ஒடுக்கும் முஸ்லிம் இனவாதத்துக்கு துணை நிற்கும் போலி முற்போக்குகள் குறித்து!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 July 2017
- Hits: 3275
இலங்கையின் இனவாத வரலாற்றில், ஒடுக்கும் இனவாதமானது காலத்துக்கு காலம் இடம் மாறி வந்திருகின்றது. இலங்கை அரசின் ஒடுக்கும் இனவாத கொள்கைக்கு அமைவாக, பிற இனங்களிடையேயான இனவொடுக்குமுறை ஒரே மாதிரி இருக்கவில்லை. இயக்கங்களும் - புலிகளும் ஆயுதப்பலம் பெற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த காலத்தில், முஸ்லிம் மக்கள் மேலான இனவொடுக்குமுறை இருந்தது. புலிகளின் அழிவின் பின் அரசு ஆதரவுடன் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம்-இஸ்லாமிய இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதமாக மாறி இருக்கின்றது.
இனவாத அரசியலின் எதார்த்தம் இது. இப்படி உண்மை இருக்க, ஒடுக்கும் தன்மை கொண்ட இனவாதம் எது என்பது குறித்து, நடைமுறைரீதியான சமூக செயற்பாடுகளின்றியும், தத்துவார்த்த புரிதலுமின்றி இனவாத ஒடுக்குமுறைகளை மூடிமறைப்பதே இன்று அரசியலாகின்றது. "மார்க்சியவாதிகள் - இடதுசாரிகள் - முற்போக்குவாதிகள் - இலக்கியவாதிகள் - சமூக அக்கறையாளர்கள்" என்று தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றவர்களில் யார் இன்று ஒடுக்கும் முஸ்லிம் இனவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர்? இதற்கு எதிராக நடைமுறையில் யார் போராடுகின்றனர்?
இன்று தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதமானது, முஸ்லிம்-இஸ்லாமிய இன-மதவாத அதிகார வர்க்க சக்திகளால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து, எந்தக் குரலையும் கேட்க முடிவதில்லை. தமிழ் தரப்பில் இருந்தும், இதற்கு எதிராக எந்தக் குரல்களும் எழுவதில்லை. இனவாதத்தால் பாதிக்கபட்ட மக்களிடம் இருந்து குரல்கள் எழும் போது, அதை "இனவாதமாக" முத்திரை குத்தும் குரல்கள் மட்டும் எழுகின்றது. இதன் மூலம் ஒடுக்கும் இனவாதத்துக்கு மறைமுகமாக உதவுகின்றனர்.
SAITM - உடனடியாக ரத்து செய் !
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 30 July 2017
- Hits: 877
ஆகஸ்ட் 02 தேசிய எதிர்ப்பு தினத்தை வெற்றிகரமானதாக்குவோம்.
இந்த நிமிடம் வரை சைட்டம் திருட்டு பட்டக் கடையை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவ பீடங்கள் எட்டிலும் உள்ள விரிவுரையாளர்களின் தொழிற்சங்கங்கள், மற்றும் மாணவர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்கள், பல்கலைக்கழக பொது மாணவர்கள், அரச மருத்துவ சங்கம், தொழிற்சங்கங்கள், மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சி உட்பட பொது மக்கள் போராடுகிறார்கள்.
வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ரணில், மைத்ரி கூட்டு அரசாங்கத்திற்கு தேவையாக இருப்பது மருத்துவ பட்டத்தையும் மற்ற அனைத்தையும் போன்று விற்பனை சந்தையில் விற்று தின்பதற்கே.
நோயாளிகளின் உயிர் தொடர்பாகவோ, கல்வியின் தரம் தொடர்பாகவோ இந்த கொடிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அதனால் செவிட்டு யானைகள் போன்று தமது நடத்தையினால் வெளிக்காட்டி, சைட்டம் முதலாளியின் தாளத்திற்கு ஆடி , பொது மக்களை அடக்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 29 July 2017
- Hits: 3479
தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.
இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக் கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.
“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு (காணொளி)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 28 July 2017
- Hits: 856
கனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீரவின் உரையின் காணொளியினை இங்கு பார்க்கலாம்.
சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழும் வெளிநாடு சென்ற உழைப்பாளிகள்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: பெண்கள் விடுதலை இயக்கம்
- Created: 27 July 2017
- Hits: 724
பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் ஏங்கித் தவிக்கும் மக்களே, வேதனையிலும் விரக்தியிலும் மூழ்கியுள்ள மக்களே, ஒன்றுமே நடக்கவில்லை என்பதை போன்று அடுத்தநாள் எல்லாவற்றையும் மறந்துவிடும் மக்களே! இது எமது கண்ணில் படாத அல்லது நாங்களாகவே மறந்துவிட்ட எமது தோழர்களினதும் தோழிகளினதும் பரிதாப நிலையாகும்.
மஸ்கெலியாவைச் சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி பீ.கே. தர்ஷனீ தோட்டத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை பராமரிக்கப் போதாமையால் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சவூதிக்கு செல்ல தீர்மானித்தார். நாளொன்றிற்கு 600 ரூபா சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் சொத்து சுகம் என்ற வார்த்தை எட்டிக் கூட பார்ப்பதில்லையல்லவா. இந்த நிலைதான் தர்ஷனிக்கும். ஒரு பிள்ளையின் தாயான தர்ஷனீ அடிமைத் தொழிலுக்குச் சென்று சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வெறும் எலும்புக் கூடாக இந்நாட்டிற்கு வர நேருமென்று குடும்பத்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுதான் நடந்தது. தான் கர்ப்பமுற்றிருந்த சமயத்தி;ல் கணவன் பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாமையாலும், தோட்டத் தொழிலாளியான அவரது கணவருக்கு கிடைக்கும் சொச்ச சம்பளத்தைக் கொண்டு குடும்ப செலவீனங்களை பூர்த்திசெய்ய முடியாமையினாலும் குடும்பத்தை சுமப்பதற்கு ஓரளவாவது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றார்.
இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்க சீன-இந்தியப் போட்டி!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 30
- Created: 27 July 2017
- Hits: 1064
சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.
உலகின் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கப்பல் வழிகளில் ஒன்றான சிறிலங்காவின் இந்திய மாக்கடல் கேந்திர முக்கியத்துவம் கொண்டுள்ளதாக அமைந்துள்ள நிலையில் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன-மத-சாதிகளின் அதிகாரம் குறித்து..!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 July 2017
- Hits: 3251
உலகமயமாதல் முன்வைக்கும் நவதாராளவாதத்தையே, பேரினவாத அரசு முன்னெடுக்கின்றது. நவதாராளமயம் மூலம் மக்கள் சுரண்டப்படுவதை மூடிமறைக்கவே, மக்களிடையே இன-மத-சாதி.. போன்ற சமூக வேற்றுமைகளைத் தூண்டிவிடுவதன் மூலம், அரச ஒடுக்குமுறைகளை ஏவுகின்றது. இன-மத-சாதி மோதலை தூண்டி விட்டவர்கள், அரசின் பொருளாதார அடிப்படையில் தமக்குள் முரண்படாது ஒன்றுபடுகின்றனர்.
நவதாராளவாத சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், இனம்–மதம்–சாதியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் கட்சிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அரசியல் பின்னணியில் இன-மத-சாதி ரீதியாக சிந்திக்கின்ற அறிவியலாக மனித சிந்தனையைக் குறுக்கி, அதை வாழ்க்கை முறையாக்கி விடுகின்றனர். இந்த இன-மத-சாதிவாதக் கட்சி அரசியல், அறிவியல், வாழ்க்கைமுறை, சிந்தனை.. என்று அனைத்தும், எந்த விதிவிலக்குமின்றி, நவதாராளவாத முதலாளித்துவ முறைமையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.
கல்வி : தனியார்மயத்திற்கு சார்பான தர்க்கங்களும் மிகப்பெரிய பொய்களும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 30
- Created: 24 July 2017
- Hits: 773
நாட்டின் அரசியல் கருத்தாடலானது பெரும்பாலும் இரு முக்கிய போராட்டங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றது. ஒன்று, டெலிகொம் நிறுவனத்தில் மனிதவலு (Man Power) ஊழியர்களின் பணி உரிமைகளுக்காக நடக்கும் தொழிலாளர் போராட்டம். இரண்டாவது, கல்வியை வியாபாரப் பண்டமாக ஆக்குவதற்கு எதிராகவும், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும் நடக்கும் மாணவர் போராட்டம். கட்சி என்ற வகையில் நாம் அவ்விரண்டு போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அது விடயத்தில் செயல்ரீதியில் தலையீடு செய்கின்றோம்.
“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 23 July 2017
- Hits: 984
கனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு நேற்று 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கருத்தரங்கு நிகழ்வு அழைப்பினை ஏற்று வருகை தந்தோரில் ஒரு பகுதியினரையும் அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீர உரையாற்றுவதையும் இங்கு புகைப்படங்களில் நீங்கு காண்கிறீர்கள்.
தோழர் சேனாதீரவின் பேச்சின் ஒரு சிறு பகுதி காணொளியாக இங்குள்ளது.
"தனிநாடு (அதிக அதிகாரம்) கேட்கும் தமிழனின்" ஆட்சியில் தமிழ் மக்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 22 July 2017
- Hits: 3269
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடந்த ஊழல், இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம், மோசடி, கட்டைப்பஞ்சாயத்துடன்.. கூடிய சமூக விரோதக் குற்றங்களை, நீதிமன்ற தீர்ப்பு ஒன்று அம்பலமாக்கி இருக்கின்றது. வெளியாகியுள்ள தீர்ப்பு "தமிழ் தேசிய" ஊடகங்களாலும், நவதாராளவாத சக்திகளாலும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் அண்மையில் தங்களை புனிதர்களாக காட்டி ஊழல் எதிர்ப்பு கூச்சல் போட்ட, "தமிழ் தேசிய" பிழைப்புவாதிகள் கூட்டுக் களவாணிகளாக இருப்பதால், மூடிமறைப்பதில் கூட்டுச் சேர்ந்துள்ளனர். சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை, "தமிழ் தேசியம்" மக்கள் முன் இருட்டடிப்பு செய்துள்ளது. இந்த பின்னணியில் "நீரில் எரியும் நிலம் - சுன்னாகம் நீர் மாசு இரகசியங்கள்" என்ற வீடியோ வெளியாகி இருக்கின்றது. இந்தக் காணொளி ஒட்டுமொத்த சதிகாரர்களின் சதிகளை, ஆதாரபூர்வமாக அம்பலமாக்கி இருக்கின்றது.