வெற்றிகரமாக நிறைவேறிய சமவுரிமை மாநாடு
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
15 Jul 2014
- Hits: 1435
சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை இன்று (15-07-2014) கொழும்பில் நடாத்தியது.
கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில், நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் பங்குகொண்டனர். மாநாடு நடைபெற்ற கொழும்பு பொதுநூலக வளாகம் முழுவதும் இன, மத வாதத்துக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட "மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற பதாதையில் மக்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கையெழுத்திட்டிருந்தனர். அப்பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சமவுரிமையை முன்னிறுத்தி மாபெரும் மாநாடு!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
12 Jul 2014
- Hits: 1263
சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை கொழும்பில் நடாத்தவுள்ளது. இனவாதத்துக்கு எதிராக -குறிப்பாகத் தெற்கில் வேலைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, இலங்கையில் அனைத்துப் பகுதியிலும் முளைவிட்டுக் கிளர்தெளுந்துள்ள மதவாததுக்கும், ஏற்கனவே ஆழ வேரூன்றியுள்ள சாதியத்துக்கு/ குலவாதத்துக்கு எதிராகவும் தனது வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது .
மீண்டும் கறுப்பு யூலை வேண்டாம் என்று கூறி, தொடரும் கையெழுத்துப் போராட்டம்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
12 Jul 2014
- Hits: 1020
நாடு தழுவி தொடரும் போராட்டம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக நடந்து வருகின்றது. இன-மத வாதத்தை யாரைச் சார்ந்து அரசு முன்னெடுக்கின்றதோ, அந்த மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை சமவுரிமை இயக்கம் குறிப்பாக்கி கூர்மையாக்கி வருகின்றது.
(பொலன்நறுவை)
கேகாலை நகரில் இடம் பெற்ற கையெழுத்து போராட்டம் (படங்கள் இணைப்பு)
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
10 Jul 2014
- Hits: 1079
இனவாதத்தை மக்களிடம் இருந்து அகற்றவும் மாற்று கலாச்சாரங்களை அங்கீகரிக்கவும் சமவுரிமை இயக்கத்தால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் பொதுமக்களை இணைக்கும் முன்முயற்சியே இவ் கையேழுத்து போராட்டம். இதனை பல பகுதிகளில் முன்னெடுத்து வருவதுடன் மேலும் பல பகுதிகளில் நடத்தவும் சமவுரிமை இயக்கம் திட்டமிட்டுள்ளது.
மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!: சமவுரிமை இயக்கம் (படங்கள்)
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
03 Jul 2014
- Hits: 1605
இன்று காலை கொழும்பு, கோட்டை புகையிரத நியைத்திற்கு முன்பாக சமவுரிமை இயக்கத்தினால் "மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!" என்னும் கருப்பொருளுடன், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மக்கள் விழிப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் இனவாதம் மதவாதத்திற்கு எதிராக தமது கண்டனங்களை அங்கு வைத்திருந்த பாரிய பதாகைகளில் தமது கையொப்பங்களை இட்டு பதிந்து சென்றனர். சமவுரிமை இயக்கத்தினால் "இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!" துண்டுப்பிரசுமும் விநியோகிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
வன்முறைகளுக்கு தீர்வுகாண சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல்!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
22 Jun 2014
- Hits: 1300
22.06.2014 இன்று மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் இன வன்முறைக்கு பொருத்தமான தீர்வு ஒன்றை காணும் நோக்கில் சம உரிமை இயக்கத்தினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலான புத்திஜீவிகள், பேராசிரியர்கள், சமூகபற்றாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
02 Jul 2014
- Hits: 1720
எமது நாடு இனவாத, மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜுலை மாதம் -இற்றைக்கு 31 வருடங்களுக்கு முன்னர், அன்றைய ஆட்சியாளர்களாலேயே நடத்தப்பட்ட கறுப்பு ஜுலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். அனாதைகளாகினர். எல்லாவற்றையும் விட எமது சமூக மனச்சாட்சி, பகுத்தறிவு, மனிதநேயம் அனைத்தும் இழக்கப்பட்டது. அந்த பாரிய அழிவின் பின்னர், யுத்தம் முடிந்து விட்டது என ஆறதலடையும் சமயத்தில் மீண்டும் இனவாத- மதவாத பொறியில் சிக்கவைக்க அழுத்கம, பேருவள பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் நாம் கண்டோம். இந்த பொறியை நிர்மாணித்தவர்கள் ஆட்சியாளர்களே மீண்டும் யுத்தத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையில் செல்வது எந்தளவு அழிவைத்தரும் என்பதை அனுபவ வாயிலாக கண்டோம். நாங்கள் அந்த வழியில் மீண்டும் சென்று பொறியில் சிக்க வேண்டுமா?
முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து டென்மார்க்கில் துண்டுப்பிரசுரம்...
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
22 Jun 2014
- Hits: 1092
இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களாலும், அரசினாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனரீதியிலான வன்முறையினை கண்டித்து டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரிலும் அதனை அண்டிய நகர்களிலும் டென்மார்க் சம உரிமை அமைப்பினால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.