு வீசத் தொடங்கிய போதே எல்லைகள் அற்ற மருத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் காபுலில் இருக்கும் நேட்டோ தலைமையகத்திற்கும், வாசிங்டனிற்கும் தொலைபேசியில் அறிவித்திருந்த போதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டன என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
அரசியல் கைதிகளின் போராட்டத்தை முடக்க முனையும் கூட்டமைப்பு
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 22 October 2015
- Hits: 3028
இனவாதிகள் மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பும், சிறைக்கைதிகளின் போராட்டத்தை முடக்க முனைகின்றது. சிறைக்கைதிகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கம்; கைதிகள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையில் கரிசனையுடன் செயற்படும் அமைப்புக்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை கொழுப்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்பாக நடத்தியது. இதன் பின்னர் பலதரப்பினரது போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடக்கும் நிலையில், சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்டப் போராட்டங்களை முடக்க அரசும்-கூட்டமைப்பும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.
ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 21 October 2015
- Hits: 5817
இலங்கையின் 1977 ஆவணி இனக் கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1978 அக்டோபர் 5ம் நாள் ஐ.நா.சபைக் கூட்டத் தொடரின் போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து மேடை ஏறிய திரு வைகுந்தவாசன் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.
"பேரவைத் தலைவர் அவர்களே! உலகத் தலைவர்களே!! தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்படும் நாடுகளைக் கொண்ட நாடுகள் உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது? அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்!
தொண்ணூறு வயது பயங்கரவாதியே, போய் வாரும் அய்யா!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 17 October 2015
- Hits: 3116
வீடுகளை எரித்த நெருப்பு அணைந்திடவில்லை
விம்மி அழுத குழந்தைகள் விழி மூட மறந்தன
தேடி வந்த கால்கள் தெருக்களில் அலைகின்றன
வெறும்கையினராய் நின்றவர் மேல் "போர் என்றால் போர் என்று"
கொடுங்குரல்கள் கொல்லச் சொல்லி ஆணையிடுகின்றன
மரத்தின் தொங்கும் கிளைகளின் கீழே நிழல் கவிவது போலே
மரணத்தின் இருள் பரவிய பாலைநிலத்தில்
தானைத் தலைவர்கள் தாமே என்றவர்கள் தலைகள் பதுங்கின
தமிழர் தேசத்தை வரைபடமாக்கிய ஒரு ஓவியக் கலைஞன்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 17 October 2015
- Hits: 6272
கரம்பன் கிராமத்தில் மண் குடிசையொன்றில் மூன்று ஆண், இரண்டு பெண் சகோதரங்களுடன் கூடப் பிறந்த ஒரு சிறுவனின் குடும்பம் வறுமையில் வாடியது. அவனுக்கு ஓவியக் கலை கை வந்த கலையாக அமைந்திருந்தது. ஆரம்பக் கல்வியைத் கரம்பன் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் பெற்றுக் கொண்ட அவனுக்கு ஆங்கிலக் கல்வியைத் தொடர வசதி இருக்கவில்லை. உறவினரான திருமறைச் சகோதரர் ஒருவருடைய ஆதரவுடன் அவன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லுரியில் எட்டாம் வகுப்பு வரை தனது ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொண்டான். பின்னர் ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையில் படிக்கும் போது 1942ல் அவனுக்கு வயது 18.
யாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு!
வன்னி யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் மற்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் ஏதுமின்றி குடும்பத்தினரும், உறவினரும் தகவல் அறிய முடியாமலும் அதற்க்காக போராட முடியாத நிலையிலும் இருந்த நிலையில் தெற்கிலிருந்து வந்த "மக்கள் போராட்ட இயக்கத்தின்" தோழர் லலித்துடன் இணைந்த குகன்- இருவரும் சேர்ந்தே முதன் முதலில் காணாமல் போனவர்களை தேடும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். காணாமல் போனவர்களின் உறவினர்களிற்கும், குடும்பத்தினருக்கும் காணாமல் போனவர்களின் விடுதலைக்காக போராட அன்று இருந்த அச்ச நிலையினை இவர்களின் போராட்டம் போக்கியது.