முன்னோக்கி செல்லும் இலவசக் கல்வி-சுகாதாரத்திற்கான போராட்டம்- (மாணவர் இளைஞர் சமூக இயக்கத்தின் வாழ்த்துச் செய்தி)
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 12 November 2017
- Hits: 994
சிறிலங்காவில் SAITM எனும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மூடக் கோரி நடந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இலவசக் கல்வியையும்,இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இப்போராட்டம் நடைபெற்றது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் வழிகாட்டலில் "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்" முன்னெடுத்த இப்போராட்டம் இலவசக் கல்வியைப் பாதுகாக்க உலகெங்கும் போராடும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.
சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல்,அடக்குமுறை,வெள்ளை வேன் கடத்தல் முயற்சிகள் என இப்போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் மாணவர்கள் முறியடித்தனர்.
"சயிட்டத்திற்கு எதிரான மாணவர் மக்கள் இயக்கம்" எனும் வெகு மக்கள் அமைப்பின் தோற்றம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோரையும் போராட்டக்களத்திற்கு கொண்டு வந்தது.சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டதால் அரசுக்கு அழுத்தம் கூடுதலாகியது.
தற்போது அரசு சயிட்டம் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.அரசு தனது வாக்குறுதியில் இருந்து தவறினால்,மீண்டும் போராட்டம் தொடங்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாளித்துவ - புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியான இத்திட்டத்தை முறியடித்த மாணவர்களை வாழ்த்துவோம்.
மாணவர்களுக்கு அரசியல் வழிகாட்டல் வழங்கி அவர்களுக்கு அரணாக இருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் எமது வாழ்த்துக்கள்.
(மாணவர் இளைஞர் சமூக இயக்கம்)
-SYSM-Students Youth Social Movement
துன்பமும் போராட்டமும்…
பல ஆண்டுகளாகப் போராடிய மாணவர்கள் இன்று தங்கள் கல்வி உரிமையினை வென்றெடுத்துள்ளார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது மக்கள், இடதுசாரிய அமைப்புக்கள், முன்னிலை சோசலிசக் கட்சி துணை நின்றார்கள். அதிலும் சில மாணவர்கள் அடக்குமுறைவாதிகளால் ஆதாரம் அற்ற முறையில் கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் மிக ஏழ்மைக் கோட்டில் வாழும் குடும்பத்தினை சேர்ந்தவர்கள். ஏழைகளின் உயிர்கள் மற்றும் பொது மக்களின் உயிர்கள், அரசியல்வாதிகளுக்கும், மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் பண முதலைகளுக்கும் எதுவுமே இல்லாத ஒன்றாகிவிட்டது. மக்களுடைய இழப்புக்களை, கஸ்ரங்களை, துயரங்களைப் பொருட்படுத்தாத அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு என்ன பயன்? புதவியைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை இல்லாது ஆக்குவதும், முடிந்த வகையில் பொதுமக்கள் உழைப்பினை சுரண்டுவது, உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடையாளம் இல்லாது ஆக்குவது, நாட்டினை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை பல வழிகளில் வருத்தி துன்புறுத்தி, கொள்ளை அடித்து உலக முதலாளிகளையும், உலக வங்கியையும் வாழ வைப்பதோடு தாங்களும் கொள்ளை அடிப்பதும் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களுடைய அரசியலும் ஆகும்.
எதிர்க்கட்சி என்று வந்த கூட்டமைப்பு தமிழ்ப் பகுதிகளில் ஒரு கிராமத்தினை கூட புனரமைத்தது கிடையாது. இன்று மழையினால் எத்தனை கிராமத்து மக்கள் சேறும் சகதியுமாய் போக்குவரத்து சிரமத்தால் அவதிப்படுகின்றார்கள். இது சம்பந்தன் ஐயாவின் கிழட்டுக் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் பதவி எதிhக்;கட்சித் தலைவர். ஒரு கிராமத்து மக்களை வாழவைக்க முடியாத தலைவர் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுத் தருவாராம்.., தமிழ் மக்களை அமைதியாக வாழ வைப்பாராம். சூடு சுரணை இல்லாத வெட்கம் கெட்ட கேவலமான மனிதர்கள். பார்த்தால் வெள்ளை வேட்டியும் சேட்டும்.
சைட்டத்தைத் தோற்கடித்த சமூக அரசியல் விஞ்ஞானமும், அதன் எதிர்காலமும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 10 November 2017
- Hits: 4592
போராடினால் உலகையே புரட்ட முடியும். இதுதான் மக்கள் சக்தியின் வலிமை. நவதாராளவாத தனியார்மயம் பெத்துப் போட்ட சைட்டத்தை, மாணவர்களும் - மக்களும் ஒன்றுகூடி தூக்கில் போட்டு இருக்கின்றனர்.
நவம்பர் புரட்சியின் 100வது வருடம் கொண்டாடப்படும் நாட்களிலே, அதை மாணவர்களும் - மக்களும் நடைமுறையில் சாதித்துக் காட்டி இருக்கின்றனர். ஆம் 1917 நவம்பர் புரட்சி அனுபவங்களை, மீளவும் செயல் வடிவமாக்கி இருக்கின்றனர். கடந்த 8 வருடங்களாக, வீரமிக்க, எழுச்சிகரமான, விட்டுக்கொடுப்பற்ற தொடர் போராட்டங்களை நடத்தி, இன்று வென்று இருக்கின்றனர்.
மர்மக் கொலை, கொலை மிரட்டல்கள், வன்முறைகள், ஊடக அவதூறுகள்.. என்று எதற்கும் அஞ்சாது, 100 வருடங்களுக்கு முன் போல்சவிக்குகள் போராடியது போல் வரலாற்றை மீள எழுதிக் காட்டி இருக்கின்றனர். காலில் இருந்த செருப்புகளை கூட விட்டுவிடாத அளவுக்கு, அரச பயங்கரவாத வன்முறை தொடர்ந்து தலைவிரித்தாடிய சூழலில், இந்தப் போராட்டம் ரணகளமாகியுள்ளது. போராடியவர்கள் ஏழை எளிய பெற்றோர்களின் குழந்தைகளே. அரைப் பட்டினியாக வகுப்பறைக் கல்வியைத் துறந்து, சமூகமாகக் கூடி வாழ்வதற்கான வாழ்வியல் கல்வியை போராட்டக்களங்களில் சுயமாகக் கற்றுக் கொண்டார்கள். எதிர்கால தலைமுறைக்கு சமூகமாகக் கூடி வாழ்வது எப்படி என்ற புரட்சிகர நடைமுறையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சமூகத்தின் வழிகாட்டியாக - முன்னோடிகளாக தங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
போராட்டமே ஒரு வழி ! சைடம் போராட்டம் வெற்றி !
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 09 November 2017
- Hits: 1150
தமிழ் மொழி பேசும் மக்களிடையே இனக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 02 November 2017
- Hits: 3399
நாட்டை நவதாராளவாதம் விழுங்கி வருகின்றது. அடிப்படை மனித வாழ்வாதாரங்கள் எல்லாம் தனியார்மயமாக்கப்பட்டு, சந்தைப் பொருளாகின்றது. இயற்கை மூலதனத்தின் சூறையாடலுக்கு தாரைவார்க்கப்படுகின்றது. இனம், மதம், சாதி, பிரதேசம்… என்று, எந்தத் தடையுமின்றி, இதுவே தேர்தல் அரசியலாகவும், அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கையாகவும் இருக்கின்றது.
தண்ணீர், கல்வி, மருத்துவம்.. என்று எதுவும் மக்களுக்கு எஞ்சவில்லை. நவதாராளவாதத்தின் கடன் கொள்கைக்காக மக்களின் அடிப்படைத் தேவைக்கான அடிப்படை உற்பத்தியை மறுத்து, ஏற்றுமதிக்கான உற்பத்தியே நாட்டின் கொள்கையாகி இருக்கின்றது. அன்றாட மனித தேவைகளையே, மக்களுக்கு மறுதளித்துவிடுவதே, தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கையாகி இருக்கின்றது. மக்களையும், தேசத்தையும் கொள்ளையிடும் மூலதனத்தின் கொள்கையே, நாட்டை ஆளுகின்றது.
மக்களின் உழைப்பைக் கொள்ளையிடும் இந்தக் கூட்டமே, மக்களை மோதவிட்டுப் பிரித்தாளுகின்றது. இனம், மதம், சாதி, பிரதேசம்.. என்று மக்களை ஒடுக்குவதன் மூலம், குறுகிய வட்டத்துக்குள் நின்று மக்களை மோதுமாறு வழிநடத்துகின்றது.
அண்மைக்காலமாக தமிழ் மொழி பேசும் வடகிழக்கு மக்கள் மத்தியில், இன ரீதியான, மத ரீதியான, சாதி ரீதியான, பிரதேச ரீதியான முரண்பாடுகள் கூர்மையாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தமிழ் மொழி பேசும் மக்கள் மேலான இனவொடுக்குமுறையை மூடிமறைக்கவும், நவதாராளவாத சூறையாடலை இனங்கண்டு கொள்ளமுடியாத வண்ணம், வடகிழக்கு மக்களிடையேயான மோதலைத் தூண்டிவிட்டு இருக்கின்றது.
வேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 October 2017
- Hits: 4644
யார் வேள்வியை ஆதரிக்கின்றனரோ அவர்களை ஒடுக்கப்பட்ட சாதியாக அடையாளம் காட்டுவதும், யார் வேள்வியை எதிர்க்கின்றனரோ அவர்கள் தம்மை ஒடுக்கும் சாதியாக காட்டிக்கொள்வதும், நடந்தேறுகின்றது. இந்த பின்னணியில் கருத்தியல் தளத்தில் விவாதங்கள் முன்னெடுக்கப்;படுகின்றது. அதேநேரம் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த போதும், தம்மை ஒடுக்கும் சாதியாக காட்டிக்கொண்டு வாழ்கின்றவர்கள், வேள்வியை மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றனர். இந்த பின்னணியில் வெள்ளாளிய சிந்தனையிலான சமூக மயமாக்கம் இன்று நடந்தேறுகின்றது. வேள்வித் தடையை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பு, தம்மை வெள்ளாளர் மயமாக்கிக் கொள்ளும் வெள்ளாளிய சிந்தனையிலான அரசியல் நிகழ்ச்சிப்போக்குடன் ஒன்றுபட்டு நிற்கின்றது.
இப்படி சமூகத்தை வெள்ளாளிய சிந்தனையிலான சாதி மயமாக்கும் நிகழ்ச்சிநிரலில் அங்கமாகவே, "வேள்வி" என்பது தமிழர் பண்பாடல்ல என்று கூறுகின்ற அளவுக்கு, வெள்ளாளியச் சிந்தனை முறை முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. வெள்ளாளிய சாதி மயமாக்கமும், இந்து மயமாக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி சமூகத்தை ஒடுக்குகின்றது.
இலங்கையில் மத முரண்பாடுகளை கூர்மையாக்கவே வேள்வித் தடை
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 26 October 2017
- Hits: 3983
அண்மைக்காலமாக மக்களைப் பிரித்தாளுவதற்கு, ஆளும் வர்க்கங்கள் மதத்தைக் கருவியாக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு அமைவாக மதரீதியான அணிதிரட்டல்களும், மதரீதியான முரண்பாடுகளும் வன்முறைகளும் கூர்மையாகியுள்ளது. இதற்கு உதவும் வண்ணமே, அரசின் சிவில் சட்ட அமைப்பு முறைமை முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. இன-மத-சாதி வாத அடிப்படையில் இயங்கும் நவதாராளவாத சமூக அமைப்பின் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதற்கு அமைவாகவே வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் பிரதிநிதியான இளஞ்செழியனின் தீர்ப்புகள் வெளிவருகின்றது. இந்துமதத்தை சாதி ஆகம மதமாக ஒருமைப்படுத்தும் அண்மைய முயற்சிகளுக்கு ஏற்பவே, எதிர்மறையான தீர்ப்புக்களை இளஞ்செழியன் வழங்கி வருகின்றார்.
மயானப் பிரச்சனைக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு இதே அடிப்படையிலானதே. மயானப் போராட்டம் சாதிரீதியாக பிளந்து இருக்கும் "இந்து" சமூகத்தை, ஒடுக்கும் சாதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டிய அதேநேரம், இந்து மதத்தை பிளவுபடுத்தும் வண்ணம் புத்தூர் மயானப் பிரச்சனை மக்கள் போராட்டமாக மாறியது. இதனாலேயே குறித்த மயானத்தை பயன்படுத்துவதற்கு இளஞ்செழியன் தடைவிதித்தார். இதே போன்று வெள்ளாளிய சாதிய இந்து ஆகம முறைமைக்கு முரணாக, இந்துக்களை பிளவுபடுத்தும் வழிபாட்டு முறைமையைத் தடை செய்து இருக்கின்றார். இந்து ஒற்றுமையைப் பாதுகாத்து, இந்து மதத்தைப் பலப்படுத்தி மத மோதல்களுக்கு உதவுவதேயாகும். புலிகள் தமிழ் இனவாதத்தைப் பலப்படுத்த, செய்த அதே உத்தியும் அதே தந்திரமும்.
கட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 26 October 2017
- Hits: 6821
இலங்கையின் பாராளுமன்ற சனநாயக ஆட்சிப் பாரம்பரிய பாதையில் அரசியல் கட்சிகளின் தோற்றம் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட படிப்பும்-சொத்தும் படைத்த ஒரு குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினர் மத்தியிலிருந்தே ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கை வசதிகளை-சொத்துக்களை-சுகபோகங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அடையும் நோக்குடனேயே அன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலனித்துவ எசமானர்களும் தங்களுக்கு எப்போதும் சேவகம் பண்ணக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்களைப் (லண்டனுக்கு அனுப்பி) படிப்பித்துப் பயிற்றுவித்தும் இருந்தனர்.
இன்றுவரை காலனித்துவ எசமானர்கள் திட்டமிட்ட பிரகாரம் அதிலிருந்து அணுவளவேனும் பிசகாமல் அவர்களின் நலன் கருதியே அன்று(1910ல்) தொடங்கிய கட்சியிலிருந்து(இலங்கைத் தேசிய காங்கிரஸ்) இன்று முளைவிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கும் கட்சிகள் வரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொள்கைகள்-கொடிகள்-கோசங்கள்-சின்னங்கள்-நிறங்கள்-வாதங்கள்-போக்குகள் எதுவாக இருப்பினும் அனைவரும் மக்களை பணயம் வைக்கும் அரசியலை முன்னெடுத்து ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் பண்ணியபடி தங்களை வாழ வைப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
ஊடக அறிக்கை-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 23 October 2017
- Hits: 853
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 27 ஆம் திகதி முதல் தமது வழக்குகளை
மீளவும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி மூன்று தமிழ் அரசியல்
கைதிகள் முன்னெடுத்து வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும்
நியாயமானதாகும். உயிராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இம் மூன்று
அரசியல் கைதிகளையும் அரசாங்கமும் ஜனாதியும் பாதுகாக்க வேண்டும். இவ்
அரசியல் கைதிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும்
ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டபூர்வமாகவும், நியாயத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளின்
அடிப்படையிலும் இம் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் உணவுத்
தவிர்ப்புப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியது அவசியம்.
எனவே, இப்பிரச்சனையை ஆளும் வர்க்க பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து
நோக்காது, சட்டம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் அணுகித்
தீர்க்கப்படவேண்டும் என்பதை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
வலியுறுத்துகின்றது.
"சுதந்திரம்" குறித்த கலை - இலக்கிய அபத்தங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 18 October 2017
- Hits: 3453
மனிதவியல் என்பது சமூகத்தன்மையிலானதே ஒழிய தனிநபரியமல்ல. மனிதனின் சமூகத் தன்மையை உயிர்ப்பூட்டுவதும் ஒளியேற்றுவதும் தான், கலையின் சாரமாக இருக்க முடியும். தனிமனித ஆத்ம திருப்திக்கானதோ, செயலற்ற சுய நடத்தையை செயலாகக் காட்டுவதற்கான கவசமல்ல கலை. இப்படிப்பட்ட கலை தனிநபரியத்தை முன்னிறுத்தியதாகவும், பணம் புகழ் சம்பாதிக்கும் முதலாளித்துவக் கலையின் பொது சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டதே.
தனிநபரியவாத கண்ணோட்டத்தை முன்னிறுத்தி நிற்பவர்கள், கலைஞன் சுதந்திரமானவன் என்கின்றனர். கலை சுதந்திரமானது என்கின்றனர். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட "சுதந்திரம்" குறித்த இந்தப் பொது அளவுகோலானது, முதலாளித்துவக் கலை வரை பொருந்தும். இங்கு "சுதந்திரம்" குறித்தான தனிநபரியவாத அபத்தங்கள், கலையை உழைக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்து பிரித்துவிடுவதையே "சுதந்திரமாகக்" கருதுகின்றனர்.
கலை இலக்கியத்தை வர்க்க சமூக அமைப்பில் இருந்து "சுதந்திரமானதாக" கருதி படைப்பது முதல் அதை தர்க்கம் செய்வது வரை, தனிமனித "சுதந்திரம்" குறித்த முதலாளித்துவ சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டதல்ல. "சுதந்திரம்" என்பது எதிலிருந்து என்ற கேள்வியை இயல்பாக எழுப்பிவிடுகின்றது.
அனைவருக்கும் "சுதந்திரம்" இருக்கும் போது, "சுதந்திரம்" என்பது பொருளற்றது. சுதந்திரத்தைப் பற்றி பேசும் போதும் - கோரும் போதும், அனைவருக்குமான சுதந்திரத்தை முன்வைப்பதும் - அதற்காகவும் வாழ வேண்டும். கலை இலக்கியம் "சுதந்திரமானது" என்று கூறுகின்றவர்களும் - கோருகின்றவர்களும், கலை இலக்கியம் அரசியல், வர்க்கம்.. அடிப்படையில் இருந்து "சுதந்திரமானது" என்ற பொருளில் தான் முன்வைக்கின்றனர். அதாவது சமூகத்தில் இருந்தும் சுதந்திரமானது என்று கருதுகின்ற அதேநேரம், இது கருத்துமுதல்வாத சிந்தனை முறையாகும். சாராம்சத்தில் நிலவும் சமூக அமைப்புமுறை சார்ந்த, தனியுடைமைவாத முதலாளித்துவக் கண்ணோட்டமாகும்.