கும்பகர்ணனும் கூட்டமைப்புத் தலைவர்களும்…!
இராமாயணத்தில் கும்பகர்ணன் பிரமதேவரிடம் நித்தியத்தவம் வேண்டும் என கேட்க எண்ணி, நா புரண்டு நித்ரத் தவம் கேட்டதால் வாழ்நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் தவத்தினை பெற்றான். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பாட்டிற்கு மட்டும் கண் விழிப்பான். இந்த கூட்டமைப்பு யாரிடம் வரம் பெற்றார்களோ தெரியவில்லை. வருடக் கணக்கில் தூங்கிவிட்டு தேர்தல் காலங்களில் மட்டும் எழுந்திருப்பார்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு மக்களைப் பற்றிய கருசனை வரும்.., தமிழ்மக்களின் அரசியற் தீர்வு ஒன்று தேவை பற்றிய சிந்தனை ஞாபகத்திற்கு வரும்.., மக்களோடு பேச விருப்பம் வரும்.
இப்போது இடைக்கால வரைபு பற்றி விவாதிக்கிறார்களாம், ஒற்றையாட்சி நாடு தவறு, ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி.., அதிகாரப்பகிர்வு பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களாம். இதைப் பற்றி மக்களோடு பேசவே இவர்களுக்கு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கு. இனி அடுத்த தேர்தல் வரை இது பற்றி விவாதிப்பார்கள். அடுத்த தேர்தல் நெருங்கியதும் கும்பகர்ணன் சாப்பிட எழுந்தது போல் திடீரென மக்கள் முன் தோன்றி சமஷ்டி வரைபின் இறுதிப் பக்கத்தினை முன்வைப்பார்கள். முதுகெலும்பு இல்லாத ஊடகங்களும் விவாதங்களை நிகழ்த்தி இன்றைய கேள்வியை அன்றைய நிலைக்கு தக்க மாதிரி மாற்றிக் கேட்டு மக்களை முட்டாளாக்கி தங்கள் பிழைப்பினை தக்கவைத்துக் கொள்வார்கள். மக்களுக்கும் ஏமாற்றம் பழக்கப்பட்டு போனதால் மக்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். மக்களின் இந்த மௌன நிலை தான் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களிற்கும் கிடைத்திருக்கும் பெருங்கொடை.
உலகில் பிரபலமான பெண்கள் மேலான பாலியல் வன்முறை குறித்து
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 02 February 2018
- Hits: 5320
முதலாளித்துவ சமூக உச்சத்தில் இருக்கின்ற பெண்கள் மேலான பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்கள், அங்குமிங்குமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இதில் ஈடுபட்டவர்கள் முதலாளித்துவ அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.
இந்த சமூகப் பின்னணியில் குற்றங்கள் நடந்தவுடன், அதைச் சட்டரீதியாக எதிர்கொண்டு தண்டிக்க முடியாத பெண்களாகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்திருக்கின்றார்கள். இது எமக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது? முதலாளித்துவம் குறித்தும், அதன் புனித நீதி குறித்த பொய்மையை அம்பலமாக்கி இருக்கின்றது.
முதலாளித்துவ சமூக அமைப்பின் உச்சத்தில் உள்ள பெண்களைக் காட்டி, அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும், பெண் விடுதலையைப் பெற்றவர்களாகவும் முன்னிறுத்துகின்ற பொதுப் பின்னணியிலேயே, பாலியல் குற்றங்களும் அவற்றை இந்தப் பெண்களால் தண்டிக்க முடியாத அவலமும் வெளிவந்திருக்கின்றது.
முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த கற்பனைகளை எல்லாவற்றையும் இது போட்டு உடைத்து இருக்கின்றது. அதேநேரம் ஆணாதிக்க முதலாளித்துவ சமூக உச்சத்திற்கு பெண்கள் முன்னேறுவதற்கு, பாலியல் ரீதியாக ஏதோ ஒரு வகையில் இணங்கியாக வேண்டிய, பொது எல்லையில் தான் பெண் வாழவைக்கப்பட்டு இருக்கின்றாள் என்பதை அம்பலமாக்கி இருக்கின்றது.
சமவுரிமை இயக்கத்தின் பெயரில், மக்களை ஏமாற்றி வாக்குப் பெற முனையும் இன-மத-சாதி வாதிகள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 28 January 2018
- Hits: 5433
யார் "தூய கரங்கள் தூய நகரங்கள்" என்ற கோசத்தை முன்வைத்து வாக்கு கேட்கின்றனரோ, அவர்கள் சமவுரிமை இயக்கத்தின் பெயரிலும் இன்று வாக்கைக் கோருகின்றனர். (பார்க்க அவர்களின் துண்டுப்பிசுரங்களை) இவர்கள் எப்படிப்பட்ட போலியான மோசடிப் பேர்வழிகள் என்பதும், கறைபடிந்த அரசியல்வாதிகள் என்பதும், இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது. இவர்கள் முன்வைக்கும் "தமிழ் தேசியம்" கூட, இதைப் போன்ற வாக்குப் பெறுவதற்கான பித்தலாட்டத்தாலானதே. மக்களை ஏமாற்றி வாக்குப் பெறுவதற்காக எதையும் செய்யவும், மக்களை ஏமாற்றவும் முனைகின்ற முடிச்சு மாறிகளே இவர்கள்.
மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்காக சமவுரிமை இயக்கத்தின் நேர்மையான கடந்தகால போராட்டத்தைத் தமதானதாகக் காட்டி அறுவடை செய்ய எண்ணும் போது, அவர்களிடம் நேர்மையான அரசியல் எதுவுமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. பிறர் மக்களுக்காக நடத்திய போராட்டத்தைத் திருடி, அதை தமதானதாக இட்டுக்கட்டிக் காட்டுவதைத் தவிர, மக்களுக்காக நடைமுறையில் போராடுகின்ற எதையும் அவர்களால் முன்வைக்கவும் - காட்டவும் முடிவதில்லை. இங்கு சமவுரிமை இயக்கத்தின் போராட்டம், மக்கள் மத்தியில் தனித்து நிற்பதுடன்;, சமூக ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தி நிற்பதால், அதை தமதானதாகக் காட்ட முற்படுகின்றனர்.
கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 25 January 2018
- Hits: 6851
ஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை அணுகும்போதெல்லாம், இயல்பு மொழியானது சிங்களமாகவே உள்ளது. நீmgங்கள் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தும் போதெல்லாம், சாலைகள் மற்றும் இடங்கள், இப்போது புகழ்பெற்ற கட்டிடங்களின் பெயர்கள்கூட சிங்களத்தில் தான் தரப்படுகிறது. யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள சுண்ணாகம் என்கிற இடத்தை தேடினால் கூகுள் வரைபடம் அந்த இடத்தின் பெயரை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து ஹ_ணுகம (சுண்ணாம்பு ஊர்) என்று தெரிவிக்கிறது - பல மட்டங்களிலும் தவறானது. தமிழ் இடங்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை, யாழ்ப்பாணம் யாப்பன எனும் சிங்களப் பெயரைப் பெறுகிறது, அதே சமயம் அங்கிருந்து ஒரு கல்லெறியும் தூரத்தில் உள்ள நல்லூருக்கு மட்டும் தமிழ் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கூட கூகுள் வரைபடங்களில் ஒரு சேரிடத்தை குறித்து, அங்கு செல்வதற்கான ஓட்டுனர் வழிமுறைகளைப் பாருங்கள்;. உதாரணத்திற்கு நான் வசிக்கும் இடத்தில் இருந்து கொழும்பில் ஒரு இடத்தை அடையவேண்டி கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தினால் கிடைக்கும் அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் கலந்த ஒரு விசித்திரக் கலவையாக உள்ளது - நான் செல்லவேண்டிய ஒரு பாதை ஆங்கிலத்தில் சொல்லப்படும் அதேவேளை மற்றொரு அறிவுறுத்தல் முற்றிலும் சிங்களத்தில் தரப்படுகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் சிங்களத்தில் உள்ள எழுத்துக்களை சரளமாக வாசிக்க முடியாதவர்கள் ஏன் இதில் மொழிமாற்றம் செய்வதற்கான தெரிவு இல்லை என்று சொல்லி தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை போராட அணிவகுப்போம்.
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 21 January 2018
- Hits: 1061
பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை
போராட அணிவகுப்போம்.
நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.
புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.
யாருக்கு வாக்களிப்பது!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 13 January 2018
- Hits: 5683
மக்களின் அன்றாட சமூகப் - பொருளாதார வாழ்வுடன் ஓன்றுபட்டு ஒன்றி வாழ்வதும் - போராடுவதுமே அரசியல். இந்த வகையில் சமூக செயற்பாட்டாளனாக மக்களுடன் மக்களாக தன்னை அர்ப்பணித்து ஒன்றி வாழாத ஓருவன், தேர்தல் மூலம் வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றப் போவதாகக் கூறுவதே மோசடியாகும். இதுதான் இன்று தேர்தல் அரசியலாக இருக்கின்றது. இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது தேர்தலாகவும், அதில் வெற்றி பெறுவதே சமூக சேவையாகவும் இட்டுக் காட்டுகின்றனர். இந்த அரசியல் பின்னணியிலேயே, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதையே ஜனநாயகமாகவும் காட்டுகின்றனர்.
இன்று உள்ளுராட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கி இருக்கின்றவர்களில் 99.9 சதவீதமானவர்கள், மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த சமூக நடைமுறைகளில் ஈடுபடாதவர்கள். தேர்தல் மூலம் கிடைக்கும் அரசு அதிகாரங்கள் மூலம் மக்களை மொட்டை அடிக்கவும், தங்கள் சொந்த வாழ்க்கையை செழுமைப்படுத்தவுமே களமிறங்கி இருக்கின்றனர். தேர்தல் மூலம் வெல்வது என்பது, இலகுவாக பணத்தை சுருட்டிக் கொள்வதற்கான இடமாக மாறி இருக்கின்றது.
மரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 11 January 2018
- Hits: 6369
கத்தோலிக்க மதப் பின்னணி எனக்கு இருந்ததனால் மரிய மதலேனா பற்றி கொஞ்சம் தெரியும். 8ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்பு படிக்கிற காலத்தில வாணி, சரஸ்வதி, மாதவி, பாரதி, வாகதீஸ்வரி, மாலினி எண்டு, கொஞ்ச பொம்பிளைப்பிள்ளையளுக்கு பின்னால திரியேக்க, அவயட சமய புத்தகத்தில இருந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாயன்மார் பற்றிய கதைகளை வாசிக்கும் போது, மேலோட்டமாக அறிமுகமானவர் தான் ஆண்டாள் என்கின்ற கோதை. கொஞ்சம் வயது வந்த பின்னாடி, மரியா மதலேனாவைப் பற்றியும் ஆண்டாளைப் பற்றியும் நான் "விபரமாக" தெரிஞ்சு கொண்டது சினிமா திரைப்படங்கள் ஊடாகத் தான்.
எனக்கு இன்றைக்கும் ஆண்டாள் என்றால் நினைவில் வருவது, பாரதியின் "காக்கை சிறகினிலே நந்தலாலா" என்று பாடியபடி திருமால் பெருமை படத்தில் தோன்றிய கே.ஆர்.விஜயா தான்! சிவாஜி ரசிகனான நான் அநேகமாக எல்லாப் படங்களையும் அவருக்காகவே பார்த்திருக்கிறேன். ஆனால், திருமால் பெருமை என்ற படத்தை நான் பலதடவைகள் கே.ஆர்.விஜயா நடித்த ஆண்டாளுக்காகவே பார்த்திருக்கிறேன்.
இப்படத்தால் ஏற்பட்ட "பாதிப்பால்" ஆண்டாளை பற்றி தேடியிருக்கிறேன். ஆண்டாள் திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் வரும் பல வரிகளை என்னால் இப்போதும் மனப்பாடமாக கூறமுடியும். எனக்குத் தெரிந்த இலக்கியம் பற்றிய உலகவரலாற்றில், பல நூறாண்டுகளுக்கு முன்பேயே, காதலால்-காமத்தால் கவிதைப் பெருக்கெடுத்து, ஆணை object தன் ஆளுமைக்கு உட்பட்ட பொருளாக்கி - அல்லது ( கண்ணன்/கிருஸ்ணன் என்ற) கடவுளையே தன் காதல்-காம வெளிப்பாட்டுக்கான object - பொருளாக்கி பாடிய பெண்ணைப் பற்றிய பதிவை நான் வாசிக்கவில்லை.
போராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது
- Details
- Category: போராட்டம் பத்திரிகை
- Created: 09 January 2018
- Hits: 1015
போராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது.
கட்டுரைகள்
1. ஏமாறாதிருப்போம்! எழுந்து நிற்போம்
2. துன்பமும் போராட்டமும்
3. சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு
4. அவர்களின் வருமானமும் எமது செலவீனமும்
5. உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆம் ஆண்டு
6. கட்சிகளுக்கான அரசியலும், மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்
7. யார் யாருடைய வயிற்றுக்குள்? அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்
8. கலைமதி கிராமத்தின் சுடலைக்கு எதிரான போராட்டமும்-வெற்றியும், இடதுசாரிய இயக்கமும்
9. தேர்தல் வரும் பின்னே! தீர்வு(அரசியல் யாப்பு) வி(இன)வாதம் வருகிறது முன்னே!
10. வேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்
11. யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?
12. 2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் நிலைப்பாடும்
13. இனவாதம் பலவிதம் - ஐக்கியப்பட வேண்டிய தருணமிது
"தூய கரங்கள் - தூய நகரங்கள்"
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 31 December 2017
- Hits: 5703
சாதிய சமூகத்தில் "தூயது" என்பது, ஒரு பாசிசக் கருத்தியலே. தமிழன் என்ற "தூய" கருத்தியலும் - வாழ்வுமுறையும், பிற இன மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகத்துக்கு எதிரான மனித விரோதப் பண்பாட்டையும் - நடைமுறையையுமே முன்வைக்கின்றது.
"தூய" தமிழர் என்ற ஒடுக்கும் சாதிய கருத்தியலானது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சாதியத்தில் இருந்து சமூகத் தூய்மையைக் கோருகின்றது. இந்த தூய்மைவாதமே பிற பண்பாட்டு கூறுகளுக்கு எதிராக, கோயில்களில் புனிதத்தை முன்வைக்கின்றது. அந்தந்த சாதிக்குள்ளான சாதிய வாழ்க்கை முறைமையையே தூய்மைக் கோட்பாடு முன்வைக்கின்றது. மனிதன் உண்ணும் உணவில், புனிதத்தையும் தூய்மையையும் முன்வைக்கின்றது. எதைக் கடவுளுக்கு படைக்கலாம் என்ற, சாதிய வக்கிரத்தையும் சமூகத்தில் புகுத்துகின்றது.
கூட்டமைப்பு மூலம் தமிழ் மக்களை அடக்கியாளும் அதிகாரத்தைப் பெறமுடியாத அணியினரின் கோசம் தான் "தூய கரங்கள் - தூய நகரங்கள்" என்பதாகும். யாழ் மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் மூலம் முன்வைத்திருக்கும் இக்கோசமானது, அவரினதும் - அவர் கட்சியினதும் கடந்தகால கொள்கையும் நடைமுறையுமாகும். இந்த பின்னணியில் அவர்கள் "மாற்றத்துக்காய் வாக்களியுங்கள்" என்று கோருகின்றார். சரி எந்த மாற்றத்துக்காக?
சுரண்டலற்ற மனித சமுதாயத்துக்காகவா!?, சாதிகளற்ற மனித வாழ்வுக்காகவா!?, நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான "தமிழ்" தேசிய பொருளாதாரத்தை உருவாக்கவா!?, இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராடவா!? மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்கவா!? யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான யாழ்மையவாத சமூகத்தை மாற்றி அமைக்கவா!? இல்லவே இல்லை. இருக்கின்ற பிற்போக்கான யாழ் மேலாதிக்க வெள்ளாளிய சாதிய சமூகத்தை தக்க வைக்கவும், அதற்கு தலைமை தாங்கவுமே வாக்கைக் கோருகின்றனர். அவர்கள் போடும் வேசங்களைக் கடந்து, இதுவே தான் உண்மை.
மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன வெள்ளாளிய இந்து சாதிய சமூக அடிப்படையில் இருந்தே, வேள்வித் தடையைக் கோரி வழக்கு தாக்கல் செய்தது முதல், சாதிய மயானங்களைத் தக்க வைக்கும் வண்ணம், அண்மைய போராட்டங்களுக்கு எதிராக சாதிய அடிப்படைகளை உயர்த்திப் பிடித்தவர். இது தான் அவர் நிற்கும் கட்சியின் வரலாறும் கூட.
முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 24 December 2017
- Hits: 5512
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.
பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம் அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.