மக்கள் ஜனநாயகம் வன்முறையானது என்று முத்திரை குத்த "அறமும் போராட்டமும்" என்றொரு நூல்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 September 2018
- Hits: 5958
"அறமும் போராட்டமும்" என்ற நூல், போராட்டம் என்றால் வன்முறையானது என்கின்றது. இதன் பொருள் போராடுவதற்கான ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டி மறுப்பதுதான். மக்களின் ஜனநாயகம் வன்முறையானது என்று கூறி, அதை மறைமுகமாக மறுக்கவும் - ஓடுக்கவும் முனைகின்றது.
இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு முதலாளித்துவ ஜனநாயகமே முரணாகி வருவதால், ஜனநாயகத்தை ஒடுக்குவது அவசியமாகிவிட்டது. இதனால் நவதாராளவாத மூலதனமானது ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டவும் - நிறுவவும் முனைகின்றது. ஜனநாயகத்தை முன்னிறுத்தி போராடுவதை வன்முறையாகத் திரித்து ஓடுக்கமுனையும் இன்றைய நவதாராளவாத கோட்பாட்டைத் தான், கவுரிகாந்தனின் "அறமும் போராட்டமும்" என்ற நூல், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றது.
இன்னுமொரு பக்கத்தில் தமிழ் இனவாத போலி இடதுசாரியமானது - இனவாத வலதுசாரியத்தை "இடதுசாரியமாக" காட்டவும் - நிறுவவும் இதன் மூலம் முனைகின்றது. அதாவது ஆயுதப் போராட்டமல்லாத எதுவும் போராட்டமல்ல என்று கூறுகின்ற தமிழ் இனவாதச் சிந்தனை முறையை மூடிமறைத்துச் சொல்லவும், வன்முறை இல்லாதவை போராட்டமல்ல அல்லது போராட்டம் என்பதே வன்முறையே என்று நிறுவவும் முனைகின்றது.
நவதாராளவாதத்துக்கு எதிராக வன்முறையின்றிய மக்கள்திரள் போராட்டங்கள் தோன்றிவிடுவதைத் தடுக்க, வன்முறையின்றிய போராட்டங்கள் எதுவும் போராட்டமல்ல, அவை எல்லாம் வெறும் "பாசாங்குத்" தனமானவை என்கின்றது. இதன் மூலம் போராடுபவன் எப்போதும், எங்கும் வன்முறையாளன் என்று காட்டி, அவனைச் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி, அன்னியப்படுத்த முனைகின்றது.
இங்கு போராட்டம் என்பதே வன்முறை என்று கூறுவது, தனிநபர்வாத பயங்கரவாதக் கோட்பாடும் – அதன் சித்தாந்த முறையுமாகும். அது ஜனநாயகத்தை தனக்கு எதிரான ஓன்றாகவும், அதை வன்முறையாகவும் காட்டி ஓடுக்கவும் கோருகின்றது. அதற்கு இந்த நூல் உதவ முனைகின்றது.
யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 13 September 2018
- Hits: 6548
யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது
சொந்த உழைப்பை சமூக உழைப்பாக மாற்றாத, தன் உழைப்பில் இருந்து சமூகத்துக்கான பங்களிப்பைச் செய்யாதவர்கள், இலங்கையில் புலம்பெயர் உதவியைக் கையாள்வதும் - கோருவதும் நடந்து வருகின்றது. இதுவே சமூக நோக்குக்கு முரணானதாகவும் - இதனாலேயே இது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியாததாகி விடுகின்றது.
மறுபக்கத்தில் நடைமுறை வாழ்வில் சமூக சிந்தனையையும் அதற்கான உழைப்பையும் வழங்க முடியாதவர்கள் - பணத்தைக் கொடுப்பதையே சமூக உணர்வாக கருதுகின்றவர்களால் கொடுக்கப்படும் பணம், சமூகச் சீரழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.
இரண்டு பக்கத்திலும் சமூகம் சார்ந்த சிந்தனையும் - நடைமுறையும் இன்றிய பணச் செயற்பாடுகள் என்பது, சமூக அழிவுக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு வழிகாட்டல் இன்றியும், பணத்துக்கு என்ன நடந்தது என்ற சுயகேள்வியும் இன்றியும், அதனால் அந்தக் குழந்தைக்கு கிடைத்த நன்மை என்ன என்ற கேள்வியும் இன்றி, பணத்தைக் கொடுத்தால் என்ன நடக்குமோ, அதுதான் இங்கும் நடக்கும்.
யுத்தம் கூட கல்வியை இந்தளவுக்கு சீரழித்;தது கிடையாது. யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தை, புலம் பெயர் பணம் சீரழிக்கத் தொடங்கி இருக்கின்றது.
பணத்தைக் கொண்டு புலம்பெயர் சமூகத்தை வழிநடத்த முனையும் சுயநலவாதிகளாலும், பிரமுகர்களாலும், பதவி வேட்டை பேர்வழிகளாலும் புலம்பெயர் உதவியை சமூக நோக்கு உள்ளதாக்க முடியாது. ஆனால் அவர்கள் தான் இன்று இதைக் கையாள்வது நடக்கின்றது.
பணத்தைக் கொண்டே கல்வியின் இலக்கை அடைய முடியும் என்று கூறுவதும், பணத்தை பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ள கல்வி சமூகத்தால், சமூகத்தை அழிவுக்கே வழிநடத்த முடியும்.
இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி, யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தின் கல்வியை அழிக்கின்றது.
சோஃபியாவும் - பாஸிசமும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 10 September 2018
- Hits: 6413
எந்த அரசியல் பின்புலமுமற்ற மத்தியதர வர்க்கப ; பெண் "பாசிசம் ஒழிக" என்று கோசம் போட்டதைக் கண்டு, பாசிட்டுக்கள் அதிர்ந்து போயுள்ளனர். சுயநலம் பிடித்த மத்தியதர வர்க்க பொது மனநிலைக்கு முரணாக, ஓட்டுமொத்த சமூகமும் அரசியல்மயமாவது கண்டு, ஊடகங்கள் தாங்கள் போட்டிருந்த "நடுநிலைமை" வேசத்தை உதறி, பாசிசத்தை முண்டுகொடுக்கும் விவாதங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். "பாசிசம் ஓழிக" என்ற கோசத்தில், பாசிசம் என்று கூறியது ஏன் என்ற விவாதத்தை மறுதளித்து பாசிசத்தை பாதுகாக்க முனைவதே ஊடகவியலாக மாறி வருகின்றது.
விமானத்தில் கோசம் போடலாமா என்று பாஜக பாசிட்டுகள் குற்றஞ்சாட்டும் அதே உள்ளடக்கத்தை கொண்டு, ஊடகங்கள் தங்கள் பங்கை அரங்கேற்றுகின்றது. விமானத்தில் கோசம் போடலாமா என்று விவாதம் நடத்தியதுடன், நடுத்தர வர்க்க பெண்ணின் எதிர்காலம் குறித்து பொதுப் பீதியை ஊட்டி விடுகின்றனர். விமானத்தில் நடத்திய "போராட்டத்தை" தவறான போராட்ட வழிமுறையாக சித்தரித்து வருகின்றனர். இப்படிப் போராடுவது என்பது பின்னணியின்றி இருக்க முடியாது என்று கூறுவதன் மூலம், அதைப் பாசிச பாணியில் உண்மையென்று நம்பவைக்க முனைகின்றனர்.
போராடிய பெண்ணின் பால், சாதி, மத.. அடையாளங்கள் மூலம், பாசிட்டுகள் பாணியில் "பாசிசம் ஓழிக" என்ற கோசத்துக்கு முகத்திரையை போட்டுக் காட்டி, பாசிசத்தின் முகத்திரையை மூடிவைக்க முனைகின்றனர். கைது, விசாரணை, நீதிமன்றம், பாஸ்போட்டை முடக்குவது என்ற தொடர் அச்சுறுத்தல்கள் மூலம், போராட முனையும் ஓவ்வொருவனுக்கும் இதுதான் கதி என்று அச்சுறுத்தும் பாசிச நடைமுறைகளை – முன்னின்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அச்சுறுத்துகின்றனர். அதாவது பாசிட்டுகள் தங்கள் அடக்குமுறைகள் மூலம் எதை மக்களுக்கு உணர்த்த முனைகின்றனரோ – அதை ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் பாசிசத்துடன் கைகோர்த்துப் பயணிக்கின்றவர்களாக மாறி நிற்கின்றனர்.
ஆள அதிகாரமா? வாழ ஆதாரமா? எது வேண்டும் எமக்கு?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 16 August 2018
- Hits: 6884
இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் அந்நிய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஒரு குறிப்பிட்ட “மேற்குடி மக்கள்” கூட்டத்தினரே அவர்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.
1931ல் அந்நியர்கள் அமுலாக்க முயன்ற ‘சர்வஜன வாக்குரிமையை’ சாதியையும், படிப்பையும், பெண்(பால்)களையும் முன்னிறுத்தி எதிர்த்து நின்றவர்கள்-அவர்களின் வழித்தோன்றல்கள்-வாரிசுகள்-சீடர்கள் தான் இன்றும் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆதிக்க அரசியல் பிரதிநிதிகளாக எம்மால் தெரிவு செய்யப்பட்டு ராஜ(தந்திர அந்தஸ்து) பவனி வந்தபடி உள்ளனர்.
ஆங்கிலேயரிடம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது (50மூ) வீதப் பிரதிநிதித்துவம் கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம் 1939ல் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிங்கள மக்களின் பிறப்பையும் பௌத்த மதத்தையும் பற்றி மிகவும் இழிவுபடுத்தி பேசியதால் நாவலப்பிட்டி, பாசற, மஸ்கெலிய ஆகிய ஊர்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குல்கள் இடம்பெற்றன. அது யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது. அக் காலப்பகுதியில் ‘சிங்கள மகா சபையை’ ஆரம்பித்து இயக்கி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இனவாதப் பேச்சு மூலம் தனது ‘சபை’யின் வளர்ச்சியை அதிகரித்தமைக்காக திரு பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.(பொன்னம்பலத்தின் பேச்சு ‘சிங்கள மகா சபை’க்கு புதிய பல கிளைகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பதற்கு வழி வகுத்தது).
புலிகளினதும் - கிட்லரினதும் ஆட்சியைக் கோருவது ஏன்?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 04 August 2018
- Hits: 6053
புத்தபிக்குகள் கோத்தபாயவிடம் கிட்லர் ஆட்சியைக் கொண்டுவருமாறு கோரினர். யூ.என்.பியின் எம்பியும் - அமைச்சருமாக இருந்த விஜயகலா புலிகளின் ஆட்சியைக் கோரினார். உண்மையில் இவை தற்செயலான – கிறுக்குத்தனமான கோரிக்கையோ - கூற்றுக்களோ கிடையாது. மாறாக இனரீதியான முரண்பாட்டுக்குள், இனவாத சக்திகளின் ஆதரவு பெற்ற கருத்துக்களாகவும் - "ஜனநாயகம்" குறித்த அறியாமையின் பொது உள்ளடக்கமாகவும் இருக்கின்றது.
பேரினவாதக் கருத்தியலானது கிட்லரின் மீள்வருகை குறித்த கருத்தைக் கொண்டாடும் அதேநேரம், கிட்லரின் ஆட்சியையொத்த புலிகளின் ஆட்சி குறித்த கருத்தை எதிராக முன்னிறுத்துகின்றனர். தமிழினவாதக் கருத்தியலானது புலிகளின் ஆட்சியைக் கொண்டாடும் அதேநேரம், புலிக்கு நிகரான கிட்லராக கருதப்படும் கோத்தபாயவின் ஆட்சியை எதிர்க்கின்றனர். இப்படி ஒரே கருத்தை எதிரும் புதிருமாக சிந்திப்பதே, முரண்பட்ட சிங்கள - தமிழ் இனவாதச் சிந்தனைமுறையாக இருக்கின்றது.
இங்கு விஜயகலா கோரியது பேரினவாதம் கூறுவது போல் புலிகளின் மீள்வருகையை அல்ல, புலிகளின் ஆட்சிமுறையையே கோரினார். கோத்தபாயவிடம் புத்தபிக்குகள் கோரும் அதே ஆட்சிமுறையையே விஜயகலாவும் கோரினார். இந்த வகையில் தமிழ் - சிங்கள இனவாதிகள் எந்த வகையான ஆட்சிமுறை அவசியம் என்பதில் ஒன்றுபட்டு நிற்பதும், அவற்றின் பிரதிநிதித்துவத்தை கோருவதில் மட்டும் முரண்பாடு நிலவுகின்றது.
புதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 30 July 2018
- Hits: 6604
இலங்கையில் மரணதண்டனையை மீள அமுல்படுத்தும் யோசனைக்கு ஆதரவும் - எதிர்ப்பும் கட்டுரைகள், அறிக்கைகள், பேச்சுக்கள் வாயிலாக காட்டப்பட்டு வருகிறது. அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மறியல் பேராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சக்திகள் எதுவும் இன்று இலங்கையில் இல்லை. எதிர்காலத்திலும் அதற்குத் தேவையான துணிச்சல் படைத்த மனிதாபிமான சக்திகள் உருவாகக் கூடிய சாத்தியங்களும் மிக மிகக்குறைவு. குடிமக்களின் இன்றைய மனோநிலையில் அப்படியான சாத்தியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இதற்கான காரணம் “லாபம்” என்ற ஒன்றுதான். “மரணதண்டனைக்கு” எதிராகப் போராடுவதனால் யாருக்கு என்ன லாபம்? என்று கேட்டால் “யாருக்கும் லாபம் எதுவுமில்லை” என்றே பதில் கிடைக்கும். மாறாக “மரண தண்டனை” இருந்தால் சில குற்றங்களைத் தடுக்கலாம் அல்லது குறைக்க முடியும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட சிந்தனையே சாதாரண குடிமக்கள் மத்தியில் நிலவுகிறது.
“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 22 July 2018
- Hits: 6800
1983 யூலை 25-27ல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அன்றைய ஆட்சியாளர்களால் நன்கு திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதே நாட்களில் நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரமும் அன்றைய அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டதேயாகும்.
இக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதற்கு முன்னரும் கலவரங்கள் இடம் பெற்றிருந்தன. கொலைகள் இடம் பெற்றிருக்கின்றன. 1977 ம் ஆண்டுக் கலவரத்திலும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் அரசியல் பயணம் வன்முறை வடிவத்தை அடையத் தொடங்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் வன்முறையானது தனியே இளைஞர்கள் மத்தியிலேயே முனைப்புக் கொண்டிருந்தது. மக்கள் இளைஞர்களின் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருந்தனர். ஏற்கனவே கலவரங்களுக்குப் பழக்கப்பட்டிருந்த சாதாரண பொதுமக்கள் 1983 கலவரத்தையும் வழமை போலவே சாதாரணமாகக் கடந்து போயிருப்பார்கள்.
ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை -சி.கா.செந்திவேல்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 20 July 2018
- Hits: 1148
ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை
சி.கா.செந்திவேல்
பொதுச் செயளாளர்.
நாட்டின் அனைத்து மக்களும் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதேவேளை, அதிகார துஸ்பிரயோகங்களும் ஊழல்களும் பெருகிநிற்கின்றன. பழைய திருடர்களைக் காட்டிப் பதவிக்கு வந்தோர் புதிய திருடர்களாக இன்று உருவாகி நிற்கின்றனர். போதைப் பொருட்களின் பரம்பலும் பாவனையும் அதிகரித்து தெற்கே பாதாள உலகக் குழுக்களும் வடக்கே வாள்வெட்டுக் கோஸ்டிகளும் மக்களின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தியும் சீரழித்தும் வருகின்றன.
இவ்வாறு கடந்த 03.07.2018 அன்று யாழ்ப்பாணம் கொக்குவிலில் இடம்பெற்ற புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் 40 ஆவது ஆண்டையொட்டிய விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்கள் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 July 2018
- Hits: 6314
சாதி அவசியமற்ற ஒன்றாக காட்டி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக கூறுவதே, நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும். அதாவது வெளிப்படையான சாதிய ஓடுக்குமுறைகளை மறுத்து, சாதிய திருமணங்களை நியாயப்படுத்துவது நடக்கின்றது. இலங்கையில் தீண்டாமை இயக்க போராட்டங்கள் கூட, இதைத் தான் முன்வைத்தது.
புலம்பெயர் குழந்தைகள் சாதியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் பெற்றோரின் சொத்துடமையை பெறவும், சாதிப் பெருமைகளை நிலைநாட்டுகின்ற பண்பாட்டு வழி வந்த ஆடம்பர நுகர்வு திருமணங்களை அனுபவிக்கவும், திருமணத்தில் கிடைக்கும் பெருந்தொகையான மொய்யை பெறவும்.. பெற்றோரின் சாதிய அடிப்படையை மறுதலிக்காமல் குழந்தைகள் தேர்ந்தெடுக்கின்றனர். சாதியை அடிப்படையாகக் கொண்ட பெற்றோரின் தேர்வை மறுத்தால், குழந்தைகளுக்கு இவை கிடையாது. இதுதான் குழந்தைகளின் சாதியத் தேர்வுக்கான காரணம் என்று புலம்பெயர் குழந்தைகளின் சாதியம் சம்பந்தமான முன்னைய கட்டுரை ஒன்றில் கூறி இருந்தேன்.
சாதி இருப்பதை மறுக்க - சாதி எதார்த்தம் குறித்த கிறுக்குத்தனமாக வாதம்
யாழ்ப்பாணத்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பு முறைமையிலான அதே வடிவில் சாதியம் புலம்பெயர் தேசங்களில் இருக்கவும் - நீடிக்கவும் முடியாது. ஏனெனின் மேற்கில் வளரும் குழந்தைகளின் சமூக சூழல் வேறு, யாழ்ப்பாணத்தின் சூழல் வேறானது. இருந்த போதும் கூட சாதியம் திருமண உறவை தீர்மானிக்கின்றது.
சாதியம் என்பது இன்று இலங்கையில் உற்பத்தி உறவு வடிவில் இல்லை. புலம்பெயர் நாட்டில் வடக்கில் இருக்கின்ற அளவுக்கு, சாதிய புறச்சூழல்கள் இல்லை. இதனால் புலம்பெயர் நாட்டில் சாதி இல்லை என்பதாகிவிடுமா!? நூற்றுக்கு நூறு ஒவ்வொரு வீட்டிலும், வெள்ளாளிய சிந்தனையில் சாதியமும் - சாதிச் சடங்குகளும் தொடரத்தான் செய்கின்றன.
பெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் !!!!!!!!!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 29 June 2018
- Hits: 7094
யாழ்ப்பாணம் "கொதிநிலையில்" உள்ளது. காரணம் காட்டுபுலம் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை. 25 வருடங்களுக்கு மேலாக பல நூறு பெண்களைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி, அவர்களைப் படுகொலை செய்த கட்சியின் தலைவர் தொடக்கம்,- தமது வீடு, வேலைத்தலம், பஸ், ரெயின், கோவில் என எல்லா இடங்களிலும் பாலியல் வன்கொடுமை புரியும் பெரும்பான்மையான யாழ்ப்பாணத்து ஆண்கள் இங்கு "கொதிநிலையில்" உள்ளனர். இவர்கள் ஒருபக்கம் "போராட", மறுபக்கம் தேசியம் பேசும் ஆண்களும், பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை செய்வோரும், பாலியல் இலஞ்சம் கோரும் அரச பணியாளர் மற்றும் அரசியல்வாதிகளும், உயர்கல்வி நிலையங்கள், கடற்கரை ஓரம், பற்றை பறுகுகளில் பெண்களை ஏமாற்றிக் கைவிடுவோரும் கூட காட்டுப்புலக் கொடுமைக்காக கொடுக்கிழுத்துக் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் எல்லாம் நீதி கேட்கிறார்களாம் !!!!!!!!!
சில "சர்வ சாதாரணமான" அனுபவங்கள்
வித்தியாவுக்கு நடந்த கொடுமைக்காக மேற்கூறியவர்களில் பலர் போராடியதை நான் நேரடியாகப் பார்த்தேன். அப்போராட்டத்தில் பங்குகொண்ட நபர்கள், சில மணித்தியாலங்கள் கூட தமது பெண்கள் மீதான பாலியல்- மற்றும் சுரண்டல்களை நிறுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கான போராட்டம் நடந்தபோது, அப்போராட்டத்துக்கு பல பிரதேசங்களில் இருந்து போராட்டத்தில் பங்குகொள்ள வந்த பெண்களை - போராட்டம் முடிந்தபின், போராட்டத்தில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்து ஆண்கள் சமூகம் எப்படி நடத்தியது என்று அவ்விடத்தில் நின்று அவதானித்தவர்கள் அறிவார்கள்!!! போராட்டம் முடிந்து பஸ்சில் பயணம் செய்த பெண்களை, காமவெறி பிடித்து உரசியதும், பெண்களின் உறுப்புகளில் அத்துமீறி கைவைத்ததும் நடந்தேறியது.
அப்போராட்டத்தின் பின் நான் பயணித்த பேருந்தின் நடத்துனர், பஸ்ஸின் பின்பகுதிக்குப் போகுமாறு குழுவாக நின்ற சில இளம் பெண்களுக்கு கட்டளையிட்டார். அவரின் கட்டளையை கேட்டும் கேட்காதது போல அசையாது நின்றார்கள் பெண்கள். நடத்துனர் மறுபடியும் பின்னால் போகுமாறு கத்தினான். அப்போ, பெண்களில் ஒருத்தி "பின்னால இடமில்லை - அங்க பொடியள் நிக்கிறான்கள்" என பதிலளித்தார். அப் பதிலைக் கேட்ட நடத்துனர் "கொஞ்சம் பின்னால போனா உங்கட சாமான் ஒண்டும் தேஞ்சு போகாது, பின்னால போறியளா, இல்லாட்டி பஸ்ஸை விட்டு இறங்கிறீங்களா??? !" என்று கூச்சல் போட்டான். பெண்கள் அடங்கிப்போனார்கள். இந்நிகழ்வை அந்த பஸ்ஸில் இருந்த- வித்தியாவுக்கு"போராடிய" எல்லாப் "போராளிகளும்" பார்த்துக் கொண்டிருந்தார்கள்.