இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 5
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 03 March 2012
- Hits: 5527
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5
மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது
யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்டாலின் தூற்றப்பட்டார். ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிச இயக்கமும் படிப்படியாக யூகோஸ்லாவியா நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான். டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில், மக்களின் புரட்சிகர போராட்டங்ககளிலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளிலும், அமெரிக்காவின் சார்பாக அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 2
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 03 March 2012
- Hits: 5684
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 2
ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்?
ரஷ்ய ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது, 65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன், அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ளவர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.
அறிவாளிகளா, உளவாளிகளா?
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: புதிய கலாச்சாரம்
- Created: 02 March 2012
- Hits: 4059
சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.
ஆட்சியாளர்களை மாற்றுவது எமது எதிர்பார்ப்பு அல்ல - சமீர கொஸ்வத்த
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 01 March 2012
- Hits: 757
தற்போதுள்ள ஆட்சி முறையின் கீழ், ஆட்சியாளர்களை மாற்றுவது எமது எதிர்பார்ப்பு அல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடைய பாரிய வித்தியாசங்களை காணவில்லை. என மக்கள் போராட்ட அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமீர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – புலி – அரசு எதற்காக ஜெனிவாவில் கூடுகின்றனர்?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 28 February 2012
- Hits: 4751
வன்னி யுத்தம் குறித்த ராணுவ நடவடிக்கையினை திட்டமிட்டு வழிநடத்திய சர்வதேசம்
மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.
அமெரிக்கப்பிதாவும் இந்தியசெம்மறியும்.......
நீதியின் நேசவல்லவர்கள் கூடுதலும்
நீசர் ஆட்சியின் நெட்டூரம் காணுதலும்
கால ஓட்டத்தில் கைகோர்த்து நிற்றலும்
தேச வழமையாய் ஜெனிவாவில் ஆனது
அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 25 February 2012
- Hits: 3285
ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.
சாதியமும் தமிழ்த்தேசியமும் (பகுதி-2)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 25 February 2012
- Hits: 4199
ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட முன்னோடிகள்
“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” இக்கோசம் 70-ம். ஆண்டு தேர்தல் காலத்திலும், வட்டுக்கோட்டை மாநாட்டிலும் “தமிழ் ஈழத்திற்காக” ஓங்கி ஒலித்தது. தமிழர் கூட்டணியின் அன்றைய பிரச்சார மேடைகளின்” ஆஸ்தான கவிஞர் காசியண்ணா அவர்களால் இளைஞர்களை உசுப்பேத்துவதற்கும் பாடிய வரிகளாகும்.
ஜெனீவாவில் ஸ்ரீலங்கா: தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்?
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 25 February 2012
- Hits: 7674
சுதந்திரத்தின் பின்பு ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமூகத்திற்கும் அதன் கருத்தியல் வடிவமான ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைக்கும் புதிய விஷயம் அல்ல. ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முதல் விவாதம் 1986 இல் ஐ. நா. சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடைபெற்றது. இதற்கான தீர்மானத்தை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டு வந்த நாடு ஆர்ஜென்டீனா. தீர்மானத்தை கொண்டு வருவதில் பின்னணியில் தீவிரமாக இயங்கிய நாடான இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. அப்போதைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் நண்பர்களாகவிருந்த அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவர்களுடைய சொல் கேட்ட பல ஆபிரிக்க நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் – 15)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 February 2012
- Hits: 5410
இயற்கையில் இருந்து நாம் நுகரும் பொருட்களை, மனிதனின் உழைப்பே உருவாக்கின்றது. உழைப்பு இயற்கை மீது நிகழ்கின்றது. இப்படி உழைத்து உருவாக்கிய பொருட்கள் மீது, மனிதன் ஆளுமை செலுத்த தவறிய ஒரு உலகில் நாம் வாழ்கின்றோம்;. மாறாக பொருட்கள் மனிதன் மேல் ஆளுமை செலுத்துகின்றது. தன் கையால் உருவாக்கிய பொருட்களின் அடிமையாகிய பரிதாபம், மனித சமுதாயத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளது.