"UN LOCK" குறும்படம் மீதான விமர்சனம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 10 May 2018
- Hits: 6215
அண்மையில் பாரிசில் "UN LOCK" குறும் படம் காட்சிப்படுத்தப்பட்டது. 13 நிமிடங்கள் கொண்டது இந்தக் குறும் படம். இலங்கை இனவாத யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் கொண்டு, தனக்கான அரசியலையும் - வியாபாரத்தையும் செய்திருக்கின்றது.
சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுவனின் தந்தையை அடிப்படையாகக் கொண்ட கதை. அன்றாட யுத்தச் செய்தியை சைக்கிள் டைனமோ மூலம் கேட்கும் மாணவன், பாடசாலை செல்லும் காட்சியுடன் படம் தொடங்குகின்றது. தந்தைக்கு விடைகொடுத்து பாடசாலை செல்லும் மாணவன், தனது நண்பன் கொல்லப்பட்ட இடத்தில் பழைய நினைவுகளுடன் தன்னை மறந்து புலம்பும் காட்சியும், தந்தையால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லும் காட்சியுடன் கதை முடிகின்றது.
பழைய நினைவு தான் கதைப்புலம்;. வழமைபோல் பாடசாலை செல்லும் காட்சி. அவனின் நண்பன் தலைகீழாக இருந்த ஐ.நா (UN) வாகனம் ஒன்றின் மேல் அமர்ந்திருந்த சூழலில் மையக் கதை தொடங்குகின்றது. ஐ.நா என்றால் என்ன என்று (படத்தின் பெயரில் உள்ள முதல் சொல்) அதற்கு விடையை கண்டுபிடிக்க முடியாத சிறுவன், தானே அதைக் கண்டுபிடிப்பதாக கூறி, இறுதியில் தந்தை அழைத்துச் செல்லும் போது ஐ.நா வாகனத்தை திரும்பிப் பார்த்த காட்சியுடன் கதை முடிகின்றது.
இதற்கு இடையில் 5 சிறுவர்கள் தங்கள் விளையாட்டுக்கு பாவிக்கும் ஆயுதப் பொருட்கள், ஆயுதங்கள் போன்று உருவமைக்கப்பட்ட பொருட்கள், வெவ்வேறு நண்பர் குழுக்களுக்கு இடையில் பண்டமாற்றாக இருக்கும் ஆயுதப்பொருட்கள், அதை பெற்றுக் கொள்ளும் போது இராணுவரீதியான செயல்கள் - அணுகுமுறைகள், விளையாடிக் கொண்டிருக்கும் போது நடந்த யுத்த வன்முறையில் தன் நண்பன் கொல்லப்பட்ட நினைவுக் காட்சி. இப்படி 13 நிமிடங்கள் கொண்ட குறும்படம்.
படத்தின் பெயரான "UN LOCK" மூலம் சொல்லும் அரசியல், (UN-United Nation) ஐ.நா குறிக்க, அது தமிழ் மக்களை கண்டு கொள்ளாததைக் குறிக்க (Lock) என உள்ளடக்கி, ஐ.நாவின் கண்களை திறக்க வைப்பதற்கான முயற்சி. காட்சிகள் இதைத்தான் மையப்படுத்தின. இது தான் படத்தை இயக்கியவர் முன்வைத்த கருத்தும் கூட. இன்னுமொரு பக்கத்தில் ஐ.நா பெயரை விடுத்து நேரடி ஆங்கிலச் சொல்லின் அர்த்தத்தில் பார்த்தால், மூடப்பட்டு இருக்கும் விடையம். இணைந்த சொல்லின் பொருளில் இதை தகர் என்று கூறக்கூடிய பொருளில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கின்றது. இந்தப் பெயர் எதைக் குறிக்கின்றது என்ற கேள்வியின் போது, இதை இயக்கியவர் ஐ.நாவைக் கடந்து இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியுமா? என்று எதிர்க் கேள்வியைக் கேட்டதன் மூலம் தனது நிலையை தெளிவுபடுத்தி இருந்தார்.
கிளிநொச்சி மக்களுக்கு சாராயக் கடை அவசியமாம்!- ஐ.நாவின் வாரிசுகள் தீர்மானம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 06 May 2018
- Hits: 6170
இன்று அன்றாடம் நடக்கும் தன்னிச்சையான மக்கள் போராட்டங்களைக் கண்டு கொள்ளாதவர்கள் தான், மக்களுக்கு சாராயக் கடை அவசியம் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். இனவாதத்தை முன்வைத்து வாக்குப்பெற்ற வெள்ளாளிய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியான சிறிதரன், யாழ்ப்பாணத்தில் 64 சாராயக் கடைகள் இருப்பதை எடுத்துக்காட்டினார். எமது பிரதேசமான கிளிநொச்சியில் ஒன்றுமில்லை என்று எடுத்துக்காட்டி, எமது பிரதேசத்திற்கு சாராயக் கடைகளை நாம் அமைக்க வேண்டும் என்றார்.
யாழ்ப்பாணம் போல் மக்களைக் குடிகாரராக்கி பணத்தைப் பெருக்க விரும்பும் சாராய முதலாளிக்காகவே, சுரண்டும் வர்க்க நாய்கள் எல்லாம் குலைத்திருக்கின்றது. மக்களை கடித்துக் குதறுவதை நியாயப்படுத்த, கசிப்பையும், கஞ்சாவையும் துணைக்கு அழைத்திருக்கின்றது. அதாவது கசிப்பையும், கஞ்சாவையும் ஒழிக்க சாராயக் கடையாம்! இது வேறு ஒன்றுமல்ல, இனவாத ஒடுக்குமுறைகளை ஒழிக்க இனவாதம் பேசுவது, இனவொடுக்குமுறைக்;கு தீர்வு காண அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கின்ற வெள்ளாளியச் சிந்தனை முறைதான், குடியை ஒழிக்க குடியை அறிமுகப்படுத்தக் கோருகின்றது.
கசிப்பை, கஞ்சாவை குடிப்பதற்கான சமூகக் காரணங்களை கண்டறியவும், வரைமுறையின்றி குடிக்கின்ற நுகர்வாக்கப் பண்பாடுகளை கண்டறிந்து, சமூக உணர்வுள்ள கூட்டுச் சமூகத்தை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தீர்வுகாண வேண்டிய விடையம் இது. இப்படி இருக்க யாழ்ப்பாணம் போல் சாராயக் கடையில் குடிப்பதே, கிளிநொச்சிக்கு தீர்வு என்கின்றனர் வெள்ளாளியப் பன்னாடைகள்.
இவ்வாறு கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, தீர்மானமாக்கப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை எடுக்க மேற்கு ஏகாதிபத்தியத்தால் இலங்கையை ஆள தெரிவுசெய்யப்பட்ட மைத்திரியின் தயவில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், "சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால், அதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் இல்லையெனில் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள்" என்று கூறி எனவே அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்கின்றார். இப்படி மூலதனத்திற்காக குலைக்கவும், கடிக்கவும் தயாராகவுள்ள நாய்கள் எல்லாம் கூடி, மக்களுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்திருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது குழந்தைகளும், பெண்களும் தான்.
ஜே.வி.பியின் சிவப்பு வேசமும் - சுமந்திரனின் நவதாராளவாதமும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 34
- Created: 05 May 2018
- Hits: 977
மேதினத்தில் ஜே.வி.பியும் - சுமந்திரனும் சந்திக்கும் புள்ளி, தேர்தல் முறை மூலம் நவதாராளவாத முதலாளித்துவத்தை முன்னெடுப்பதில் இருக்கும் வர்க்க ஒற்றுமை தான். இதே போல் மக்களை ஏமாற்ற பௌத்த சிங்கள சிந்தனையை ஜே.வி.பி. கொண்டிருந்தது போல், எதிர்மறையில் வெள்ளாளிய தமிழ் சிந்தனையை சுமந்திரன் கொண்டிருந்ததால், முதலாளித்துவ அணிகளின் ஒத்த குறிக்கோள் மேதினத்தில் ஒரு அணியாக அணிதிரளவைத்தது.
மேதினத்தை கேலிக்குள்ளாக்குவதும், விடுமுறையாக மாற்றுவதும், முதலாளிகள் தொழிலாளர்கள் சேர்ந்து கேளிக்கைகளுடன் பொழுதைப் போக்கும் தினமாக மாற்றுவதே, மேதினம் குறித்த முதலாளித்துவ உள்ளடக்கமாகும்;. அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர வர்க்கக் கூறுகளை அழிப்பதையே, ஆளும் வர்க்கமும் அரசும் தனது நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. அதேநேரம் புரட்சிகர சக்திகளை, புரட்சிகர வேசம் போட்டவர்களைக் கொண்டு அழிப்பதுமாக இருக்கின்றது.
கழுத்து வெட்டும் இனவாதக் குறியீடும் புலிக்கொடி காட்டும் இனவாதமும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 34
- Created: 30 April 2018
- Hits: 814
இலண்டன் இலங்கைத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட இலங்கையின் 70வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது, இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிராக, இலங்கையின் சுதந்திரதினம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கறுப்புதினம் என்றும், தமிழீழம் எங்கள் தேசம், பிரபாகரன் எங்கள் தலைவர் என்றும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஒன்றினை இலண்டன் புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடிகளையும் பிரபாகரனின் உருவப்படம் கொண்ட பதாகைகளையும் தாங்கிய வண்ணம் நடாத்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலண்டன் இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான பிரியங்க பர்னான்டோ தூதரக வளாகத்தின் முன்னால் கூடியிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என்பதாக சைகை காட்டிச் சென்றது மீண்டும் தொடர்ந்து வந்த நாட்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்களை உருவாக்கியிருந்தது.
இலங்கையின் «நல்லாட்சி» அரசு காணாமலாக்கப்பட்டோர் பற்றியோ, அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை பற்றியோ, கேப்பாப்புலவு போன்ற இடங்களில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட குடிமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது பற்றியோ எழுந்த உள்ளுர் மக்களின் போராட்டங்களுக்கு உரியமுறையில் என்றும் செவிசாய்க்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க,
தமிழீழக் கொடியும் பிரபாகரனின் உருவப் படமும் காற்றிலாட ஒரு புறத்தாரும், இலங்கையின் சுதந்திரதினத்தில் இலங்கையரசின் தேசியக் கொடியின் கீழ் நின்று இராணுவப் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பர்னான்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என சைகை செய்ததன் மூலம், ஒடுக்குமுறை அரசு என மறுபுறத்தினரும் நடந்து கொண்டமை ஊடகங்களுக்கு இனவாத செய்தியாக மட்டுமல்ல அதன் மூலம் சிங்கள, தமிழ் இனவாத அரசியல் சக்திகளுக்கும் தீனிபோட்டு உருவேற்றியிருந்தது.
இந்தக் குறிப்பிட்ட தூதரக பாதுகாப்பு இராணுவ அதிகாரியின் செயலைக் கண்டித்து தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து நலிந்த குரலாயிருந்தாலும் உறுதியான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. ஆனால் அவைகளை என்றும் இனவாதச் சகதி ஊடகங்கள் பிரபலப்படுத்துவதில்லை, முன்னிலைப்படுத்துவதில்லை.
இனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 02 May 2018
- Hits: 6380
தமிழ் இனவாதமானது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கும் வண்ணம் முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. இன்று "சுயநிர்ணயம்" என்பது பிரிவினையாகவும் -தனிநாடாகவும் எப்படி முன்னிறுத்தப்படுகின்றதோ, அதே பொருளில் தமிழ் இனவாதம் இயங்குகின்றது.
தமிழ் இனவாதமானது ஒடுக்கும் தனது குறுகிய அரசியலால் தனிமைப்பட்டு அம்பலமாகி விடுகின்றது. அரசியல் ரீதியாக தன்னை முன்னிறுத்த வக்கற்றுப் போகின்றது. இந்த அரசியல் பின்னணியில் இனவாதமானது வன்முறை கொண்ட கும்பலாக மாறி, ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுகின்றது. இதுதான் புலிகளின் வரலாறு தொடங்கி தமிழீழம் (ஈழம்) கேட்ட ஈழத்து இயக்கங்களின் பொது வரலாறுமாகும். அதேநேரம் போலி இடதுசாரியமானது இதற்கு முண்டுகொடுக்கும், கோட்பாட்டு அரசியல் விபச்சாரத்தை செய்ததே எமது கடந்த வரலாறாகும்.
புலிகளின் அழிவின் பின் வன்முறை மூலம் அக ஒடுக்குமுறைகளை தொடரும் அதிகாரத்தை இனவாதம் இழந்து இருக்கின்றது. அக ஒடுக்குமுறையே தமிழனின் சமூக அமைப்பாக இருப்பதால், தமிழ் இனவாதம் புலிகளுடன் அழிந்துவிடவில்லை. இனவாதத்தை முன்வைத்து பிழைக்கும் இனவாதக் கும்பல்கள், தமிழ் இனவாதத்தை பாதுகாக்க போராடுகின்றது. இந்த பின்னணியில் தமிழினவாத போலி இடதுசாரியக் கும்பல்களும், பேர்வழிகளும் இனவாதத்தைப் பாதுகாக்கும் போலி இடதுசாரிய கோட்பாடுகளை வாந்தி எடுப்பது இன்னமும் தொடருகின்றது. இந்த வகையில் அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட இரண்டு போலி தமிழ் இடதுசாரிய இனவாத தர்க்கங்களைப் பார்ப்போம்.
1.ஒடுக்கப்பட்டவனின் இனவாதம் ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானது என்கின்றனர். அதாவது இரண்டு இனவாதமும் ஒன்றல்ல. ஆகவே ஒடுக்கப்பட்டவனின் இனவாதத்தை ஒடுக்கபட்டவர்கள் ஆதரித்து அணிதிரள வேண்டும்.
2.நாம் அனைவரும் இலங்கையர் என்பது ஒடுக்கும் இனவாதக் கோசமே ஒழிய, ஒடுக்கப்பட்டவர்களின் கோசமல்ல. ஆகவே நாம் இலங்கையர் என்பதை எதிர்த்து, நாம் தமிழர் என்பதை உயர்த்த வேண்டும்.
இனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிராக சமவுரிமை இயக்கத்தின் அண்மைய நடைமுறைப் போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோசங்களை எதிர்த்து, தமிழ் இனவாத போலி இடதுசாரிகளின் பித்தலாட்ட தர்க்கங்களே இவை. தமிழ் இனவாதத்தை தங்கள் அரசியல் தெரிவாகக் கொண்ட போலித் தமிழ் இடதுசாரியமானது, புலிக்கு பிந்தைய வலதுசாரியத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த, இந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றது. இந்த வலதுசாரிய தமிழ் இனவாத தர்க்கத்தின் அரசியல் சாரத்தைப் பார்ப்போம்.
ஒடுக்கப்பட்டவரின் இனவாதமானது ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானதா!?
உடை பாரம்பரியம் குறித்த சம்பந்தனின் வெள்ளாளியச் சிந்தனை
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 April 2018
- Hits: 6340
எமது இந்துக் கல்லூரியில் சேலை (சாறி) அணிவதே பாரம்பரியம் என்கின்றார், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். இந்த வகையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் பாரம்பரியம், பேணப்பட வேண்டும் என்கின்றார்.
பத்திரிகை "ஜனநாயகம்" குறித்து, ஊடக "தர்மம்" குறித்தும் சுயதம்பட்டம் அடிக்கும் ஊடகங்கள் (குறிப்பாக தினக்குரல்), முஸ்லிம்-இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இனமதவாதத்தைக் கக்கியிருக்கின்றது. செய்திகளை திரித்தும் புரட்டியும் ஒரு பக்கச் சார்பாகவும், இன-மத வாதத்தை தூண்டிவிட்டும் வியாபாரத்தை நடத்தியிருக்;கின்றது.
பொதுபலசேன தன் பங்குக்கு முஸ்லிம்களின் உடை குறித்து இன-மத வெறியை கக்கத் தொடங்கி இருக்கின்றது.
எதிர்காலத்தில் மக்களை இன-மத ரீதியாக பிளக்கும் விவகாரமாக, பாடசாலைகளின் உடை குறித்த பிரச்சனையே அரசியல் அரங்குக்கு கொண்டு வரப்படுகின்றது.
இலங்கையின் எல்லாப் பாடசாலைகளும் மதப் பாடசாலைகளாக, தன்னைத்தான் வரையறுத்து அடையாளப்படுத்துவதையே இந்த விவகாரம் கோருகின்றது. இனமதவாத கலாச்சாரத்தை திணிக்கும் இடமாக, பாடசாலையை தேர்ந்தெடுக்க கோருகின்றது. மதம்-சாதி-இனமற்று பழகிய மாணவப் பருவம் இனி இலங்கையில் கிடையாது என்பதும், ஒவ்வொருவரும் மத அடையாளங்கள் மூலம் தம்மை முன்னிறுத்துமாறும் இந்த விவகாரம் கோருகின்றது.
இதற்கேற்ப திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சனைக்கு தீர்வாக, மத -இன அடிப்படையில் இடமாற்றம் நடந்து இருக்கின்றது. இதன் மூலம் மனிதவிரோத இனமதவாத இழிசெயலை அங்கீகரித்திருக்கின்றது. இனி இலங்கையில் இன-மத அடிப்படையில் அரச நியமனங்கள் என்ற புதிய இன-மதவாத அகராதியை தொடக்கி இருக்கின்றது. இலங்கையில் இனமத ரீதியான பிளவுகள், மேலும் ஆழமாக்கப்பட்டு வருகின்றது.
"இந்து" உடைப் பாரம்பரியம் என்பது வெள்ளாளியச் சாதிய அமைப்பின் பித்தலாட்டம்
அண்மையில் புத்தூரில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாழ்விடத்தில் பிணத்தை எதிர்ப்பதே எங்கள் பாரம்பரியம் என்று கூறிய அதே வெள்ளாளியச் சிந்தனையில் இருந்து தான், 150 வருட உடைப் பாரம்பரியம் குறித்து பேச முடிந்திருக்கின்றது. பழமைவாதச் சிந்தனையின் தொடர்ச்சிதான் இது.
தமிழர்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் 150 வருடங்களுக்கு முந்தைய பாரம்பரிய கோவணத்துடன் பாராளுமன்றம் சென்று தன் தமிழன் அடையாளத்தைக் காக்க அதே கோவணத்துடன் அமெரிக்கா வரை விமானம் ஏறிச் சென்று இருந்தால், அவரின் "தூய" 150 வருட உடைப் பாரம்பரியம் குறித்த கூற்றை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.
150 வருடத்து பாரம்பரிய தமிழன் கோவணத்தை (பேரினவாதம் பிரபாகரனை கொன்ற பின் கட்டிய அதே கோவணம் தான்) தனது உள்ளாடையாகக் கூட அணியாத சம்மந்தன், பாரம்பரிய உடைபற்றி பேசுவதன் மூலம், 150 வருடத்துக்கு முந்தைய ஆறுமுகநாவலர் வழிவந்த வெள்ளாளிய சாதிய மதச் சமூக அமைப்பினை பெண்களை ஒடுக்குவதன் மூலம் தாங்கிப் பிடிக்க முனைகின்றார்.
பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 34
- Created: 30 April 2018
- Hits: 777
நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.
புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.
அரசாங்கத்திற்கு சொந்தமான தபால் திணைக்களம் எங்களைத் தவிர சகல இலங்கை மக்களுக்கும் அவர்களது விலாசத்திற்கு கடிதங்களைக் கையளிக்கின்றன. தமக்குரிய வீட்டில் இருந்தாலும், வாடகை வீட்டில் குடியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் விலாசம் உண்டு. தபால் திணைக்களம் அந்த ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயருக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும் அவர்களதுகைகளிலேயே ஒப்படைக்கின்றது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்கு விலாசம் இல்லை. ஆகவே, எமது பெயருக்கு வரும் கடிதங்கள் தோட்ட நிர்வாகியின் மூலம் அவரது விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.
விலாசமும் கிடையாது, இலங்கையில் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் குறைந்தபட்ச சிவில் உரிமைகளும் கூட தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்குக் கிடையாது. எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அந்த உரிமைகளில் எதையும் எங்களுக்கு வழங்காதது மாத்திரமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் முழுமையான சிவில் உரிமைகளை இலங்கை அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவுமில்லை.
ஆகவே, துன்பப்பட்டது போதும். இது, எமது உரிமைகளுக்காக போராட வேண்டிய காலம். தனித் தனியாக அல்ல சேர்ந்து போராட வேண்டும். அதற்காக தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையத்தோடு இணையுங்கள்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியும் வீடும் மாதாந்த சம்பளமும் வென்றெடுக்கப் போராடுவோம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கான சிவில் உரிமைகளை வழங்கு!
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர மாதச் சம்பளத்தை வழங்கு!
தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 34
- Created: 30 April 2018
- Hits: 692
தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!
அன்புத் தோழரே, தோழியரே,
சுகாதார நல உதவியாளர், பணிவிடையாளர், சிறு சேவைகள் நிர்வாகி என்ற ரீதியில் எமது சேவைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான எம் அனைவரினதும் வாழ்வு ஒரேவிதமாகத்தான் கழிகின்றது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை. இனிய கனவுகளுடன் நாம் பணி செய்ய வந்தாலும், கனவுகளுடனேயே முதுமையடைந்து ஓய்வுபெறும் வரை வாழ்வில் நிம்மதியடைந்த ஒருவரை காண முடியாது. எதிர்வரும் வருடங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும்.
இந்த வாழ்க்கை தானாகவே மாறிவிடுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? காலம் கடத்திக் கொண்டிருந்தால் இந்த நிலையும் இல்லாமலாகி மோசமான நிலை உருவாகிவிடும். அப்படியானால், தற்போதைய வாழ்க்கை நிலையை மாற்றுவதற்காக போராடத்தான் வேண்டும். கடந்த வரலாற்றில் எந்தவொரு வெற்றியையும் போராடித்தான் பெற்றுள்ளோம். ஆட்சியாளர்களின் கருணையால் கோரிக்கைகள் கிடைக்கப் போவதில்லை. அதனை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். தனித்தனியாகப் போராடுவதற்குப் பதிலாக சேர்ந்து போராடுவோம். அதேபோன்று அந்த வரலாற்றில் நடந்த தவறுகளையும், காட்டிக் கொடுப்புகளையும் நாம் அறிந்திட வேண்டியுள்ளது. அந்த நிலைமையை உணர்ந்து எமது வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய பயணத்தை தொடங்குவோம்.
அதற்காக நாம் கையாளக்கூடிய பல வழிமுறைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு தொழிற் சங்கத்துடனாவது செயற்பட்டு பொது தொழிலாளர் அமைப்பொன்றில் நாம் செயற்பட வேண்டும். அது மட்டுமல்ல, தனித் தனியாக போராடுவதனால் நாம் பிளவுபடுவோமேயன்றி வெற்றி பெற முடியாதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சகல தொழிற் சங்கங்களும், சகல அலுவலர்களும் ஒன்றிணைந்து போராடுமாறு நாம் வேண்டுகின்றோம். அதற்காக எமது தொழிற்சங்கத்தின் தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு நாம் தயாராக இருப்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
ஆகவே, அதற்காக எமது புதிய அமைப்போடு இணையுமாறு வேண்டுகின்றோம். அதனூடாக எடுக்கப்படும் பொது நடவடிக்கைகளுடன் இணையுமாறு வேண்டுகின்றோம். அதற்காக உங்களை அழைக்கின்றோம்.
அமைப்பாக ஒன்றுபடுவோம்! எழுந்து நிற்போம்! வெற்றி பெறுவோம்!
தோழமையுடன்,
அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் - தொடர்பாளர்- டொக்டர் ஆர்.எம்.டப்.ரணசிங்க- 0718046175
உயரும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவின்படி ஊழியர் சம்பளத்தை உடனே உயர்த்து!
மேலதிக வேலையை ரேட் முறையில் வழங்கு!
சகல பதிலீடான மற்றும் சமயாசமய சுகாதார ஊழியர்களையும் ஓய்வூதியத்தடன் உடனே நிரந்தரமாக்கு!
ஓய்வூதியத்தில் கை வைக்காதே – பங்களிப்பு ஓய்வூதிய ஏமாற்று வேண்டாம்!
சகல சுகாதார ஊழியர்களினதும் வேலை நாளை 6 மணித்தியாலங்களாக்கு!
சகல சுகாதார ஊழியர்களுக்கும் 5 நாள் வாரத்தை பெற்றுக்கொடு!
வைத்தியசாலை சேவைகள் விற்பனையை நிறுத்து!
----- அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம்
இரணில்- மைத்திரி அரசின் கொள்கைகள் மீதான வெறுப்பே, மகிந்தவின் தேர்தல் வெற்றி
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 34
- Created: 30 April 2018
- Hits: 801
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை முன்னிலை சோஷலிஸக்கட்சி 11.02.2018 அன்று நடத்தியது. இதன்போது அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, இந்திரானந்த சில்வா மற்றும் புபுது ஜயகொட ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் முடிவுகள் சம்பந்தமாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சார்பில் அதன் கல்விச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம்:
சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. என்றாலும் அந்த உள்ளுராட்சி சபைகளில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார் என்பது குறித்து தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி 42 வீத வாக்குகள் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பது தெரிகின்றது.
ரணில்-மைத்திரியின் கொள்கைகளின் தோல்வி
2015ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை நிராகரித்து வாக்களித்த மக்கள் ரணில் - மைத்திரி கூட்டணியிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள். இப்போது இந்த கூட்டரசாங்கம் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போவதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை மிகப் பாரதூரமான நிலைமையாகவே நாம் காண்கிறோம். 2015ல் மஹிந்த ராஜபக்ஷவை படுதோல்வியடையச் செய்த மக்கள்தான் தற்போதைய அரசாங்கத்தையும் அதிகாரத்திற்கு கொண்டுவர வாக்களித்தார்கள். நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அந்த அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. மூன்று இளைஞர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ரத்துபஸ்வல மக்களின் போராட்டம், ரொஷான் சானக என்ற தொழிலாளர்- தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய தனியார்துறை தொழிலாளர்களின் போராட்டம், சிலாபத்தில் அந்தோனி என்ற மீனவத் தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவ மக்களின் போராட்டம், சானக மற்றும் சிசித ஆகிய இரு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட கல்வி உரிமைகளை பாதுகாக்கும் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டம் ஆகியவற்றை ராஜபக்ஷ அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கியதை நீங்கள் அறிவீர்கள்.
சிவில் உரிமைகளற்ற தோட்ட மக்களுக்கு தேசிய சுதந்திரம் அர்த்தமுள்ளதா?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 34
- Created: 28 April 2018
- Hits: 904
பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற தினமாக 1948 பெப்ரவரி 4ம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்தாகக் கூறப்படும் அந்த சுதந்திரம் இந்த பெப். 4ம் திகதி 70 வருடங்களை நிறைவு செய்கின்றது. அன்றிலிருந்து கடந்த ஒவ்வொரு வருடத்திலும் இதனை பெருமையுடன் நினைவு கூர அரசாங்கம் தவறவில்லை. இம்முறையும் பூரண அரச அனுசரணையுடன் சுதந்திரத்தை நினைவு கூர அரசாங்கம் தயாராகி வருகின்றது. மறுபுறம், இலங்கையானது ஜனநாயக நாடென்ற ரீதியில் குடிமகனுக்குரிய ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாகவும் பரவலாக பேசப்படுகின்றது. மனித உரிமைகள் சம்பந்தமாக நிறைவேற்றிக் கொண்ட பிரகடனங்களும் அவற்றில் அடங்குகின்றன. பேசும் மொழி, வழிபடும் மதம், ஆண் பெண் என்ற ரீதியில் பாகுபாடு காட்டமாட்டாதென அரசாங்கம் உறுதி செய்துள்ளது. சட்டப் புத்தகத்தில் எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஏனைய குடிமக்கள் நடைமுறையில் அனுபவிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் கூட பறிக்கப்பட்ட மக்கள் மலையகத்தில் வாழ்கிறார்கள். இது விடயம் பெரும்பாலானோரின் கவனத்திற்கு வருவதில்லை என்பதோடு அநேகமானோருக்கு இந்த விடயம் தெரியாது.
மலையகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத, இலங்கையின் சனத்தொகையில் தோட்டத்தை அண்டி வாழும் சுமார் 10 இலட்சம் மக்கள் 145 சதுர அடிக்கும் குறைந்த வரிசை வீடுகளின் வாழ்கிறார்கள். இலங்கை மண்ணில் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட உரிமையில்லாத அவர்களுக்கு தமக்கான வீடோ, கடிதங்கள் நேரடியாகக் கிடைக்கக்கூடிய விலாசமோ கிடையாது. பெயரளவில் பிரஜாவுரிமை கிடைத்திருந்தாலும் அரசாங்கத்தின் எந்தவொரு நிர்வாக நிறுவனத்திலும் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கில்லை. அரசியல் விஞ்ஞான அகராதியின்படி சிவில் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக அவர்களைக் கருத முடியும். ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் குறித்த சரியான அர்த்தத்துடன் உலக சமூகத்தில் அவர்கள் தோட்டக் கம்பனிகளின் கீழ் தோட்டத் துரைமாரின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு தேயிலைத் தோட்டத்தோடு கட்டப்பட்டு பாதி அடிமைகளாக, பாதி சம்பள உழைப்பாளிகளாக வாழ்கிறார்கள். அரசாங்கம் 70 வதாவது சுதந்திரத் தினத்தை நினைவுகூர தயாராகும் இத்தருணத்தில் தோட்டத் தொழிலாளருக்கு குறைந்தபட்சம் முழுமையான குடியுரிமை கிடைத்திருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 70வது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் அரசாங்கம் இத்தருணத்தில் தோட்டத் தொழிலாளருக்கு குடிமக்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளாவது கிடைத்திருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.