உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 17 October 2017
- Hits: 3336
மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.
இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.
மூலதனமே உலகம் என்றும், தனியுடமை சிந்தனையிலான வாழ்க்கை முறை என்ற 2000 ஆண்டுகள் வாழ்வியல் முறைமையை, 1917 வர்க்கப் புரட்சி கவிழ்த்துப் போட்டது. மனித உழைப்பைச் சுரண்டி உருவாகும் தனியுடமையும், அதனாலான மூலதனத்தின் திரட்சியுமே, மனித குலத்தை அடிமைப்படுத்தியுள்ளதை இந்தப் புரட்சி நடைமுறைரீதியாக எடுத்துக் காட்டியது. அதேநேரம் மார்க்சியத்தின் மெய்நிகர் தன்மையை புரட்சிகர செயலாக்கியது.
ஆனாலும் பொதுவுடமையை முன்வைத்து முன்னேறிய வர்க்கப் புரட்சி, தொடர்ந்து நீடிக்கவில்லை. ஆம், தனியுடமையால் தோற்கடிப்பட்டிருக்கின்றது. அதேநேரம் மார்க்சிய தத்துவத்தையும், புரட்சிகர நடைமுறைகளையும் முறியடிக்க மூலதனம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றது. மார்க்சிய தத்துவத்தை எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் வெல்ல முடியவில்லை. இது தான் உண்மை. இது தான் இந்த வர்க்கப் புரட்சி எமக்கு கற்றுத்தரும் எதார்த்தமும்; கூட. முதலாளித்துவத்திற்கு அச்சம் தருவது மார்க்சியமும், அதன் நடைமுறையுமே என்பது, உலகின் மெய்நிகர் உண்மையாக இருக்கின்றது. இதனாலேயே வர்க்கப் போராட்டங்கள் பாரிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றது.
சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட எதிர்கால இலக்கு
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 31
- Created: 15 October 2017
- Hits: 714
கல்வி மற்றும் சுகாதார சேவையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக வரலாற்றில் எழுந்த பாரிய மக்கள் இயக்கமாகிய சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட சைட்டம் திருட்டுக் கடைக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானமிக்க திருப்புமுனையை பதிந்துவிட்டு நாம் இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளோம்.
மாணவர் அமைப்பானது இப்போராட்டத்தில் கலந்திருப்பது பொதுவான சைட்டம் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டோ அல்லது சைட்டம் திருட்டு பட்டக் கடையின் சட்டபூர்வ தன்மை மற்றும் தரம் சம்பந்தமான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டோ அல்ல. கல்வி சம்பந்தமாக நீண்டகால கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே இப்போராட்டத்தோடு இவ்வியக்கம் கலந்திருக்கின்றது.
கல்வி என்பது ஒருவரை தொழிலுக்காக பயிற்றுவிக்கும் அடிமைத்தனமான பயிற்சியோ அல்லது பாத்திரத்தில் தண்ணீரை நிரப்புவது போன்று மாணவர்கள் மீது அறிவை நிரப்புவது அல்ல என்பதை ஒவ்வொரு கல்வியியலாளரும் விவாதமின்றி ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
கல்வி என்பது ஒருவருக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொண்டுவர மேற்கொள்ளும் ஆளுமை வளர்ச்சி என்பதாக அறிவியல் கல்வியின் வளர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கல்வி என்பது வெறுமனே அறிவு பரிமாற்றமல்லாத கற்பித்தல் செயற்பாடாகும். அதேபோன்று யுனெஸ்கோ உடன்பாட்டிற்கு அமைய கல்வி என்பது வாழ்வதற்கு கற்றுக் கொள்வதாகும். அதாவது கல்வி என்பது வாழ்க்கையாகும்.
கல்விக்கான உரிமை இழக்கப்படுவது என்பது வாழ்வதற்கான உரிமையை இழப்பதாகும். வாழ்க்கைக்காகவும் மனிதகுலம் வரலாறு பூராவும் பெற்றுக்கொண்ட கலாச்சார பொக்கிஷங்களுக்காகவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருப்பதால்தான் கல்வியானது அனைவருக்கும் உரிய மீறமுடியாத உரிமையாக இருக்கின்றது. வரலாறு பூராவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் வளர்ச்சிபெற்ற அறிவு தனியொரு மனிதனது முயற்சியின் பலனல்ல, சமூகம்சார் உழைப்பின் பிரதிபலனாகும். ஆகவே, அந்த அறிவை பெற்றுக்கொள்ள சமூகத்திற்கு உரிமை உண்டு.
தனியார்மய நடவடிக்கையின் ஊடாக கல்வியை வர்த்தகப் பண்டமாக்கும் போது சமூகத்திற்கு சொந்தமான இந்த உரிமை இழக்கப்படுகின்றது. அதேபோன்று ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உரித்தான கலாச்சார பாரம்பரியங்கள் இலாபத்தின் பின்னால் ஓடும் வியாபாரிகளின் தனிப்பட்ட சொத்துக்களாக ஆகிவிடும். கல்வி தனியார்மயத்தை நாம் எதிர்ப்பது அது ஒருபோதும் நெறிமுறைகளை கொண்டிராததால் மாத்திரமல்ல. அது சமூக முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதனாலும் தான்.
என்றாலும், “ஒஸ்கார் வைல்ட்” என்ற பிரபல எழுத்தாளரின் கூற்றிற்கு அமைய எந்தப் பொருளினதும் மதிப்பை அறியாத, ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க மாத்திரமே அறிந்த கேவலமான சமூகமொன்று உருவாவதன் ஊடாக கல்வியும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுவதும் விலைக்கு வாங்கப்படுவதுமாக உள்ளது.
இலங்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் இலவசக்கல்வி தொடர்பில் நீண்டகாலமாக நிலவிய பாரம்பரிய முறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. முன்பள்ளிக் கல்வி முற்றாக பணத்திற்கு பெற்றுக்கொள்ளும் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்பள்ளிக் கல்வி தொடர்பில் தரத்தை ஆய்விற்கு உட்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகியிருக்கும் நிலையில் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி குழம்பியுள்ளது.
நெத்தலி மீனை பிடிக்கும் - சுறாக்களை காப்பாற்றும் சட்டம் - மற்றும் சைட்டம்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 31
- Created: 14 October 2017
- Hits: 710
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் சமயத்தில் இரு வசனங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. ஒன்று ‘அநீதிக்கு எதிராதல்’. மற்றது ‘சட்டத்தின் ஆதிக்கம்’ என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அதாவது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது. என்றாலும் இந்த சட்டத்தின் ஆதிக்கம் மாலம்பே சைட்டம் திருட்டு பட்டக் கடை தொடர்பில் செயற்படுகின்றதா? இந்த வியாபார நிறுவனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், ஆரம்பத்திலிருந்தே இது நடைமுறை சட்டத்தை மீறி அமைக்கப்பட்டிருப்பதும், தொடர்ந்து சட்டவிரோத வேலைகளை செய்வதாலும் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இது விடயத்தில் சட்டத்தை செயற்படுத்தவில்லை என்பது தெரிகின்றது. இது தொடர்பிலான நூற்றுக்கணக்கான உதாரணங்களில் சிலவற்றை அலசிப் பார்ப்போம்.
1. முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் சைட்டம் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 2010 ஆகஸ்ட 09ம் திகதி முதலீட்டுச் சபையின் தலைவருடைய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மருத்துவ சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய 2008 மார்ச் 31ம் திகதி சைட்டம் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம் மற்றும் நிதியியல், பொறியியல், தொழிற்பயிற்சி, தாதியர், மொழிகற்கை மற்றும் சுகாதார விஞ்ஞான பாடங்களை கற்பிற்பதற்காக அனுமதி பெற்றுள்ளது. அந்நிறுவனம் மருத்துவ விஞ்ஞானத்தை கற்பிற்க அனுமதி பெற்றிருக்கவில்லை. அதன் பெயர் South Asian Institute of Technology and Management அல்லது தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் என ஆரம்ப அனுமதியில் குறிக்கப்பட்டது.
ஒடுக்கும் வர்க்கம் முன்வைக்கும் "சமஉரிமை" குறித்து!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 11 October 2017
- Hits: 3086
போலியான தேர்தல் ஜனநாயகம் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றவர்கள், சமூகப் பொருளாதார வர்க்கக் கட்டமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. இப்படி முகமாற்றம் மூலம் ஆட்சிக்கு வந்தவரே இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்;க. இப்படி ஆட்சிக்கு வந்த ரணில், "சமவுரிமை, சம அந்தஸ்து" மூலம் இன-மத முரண்பாட்டுக்கு தீர்வு காணப் போவதாகக் கூறியிருக்கின்றார்.
மறுபக்கத்தில் தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழ் தலைமையின் துணையுடன் ஆட்சிக்கு வந்த முகமாற்ற ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, இன-மத முரண்பாடுக்களுக்கு தீர்வைக் காண முடியும் என்று பொது நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தினர்.
மக்களை ஒடுக்கும் தமிழ்-சிங்கள தரப்புகள், பரஸ்பரம் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற அரசியல் பின்னணியானது, அமெரிக்க சார்பு நவதாராளவாத உலகப் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கான தடையற்ற பொதுக் கொள்கையைக் கொண்டதேயாகும்.
இந்த அரசியல் பின்னணியில் ரணில் "சமவுரிமை" மூலம் இன-மத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கின்றார். ஐந்து வருடங்களுக்கு முன் சமவுரிமை இயக்கத்தை ஆரம்பித்த போது, இன-மத பிரச்சனைக்கு சமவுரிமையே தீர்வு என்ற கொள்கையை முன்வைக்கவில்லை. மாறாக இன-மத ரீதியாக ஒடுக்கப்படும் தமிழ் மொழி பேசும் மக்களின் சமவுரிமைக்காக எல்லா இனத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம், தங்கள் பிரச்சனைக்கு தாங்களே தீர்வு காணும் அரசியல் நடைமுறையை முன்வைத்தது. இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பொதுப் புரிந்துணர்வுகளை உருவாக்கி வருகின்றது.
மொழியில் "தூய்மையையும், ஒழுக்கத்தையும்" கோரும் சிந்தனைமுறை குறித்து!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 04 October 2017
- Hits: 3222
மொழிக்கு வர்க்கம், சாதி, பால்.. கிடையாது. மொழி சமுதாய முரண்பாட்டுக்கு ஏற்ப, வர்க்கத் தன்மையைப் பெறுகின்றது. அதாவது ஒடுக்குபவனின் மொழியும் - ஒடுக்கப்படுபவனின் மொழியும், ஒரே உணர்வையும் உணர்ச்சியையும் கொண்டிருப்பதில்லை.
தமிழனின் கலாச்சாரம், பண்பாடு என்று முன்வைக்கப்படும் எல்லா வகையான "ஒழுக்கம் மற்றும் தூய்மைக்" கோட்பாடுகளும், நிலப்பிரபுத்துவ வாழ்வியல் முறையையும், அதன் மொழியையும் முன்வைக்கின்றது. இது முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை நிராகரிக்கின்ற, ஜனநாயக விரோத அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கின்றது. இந்தப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ வாழ்வியல் முறை சார்ந்த "ஒழுக்க மற்றம் தூய்மைக்" கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, மொழியியல் "ஒழுக்கத்தையும்", "தூய்மையையும்" கோருகின்றனர். ஒடுக்கும் தரப்பின் மொழிக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை ஒழுக்கமற்ற மொழியாகவும், இழிவு கொண்டதாகவும், பண்புகெட்டதாகவும், நாகரீகமற்றதாகவும், அருவருப்புக்குரியதாகவும் காட்ட முற்படுகின்றனர். அதாவது வெள்ளாளியச் சிந்தனையிலான நிலப்புரத்துவ "ஒழுக்க" மொழியை மீறுகின்ற போது, அதை தீட்டுக்குரிய சாதியக் கண்ணோட்டத்தில் முன்னிறுத்திக் காட்ட முற்படுகின்றனர். இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை விமர்சிப்பதன் நோக்கம், அந்த மொழி கொண்டு இருக்கும் ஒடுக்குவோருக்கு எதிரான அரசியல் உள்ளடக்கத்தை நிராகரிப்பதேயாகும்.
ஒடுக்கும் தமிழனுக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியும் - அதன் படிப்பினைகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 01 October 2017
- Hits: 3103
வெள்ளாளிய சிந்தனையிலான தங்கள் சாதிய மயானத்தைப் பாதுகாக்கவே, தமிழ் தேசியத் தலைவர்கள் முதல் தமிழ்தேசியவாதிகள் வரை தலைகீழாக நின்றனர், நிற்கின்றனர்.. தங்களது வெள்ளாளிய சிந்தனையில் நின்று, மயானத்தை அகற்றும் போராட்டத்தின் மீது காறி உமிழ்ந்தனர். தமிழ் தேசியம் மூலம் தாங்கள் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு, தீர்வுகளைத் தரமறுத்தனர், மறுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் தங்கள் சாதிய-வர்க்க மனப்பாங்கில் நின்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதுடன், திட்டமிட்டே போராட்டத்தை புறக்கணித்தனர். இதன் மூலம் சாதிய ஒடுக்குமுறையைக் கையாண்டனர். இப்படிப்பட்ட இந்த தமிழ் தேசிய சாதிய அரசியலை எதிர்த்துப் போராடியதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் வெற்றி பெறப்பட்டு இருக்கின்றது.
உழைக்கும் வர்க்கக் கட்சியின் தலைமையில் மக்கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியும் என்பதற்கு, இப்போராட்டம் சரியான எடுத்துக்காட்டாகும். நிலவும் சாதிய - சுரண்டல் சமூக அமைப்பு முறை மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது என்பதை, இந்தப் போராட்டம் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கின்றது.
வேண்டாம் வேண்டாம் பட்டக் கடை- வவுனியாவில் நேற்று சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பு
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 27 September 2017
- Hits: 916
சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பினால் வவுனியாவில் நேற்று (27.09.2017 ) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை தெரிவத்திருந்தனர்.
அங்கு பல்வேறு அமைப்புகள் தமது காட்டமான தமது எதிர்ப்புக்களை உரை வடிவிலும், ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு “வேண்டாம் வேண்டாம் பட்டக் கடை” போன்ற சையிட்டத்துக்கு எதிரான பல கோசங்களினூடு வெளிப்படுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை புகைப்படங்களிலும் உரையாற்றுகைகளின் ஒரு பகுதியை இங்கு காணொளியிலும் காணலாம்.
வெள்ளாளச் சிந்தனையிலான மயானங்களும் - முதலமைச்சரின் வெள்ளாளிய சிந்தனையும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 22 September 2017
- Hits: 3223
மயானங்கள் என்பது, பிணங்களை எரிக்கும் இடமென்றால், மயானப் பிரச்சனை வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருக்கும். யாழ்ப்பாணத்து மயானங்களின் பாரம்பரியம் குறித்து பேசுவதும், நிலவுடமை குறித்து மூன்றாம் தரப்பு அக்கறைப்படுவதும், மயானப்புனரமைப்பு பெயரில் சங்கங்கள் அமைப்பதும்.. வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய மயான அமைப்பு முறையை எடுத்துக் காட்டுகின்றது.
வெள்ளாளிய சிந்தனையிலான, வாழ்வியல் முறையிலான சாதிய மயானங்களை அகற்றக் கோரிய போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் புத்தூர் கலைமதிக் கிராமத்திற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வரவழைத்தது. அங்கு அவர் ஒடுக்கும் சாதியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான மக்கள் விரோத கருத்துக்களை முன்வைத்திருந்தார். வாக்களித்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது, வெள்ளாளிய சிந்தனையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஒடுக்கும் சாதியப் பிரதிநிதியாகவும் நடந்து கொண்டார். தனது சாதிய நடத்தைகளைக் கொண்டு தன்னை வேறுபடுத்தியதுடன், சாதியக் கண்ணோட்டத்திலான 'தமிழ் தேசிய' உரையை ஆற்றியிருந்தார். அவரின் சாதியக் கண்ணோட்டமானது
ஜே.வி.பியினதும் - புலிகளினதும் சாதியம் குறித்து அணுகுமுறை ஒன்றா!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 September 2017
- Hits: 3314
சாதி குறித்த விவாதங்கள், போராட்டங்கள் மேலெழுந்துள்ள நிலையில், கடந்தகால போராட்டங்கள் குறித்து தவறாக வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக விடுதலைப் புலிகள், மற்றும் ஜே.வி.பியின் சாதிய அணுகுமுறைகள் குறித்து தவறான கருத்துக்கள், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டம் குறித்தும், இடதுசாரியம் குறித்தும், சாதியம் குறித்தும், போராட்டங்களை அழித்த அரசின் நோக்கம் குறித்தும் தவறான அரசியல் தர்க்கம், சமூக விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு முரணாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
நடந்த ஆயுதப் போராட்டமானது, தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததாலா நடந்தது?
விடுதலைப் புலிகளும், ஜே.வி.பியும் "நடைமுறையில் உள்ள தேர்தல் அரசியலில் தமக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது என்று தெரிந்து ஆயுதப் போராட்ட வழியை பின்பற்றினார்கள்." என்று முன்வைக்கப்படும் கருத்து, நடந்த ஆயுதப் போராட்டம் குறித்து தவறான அரசியல் கண்ணோட்டமாகும். தேர்தல் அரசியலில் வாய்ப்பு கிடைக்காததாலேயே, ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று கூறுவதன் மூலம் இனவொடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறையை மறுதலிக்கின்ற அரசியல் உள்ளடக்கத்தை இது கொண்டு இருக்கின்றது. அதேநேரம் இந்த முரண்பாடுகளை தேர்தல் அரசியல் மூலம் தீர்வு காணமுடியும் என்ற கருத்தையும், ஆயுதப் போராட்டம் என்பது தவறானது என்ற பார்வையையும் முன்வைக்கின்றது.
மக்களை இனரீதியாக பிரித்தாளும் ஆளும் வர்க்க அரசியல் இனவொடுக்குமுறை செய்த பொதுப் பின்னணியிலும், தெற்கில் இனரீதியான வன்முறைகளை அரசு முன்னின்று நடத்திய வரலாற்று வளர்ச்சியிலேயே, இனரீதியான ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் ஒடுக்கப்பட்ட சூழலிலும், பாராளுமன்றம் மூலமான தீர்வுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னணியிலும், "தமிமீழத்துக்கான" ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. புலிகள் மட்டுமல்ல 32 இயக்கங்கள் தோன்றியதுடன், "இடதுசாரிய" இயக்கங்களும் உருவானது. இங்கு "தேர்தல் மூலம் வாய்ப்பு கிடைக்காததால்" இவை தோன்றியது என்று கூறுவது, எவ்வளவு முட்டாள்தனமான அரசியல் அபத்தமாகும்.
இங்கு விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில், கூட்டணியின் ஆயுதப்படையாகவே தோற்றம் பெற்றது. 1970 க்கு பிந்தைய 1980 வரையான காலகட்ட ஆயுத வன்முறைகளின் பின்னணியில், தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியின் வழிகாட்டல் இருந்ததுடன், அவர்கள் யாரைக் கொல்ல விரும்பினார்களோ அவர்களை திட்டமிட்டே புலிகள் கொன்றனர். இது தான் வரலாறு. அமிர்தலிங்கம் - பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்ததும், உலகறிந்த உண்மை. ஆயுதப் போராட்டம் என்பது, தமிழனை அடக்கியாளும் சொந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கூட்டணியின் அரசியலின் ஒரு அங்கமாகத் தோன்றியது. இங்கு அரசியல் ரீதியாக அமிர்தலிங்கம் - பிரபாகரன் இடையில், எந்த வித்தியாசமும் கிடையாது.
ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டம் என்பது, வரலாற்று ரீதியான இடதுசாரிய அரசியல் வழிமுறையில் இருந்து தோன்றியது. ஆயுதப் போராட்டம் குறித்து சீனப் புரட்சி மற்றும் காலனிய நாடுகளின் ஆயுதப் போராட்ட அனுபவங்களில் இருந்து தோற்றம் பெற்றது. இக் காலத்தில் உலகில் பல நாடுகளில் ஆயுதப் போராட்டங்கள் நடந்து வந்தது. ஜே.வி.பி பாராளுமன்றம் மூலம் வெற்றி பெற முடியாது என்பதால், ஆயுதப் போராட்டத்தை நடத்தியது என்பது வர்க்கப் போராட்டம் குறித்த தவறான புரிதலும், கண்ணோட்டமுமாகும்.
யாழ் புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் பிணம் எரிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 18 September 2017
- Hits: 988
18.09.2017 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை அகற்றக்கோரிய வழக்கு மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மயானத்தை அகற்றக்கோரி வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர் முன்வைத்த நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 04.06.2017 அன்று மல்லாகம் நீதிமன்றத்தால் 10 அடி உயரத்திற்கு சுற்று மதில் அமைத்து அதன் பின்னர் ஒரு வருடகாலத்திற்குள் GAS CHAMPER உடல்களை எரிப்பதற்கு நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஒரு வருடத்திற்குள் GAS CHAMPER பொருத்தப்படாவிட்டால் இவ் மயானத்தில் பிணம் எரிப்பது தடுத்து நிறுத்தப்படும். முக்கியமாக அப்பகுதியில் உள்ள மக்கள் அதை அனுமதித்தால் மட்டும் தான் மயானத்தை புனரமைக்க முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், புத்தூர் கலைமதி மக்கள் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 17.09.2017 இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கலைமதி மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை சத்தியாக்கிரக போராட்டமூடாக வலியுறுத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய நீதிபதி மக்களின் எதிர்ப்பையும் மீறி புனரமைப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான விவகாரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் யாழ்.மேல் நீதிமன்றுக்கு வருமாறு நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாக தெரிவித்திருந்தார்.