கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 18 August 2017
- Hits: 850
இப்போராட்டத்தின் கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்!-கேமமாலினி அபேரத்ன
(අද දින යාපනය දිස්ත්රික්කයේ පුත්තූර් හි පවුල් 750 කට අදික ප්රමාණයක් පීඩාවට පත් කරමින් මතු වී ඇති සොහොන් බිමක ප්රශ්නය පදනම් කරගනිමින් එහි ජනතාව විසින් ආරම්බ කර තිබෙන උපවාස ක්රියාමාර්ගයට සහය පල කරන නිදහස උදෙසා කාන්තා ව්යාපාරය ....)
பெண்கள் விடுதலை இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கேமமாலினி அபேரத்ன, புத்தூரில் சுடலைக்கு எதிராகப்போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு இயக்கத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்தார். கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து தெரிவிக்கையில் :
'சைட்டம்' தடை செய்யும் போராட்டத்தின் எதிர்கால இலக்கு - மாணவர் மக்கள் மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றியது.
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 16 August 2017
- Hits: 962
சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் மாநாட்டில் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிர்கால இலக்கு தொடர்பான 5 தீர்மானங்களை வெளியிட்டு , வந்திருந்த இயக்கங்களின் பிரதிநிதிகள், மாணவர்களின் மற்றும் மக்களின் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாணவர் மக்கள் மாநாடு இன்று (15.08.2017) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
சாதி வெறி பிடித்த சாதிக் கிறுக்கர்களே, தமிழ் தலைவர்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 12 August 2017
- Hits: 3691
ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த எந்த வெள்ளாளனாவது, மயானத்தின் அருகில் குடியிருக்கின்றானா எனின் இல்லை. மயானத்தை குடியிருப்புக்கு மத்தியில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுபவன் யார் என்றால், ஒடுக்கும் வெள்ளாளச் சிந்தனைமுறையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்களே.
பகுத்தறிவுபூர்வமாக அணுகினால், எவராவது மயானத்துக்கு அருகில் குடியிருக்க விரும்புவார்களா எனின் இல்லை. அப்படியிருக்க சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மயானத்துக்கு அருகிலேயே குடியிருக்க விரும்புவதாக கூறுபவர்கள், சாதி வெறிபிடித்த கிறுக்கர்களாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படி அவர்கள் குடியிருக்க விரும்புவதாக கூறி, தங்கள் சாதி அதிகாரம் மூலம் அதை தடை செய்வது என்பது, சாதி வெறிபிடித்த வெள்ளாளியச் சாதியச் சிந்தனையால் மட்டுமே முடியும்.
கூட்டமைப்பின் கோவணம் நாறுகின்றது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 10 August 2017
- Hits: 3396
தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண மகிந்த தலைமையில் முகமாற்ற ஆட்சி வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறியிருக்;கின்றார். சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிலுள்ள அதிருப்தியாளர்களும், கூட்டமைப்பில் இடம் கிடைக்காதவர்களும், தமிழ் அரசியல் விமர்சகர்களும் "மாற்றுத் தலைமை" வேண்டும் என்கின்றனர். நவதாராளவாத நாணயத்தின் இருபக்கங்கள் இவை.
முகமாற்ற ஆட்சிமாற்றம் மூலம் அதிகாரத்துக்கு வந்த நவதாராளவாத "நல்லாட்சி" அரசு, மக்களுக்காக எதையும் முன்வைக்க முடியாது அம்பலமாகி வருகின்றது. "நல்லாட்சி" அரசுடன் கூடிக் குலாவி தேன்நிலவை நடத்திய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன் கோவணத்துடன் காட்சியளிக்கின்றனர். நல்லூரில் கோவணத்தை தரிசிக்க திரளும் பக்தர்களால், கூட்டமைப்பின் கோவணத்தை துதிபாட முடியாதளவுக்கு நாறுகின்றது.
மூன்று வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஆதரவு "நல்லாட்சி" மூலம் தமிழர்களின் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறியே, மைத்திரி-ரணிலை முகமாற்ற ஆட்சியை கொண்டு வந்தவர்கள் கூட்டமைப்பு. இதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நவதாராளவாதத்தை இலங்கையில் பலப்படுத்தும் "மாமா" வேலையை கூட்டமைப்புச் செய்தது. கூட்டமைப்பு இனத்தில் பெயரில் இனவாத வாக்குகளை பெற்றதன் மூலம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தே அரசுடன் உறவாடினர். தங்கள் மூன்றாண்டு கால இந்த தேன்நிலவைத் தொடர முடியாத அளவுக்கு, "மாற்றுத் தலைமை" என்ற பிசாசு தலைவிரி கோலமாக தமிழ்மக்கள் மத்தியில் உலாவுகின்றது.
சாதி அடிப்படையிலான குடியிருப்புக்களும் - மயானங்களும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 August 2017
- Hits: 3426
குடியிருப்புக்குள் மயானங்கள் இருக்கும் பிரச்சனை என்பது சுற்றுச்சூழல் பிரச்சனையல்ல, மாறாக ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட சாதிகளுக்கு இடையிலான பிரச்சனையாகும். மயானங்களுக்கு அருகில் ஒடுக்கும் சாதிகளின் குடியிருப்புகள் இருந்தால், சாதி அடிப்படையிலான தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா எனின் இல்லை. இதிலிருந்து ஒரு உண்மை மிகத்தெளிவாகின்றது. அதாவது ஒடுக்கப்பட்ட சாதிகள் மயானங்கள் அருகில் வாழ்வதை, ஒடுக்கும் சாதிகளின் வாழ்வியல் கண்ணோட்டம் அங்கீகரிக்கின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்கும் சாதிய மனநிலை தான், குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் தொடர்ந்து தக்க வைக்கப்படுகின்றது. ஒடுக்கும் சாதி மனநிலையில் இருந்து கருத்துகள் முன்வைக்கப்படுவதுடன், அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில் அடக்குமுறைகளைக் கையாள்வதும், அரசு அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதும் நடந்தேறுகின்றது.
குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மயானங்களை அகற்றக் கோரி, யுத்தம் முடிந்த கையோடு சட்டரீதியான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில் தொடருகின்றது. அதேநேரம் இது போன்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றம் சாதிய வடிவத்தை பூசி மெழுகி வழங்கிய தீர்ப்பை அடுத்து, மோதல்களும் கைதுகளும் நடைபெற்றது. இதையடுத்து, மக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி, தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது.
நவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 07 August 2017
- Hits: 3215
கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்ற கருத்து தமிழ் அரசியல் அரங்கில் பொதுவாக காணப்படுகின்றது. அதேநேரம் "மாற்றுத் தலைமை" வேண்டும் என்ற அறைகூவல்களும், விவாதங்களும் கூட நடக்கின்றது. கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து ஒடுக்குவதற்கான காரணம் என்ன? இந்த அடிப்படைக் கேள்வியில் இருந்து, "மாற்றுத் தலைமை" கோரப்படுகின்றதா எனின் இல்லை. இப்படி இருக்க கூட்டமைப்புக்கு பதில் "மாற்றுத் தலைமையால்" என்ன மாற்றம் நடந்து விடும்?
மாற்று அரசியலை முன்வைக்காமல், "சுற்றிச் சுற்றி சுப்பர் கொல்லைக்குள்" சுற்றுவதற்கே தொடர்ந்து வழிகாட்டப்படுகின்றது என்பதே உண்மை. உண்மையில் தமிழ் சிந்தனைமுறையானது, முழு அரசியலையும் வரலாற்றோடு பகுத்தாய்வதில்லை. 1948 முதல் தமிழ்மக்களின் தோல்விக்கு, இந்த தமிழ் சிந்தனை முறைதான் வழிகாட்டுகின்றது.
கூட்டமைப்பு அரசுடன் ஏன் கூடி நிற்கின்றது என்பதை புரிந்து கொள்வதே, மாற்று அரசியலுக்கான வித்தாகும். போராடுகின்ற மக்களை ஒடுக்குமாறு, அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பு முன்வைத்த கருத்துக்கள், வெளிப்படையாகவே இதற்கான காரணங்களை போட்டுடைக்கின்றது. அதேநேரம் போராடும் மக்களை ஒடுக்கக் கோரும் கூட்டமைப்பின் கருத்துக்களுடன், "மாற்றுத் தலைமையை" கோருவர்கள் முரண்படவில்லை என்பதே மற்றொரு உண்மையாகும். அரசுடன் சேர்ந்து நிற்கும் காரணங்கள் தமிழ்ச் சிந்தனைமுறையின் ஓரு கூறாக இருப்பதால், போராடுபவர்களை ஒடுக்குமாறு அரசிடம் கோரிய கூட்டமைப்பின் கருத்துகள் இன்றுவரை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. இதை விரிவாக ஆராய்வோம்.
புதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேலுடன் ஒரு நேர்காணல்.
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 07 August 2017
- Hits: 784
யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகள் மற்றும் மோதல்கள் வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களை எடுத்துள்ளன. ஒடுக்கப்பட்;ட சாதியினரின் குடியிருப்புகளுக்கு அருகே உயர் சாதியினரின் மயானங்கள் அமைக்கப்படுவதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாக மே, 13ல் யாழ்ப்பாண பஸ்நிலையத்துக்கு முன்பாக ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புத்தூரில் உள்ள கலைமதி கிராமம் வரலாற்று ரீதியாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு கம்யுனிஸ்ட் கோட்டையாக திகழ்ந்து வருகிறது, அவர்களின் கிராமத்தின் மத்தியில் உள்ள ஒரு மயானத்தின் காரணமாக ஒரு தீவிரமான போராட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 23 கிராமவாசிகள் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்கள் மற்றும் 11 பெண்கள் உட்பட 30 பேர் பிணையில் வெளியே வந்துள்ளார்கள். மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி இப்போது கலைமதி கிராமத்தில் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. வேறு ஒடுக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சாதியினரும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள், வேறு பலரும் தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இங்கு வருகை தருகிறார்கள். இந்த சமீபத்தைய மோதல் பற்றி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேல் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார், யாழ்ப்பாணத்தில் சாதி விரோத போராட்ட வரலாறு தொடர்பாக அவர்களது வேலை கலைமதி கிராமத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது.
கேள்வி: புத்தூருடன் உங்களுக்கு ஒரு நீண்ட தொடர்பு உள்ளது மற்றும் குறிப்பாக கலைமதி கிராமம் இன்று போராட்டத்தின் மையமாக உள்ளது. இந்த மோதல் பற்றி விளக்க முடியுமா?
பதில்: 700 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 பேரைச் சனத்தொகையாகக் கொண்ட கலைமதி கிராம மக்கள், சமூக நீதி வெகுஜன அமைப்பின் ஆதரவுடன் ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மயானங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும் என்பதாகும், புத்தூர் கலைமதி கிராமத்தின் பெரும் பகுதி மக்கள் இதில் இரவு பகலாக பங்கேற்பதுடன் ஒரு சக்திவாய்ந்த மனச்சாட்சிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த மக்கள் கூட்டாக ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் தினக்கூலி வேலைகளைத் தொடர்ந்து செய்து வரும் அதேவேளை வெவ்வேறு ஆட்கள் அந்த நாட்களில் வேலைகளில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதில் தங்கள் சக்தியை பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.
ஆறு வருடங்களாக மறுக்கப்படும்- மறைக்கப்படும் குகன் - லலித் தோழர்களின் கடத்தலும் நீதியும் !
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 04 August 2017
- Hits: 968
2009 போர் முடிவுக்கு வந்த பின்பு, போரின் முடிவில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை தோழர். குகன் மற்றும் லலித் வன்னியிலும் மற்றும் பிரதேசங்களிலும் திரட்டினார்கள். தெற்கில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
இவர்களாலேயே ஆரம்பத்தில் வடக்குக்கு வெளியில் அரசியற்கைதிகள் பற்றிய தகவல்கள் தெற்கில் ஊடகங்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியில் இயங்கிய இருவரும், 2011 ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் நாள், யாழில் அரசபடைகளாலும் - அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் ஆயுதக்குழுவினாலும் கடத்தப்பட்டார்கள்.
வவுனியாவைக் கடந்து வன்னிக்குள் எவரும் அரசியல் நோக்கில் அல்லது மனித உரிமை சார்ந்த செயற்பாட்டு நோக்கில் வரத் தடை செய்யப்பட்டிருந்த மஹிந்த அரசின் ஆட்சியில், இவ்விருவரும் சர்வதேச மனிதவுரிமை நாளான மார்கழி 10 அன்று, தெற்கிலிருந்து மக்களை வரவழைத்து அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரும் போராட்டமொன்றை யாழில் ஏற்பாடுசெய்திருந்த்னர்.
"இடது -தேசியம் "- தமிழ் தேசிய இயக்கமும் வரையறைகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 August 2017
- Hits: 6356
1.
தேசியம்-தேசியவாதம் பற்றி எழுதும் போது "இடதுசாரி " தேசியம் என்ற பதத்தை, மார்க்சிசவாதிகள் எனத் தம்மை வரையறுப்போர் பலர் உபயோகிக்கின்றனர். அப்படி ஒன்று உள்ளது. ஆனால் இப்பதம் மார்க்சிசம் சார்ந்து உபயோகப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் மார்க்சிஸ தத்துவம் மற்றும் நடைமுறையானது, தேசியவாதத்தை, கடந்து போக வேண்டிய ஒரு சமூக வரலாற்றுப் போக்கின் நிலையாகவே பார்க்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்துடன் தொடர்புள்ள தேசியவாதத்தை - முதலாளித்துவப் பொருளாதாரத்தை இல்லாதொழிப்பதுடன், அதையும் (தேசியவாதத்தையும்) இல்லாதொழிப்பது / அல்லது சர்வதேசியமாக வளர்த்தெடுப்பதே மார்க்சிச நிலைப்பாடு என்பது மார்க்சிச ஆசிரியர்களினதும் கருத்து. குறிப்பாக லெனின், - லெனின் தனது "தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்" என்ற தொகுப்பின் "கலாச்சார அடிப்படையிலான தேசங்களில் தன்னாட்சி " தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.
//தேசியவாதம் எவ்வளவுதான் "நியாயமான ", "பரிசுத்தமான ", நயமான, நாகரிக வகைப்பட்டதாக இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணைக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகை தேசிய வாதத்துக்கும் பதிலாக மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கிறது; எல்லா தேசங்களும் உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை முன்வைக்கின்றது.// - லெனின், தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் . / V.I . Lenin, Critical remarks on the National Question : “CULTURAL-NATIONAL AUTONOMY” .
இக்கட்டுரையில் கட்டுரையில் லெனின் முதலாளித்துவ கட்டமைப்பின் தேசியவாதத்துக்குப் பதிலாக, தேசங்களும், தேசிய இனங்களும், சிறுபான்மை தேசிய இனங்களும் சர்வதேசியத்தை அடிப்படையாக்க கொண்ட பாட்டாளி வர்க்க ஆட்சிக்கட்டமைபுக்கு உட்பட்ட "உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை" வலியுறுத்துகிறார்.
சுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 01 August 2017
- Hits: 6983
பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள்.
16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக் மக்களது நகரம். பிற்காலத்தில் ஸ்பானியர்களால் அழிக்கப்பட்டு தற்பொழுது அதன்மீது புதிய மெக்சிக்கோ நகரம் உருவாகியுள்ளது.
தற்போதைய ஐரோப்பிய பெரிய நகரங்களான பாரிஸ், இலண்டன் ஆகியன 17 -18 ஆம் நூற்றாண்டில் உருவாகியவை. முடிக்குரிய நிலங்களில் விவசாயம் செய்த மக்கள் அந்த நிலங்களை பிரபுக்களிடமும், முதலாளிகளிடமும் இழந்ததால் தொழிற்புரட்சி நடந்த பெரிய நகரங்களை நோக்கி மக்கள் குவிந்தார்கள். அப்படியான மக்கள் தொகையால் தொடர்ச்சியாக நகரங்கள் வளர்ந்தன. தற்போது இந்தியாவில் இப்படியான நிலையைப் பார்க்க முடிகிறது 18 நூற்றாண்டு இலண்டனின் நிலக்கரியைப் பாவித்ததால் ஏற்பட்ட அழுக்கையும், தூசியையும் சார்ள்ஸ் டிக்கன்ஸனின் நாவல்களில் பார்க்கமுடியும்.