Fri05032024

Last updateSun, 19 Apr 2020 8am

மேதின முழக்கங்கள்: சமவுரிமை இயக்கம்

தேசிய ஒடுக்குமுறையினை தோற்கடிக்க சமவுரிமைக்காக போராடுவோம்!

ராணுவவாதத்தினை தோற்கடிப்போம்!.

நவதாராளவாத முதலாளித்துவத்தினை தோற்கடிக்க கடலலை போன்று ஜக்கியப்படுவோம்!

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை அகற்று!

Read more ...

கடத்தல், காணமலாக்கல் மற்றும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்காக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அழுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக போராடுவோம்!

தினக்குரல் பத்திரிகையின் யாழ். வடமாரச்சிக்கான பிரதேச நிருபர் சிவஞானம் செல்வதீபன் கடந்த 14ம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் பருத்தித்துறை மாந்தை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வதீபன் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் செல்வதீபனின் சகோதரர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதற்கு எதிராக குரலெழுப்பியவராகும்.

Read more ...

சமவுரிமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமே!

வெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பல்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக்கோரிக்கையை இணைக்கும் பொதுத்தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.

அதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும.

Read more ...

மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல்

நேற்றைய தினம் லண்டனில் சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் இலங்கையின் மூவினங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான சகல இன மக்களும் ஓரிடத்தில் கூடி அரசியல் குறித்து கலந்துரைடிய நிகழ்வு முன்னர் எப்போதும் சாத்தியமானதாக இருந்ததில்லை. சம உரிமை இயக்கத்தின் ஜரோப்பிய முன்னணி செயற்பாட்டாளர்களான தோழர்கள் நியூட்டன், நுவான் இருவரும் மூவின மக்களும் இணைந்து சகல இனம், மதம் சார்ந்த ஒடுக்கு முறைகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் குறித்தும், இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.

Read more ...

சமவுரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் நிகழ்வு

2009ம்ஆண்டு பேரழிவுக்கு பின்னால் இலங்கையில் தொடருகின்ற அரசியல் நிலவரத்தில், சமவுரிமை இயக்கத்தின் அவசியமும் அதன் தேவையும் குறித்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு உங்களை அழைக்கின்றோம்

இந்நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை (பெப்ரவரி) காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நியூமோல்டனில் நிகழவுள்ளது

Read more ...

"அனைத்து வகைப் பேதங்களையும் எதிர்த்து, ஒன்றிணைந்து போராடுவோம்" டென்மார்க் கூட்டத்தில் தோழர் லோகன் செல்லம் சிறப்புரை

டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் டென்மார்க் சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான தோழர் லோகன் செல்லம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றியிருந்தார். அவரது உரையினை இங்கு வாசகர்களுடன் பகிர்கின்றோம்.

இலங்கையின் பாசிச அரச கட்டுமானத்தாலும், வர்க்கச் சமூகப் போக்கினாலும், ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து மக்களும் இணைந்த விடுதலையில் நின்று.., குறிப்பாக கடந்த ஐந்து தசாப்தங்களாகப் போராடி, தொலைந்துபோன - உயிர்நீர்த்த அனைத்துப் போராளிகளையும், மக்களையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சம உரிமை போராட்ட இயக்கத்தினால், இலங்கையில் மனித உரிமைகளைக் கோரி (14.12.2013) டென்மார்க், கொல்ஸ்ரபுறோ நகரில் இன்று இடம்பெறுகின்ற பொதுக் கூட்டத்தில் சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கை மூலம், இலங்கையின் அரச பாசிசத்தால் அல்லற்படும் அனைத்து மக்களையும், அப்பாசிச வடிவங்களை எதிர்க்கின்ற ஜனநாயகப் போராட்டத்திற்கு உங்களை அழைப்பிடுகின்றது.

Read more ...

"சமவுரிமை இயக்கம்" இன்றைய காலத்தின் தேவை! பாரிஸ் கூட்டத்தில் மனோ.

இனவாதச் சேற்றுக்குள் மூழ்கியுள்ள சமகால இலங்கை அரசியல் சூழ்நிலையில் அதைக் களைந்தெறிய முற்பட்டுள்ள சமவுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு 22-12-ல் பாரிஸில் நடைபெற்ற சமவுரிமை இயக்க நிகழவில் கலந்து கொண்டு பேசிய "ஓசை" மனோ குறிப்பிடட்டுள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள் பற்றி அமெரிக்க மேற்குலக நாடுகள் உட்பட ஏனைய சர்வதேசத்திடமும் சொல்லியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் நலன்களுக்காவே தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசி நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகமும் அதன் தலைமையும் இதுவரை சொல்லாத இடம் சாதாரண சிங்கள மக்களிடம் மட்டுமேயாகும். அம்மக்களின் ஏகப்பெரும்பான்மையோருக்கு தமிழ் மக்கள பிரச்சினைகள் பற்றி சரிவரத் தெரியாது. இவைகளை சரிவர அம்மக்களுக்கு எட்டப்பட வைப்பின் அவர்களே இலங்கையின் சகல இனவாதங்களையும் முறியடிப்பர் எனக்குறிபிட்டார்.

Read more ...

சம உரிமை இயக்கத்தின், சர்வதேச மனித உரிமைகள் தின லண்டன் கூட்ட செய்தி

நேற்றைய தினம் (15/12/2013) சம உரிமை இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மனித உரிமை தின கூட்டம் லண்டன் கரோ பகுதியில் இடம் பெற்றது. சீரற்ற காலநிலை நிலைவிய போதும், அறுபதிற்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் இலங்கையில் இடம்பெற்ற சகல அடக்கு முறைகளிற்கும் எதிராக போராடி மரணித்த போராளிகளிற்கும் பொது மக்களிற்கும் இரு நிமிட மௌன அஞ்கலியுடன் கூட்டம் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து சமஉரிமை இயக்கத்தின் சார்பில் தோiர்கள் சீலனும் நுவானும் முறையே தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றினர்.

Read more ...